மேலும் அறிய

”முத்தையா உணர்வுகளை அழகா காட்டுவாரு..” : ’காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஆர்யா!

"முத்தையா போன்ற இயக்குநர் படங்களில் நடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். உறவுகளின் உணர்வுகளை அழகாக படமாக்குபவர். இப்படத்தில் நான் நடித்ததை எனது அதிர்ஷ்டமாகப் பார்க்கிறேன்" - ஆர்யா

முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ள காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் முன்னதாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் முத்தையா, ஆர்யா, சித்தி இத்னானி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய நடிகை சித்தி இத்னானி, எனது முதல் படமான வெந்து தணிந்தது காடு படத்திற்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி. அதேபோல் இந்த படத்துக்கும் கொடுங்கள்” என்றார்.  அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் ஆர்யா, “முந்தையாவுக்கு நன்றி. கிராமத்து ஆக்சன் கதை நடிக்க ஆசையாக இருந்தது. அதனால் இப்படத்தை நடிக்க சம்மதித்தேன்.

முத்தையா போன்ற இயக்குநர் படங்களில் நடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். உறவுகளின் உணர்வுகளை அழகாக படமாக்குபவர். இப்படத்தில் நான் நடித்ததை எனது அதிர்ஷ்டமாகப் பார்க்கிறேன். இது மாதிரி ஊர் பக்கம் நடக்குமா என நான் நிறைய இடங்களில் கேட்பேன், கதையை மீறி அவர் நிறைய காட்சிகளைப் பகிரும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

கதாநாயகி கதாபாத்திரம் மிகவும் ஆழமாக இருக்கும். என்னைவிட நாயகிக்கு தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர். “என் படத்தில் ஹீரோ கத்தி பேசணும், இல்லனா கத்தில பேசணும்” என்று இயக்குநர் சொன்னார். இரண்டு மாதங்கள் கோவில்பட்டியில் இருந்து படம் எடுத்தோம். நான் மட்டும் அங்கேயே இருந்தேன். 

படத்தில் இருக்கும் உறவு, நன்றிக்கடன் ஆகியவற்றை நான் எங்கள் தயாரிப்பாளர்களிடம் அதிகம் பார்த்துள்ளேன், இந்தப் படத்துக்கு மிக மிக நன்றி. இது ஒரு பரப்பரப்பான டீம்.  ஜிவி‌யிடம் கேட்டேன் நான்தான் இந்தப் படத்தில் ஹீரோ இவ்வளவு ஹெவியா பாட்டு போட்டு இருக்க என்று கேட்டேன். படத்தின் பாடல்கள் தான் முதலில் படப்பிடிப்பு செய்தனர்" எனப் பேசினார்.

முன்னதாக படம் குறித்துப் பேசிய இயக்குநர் முத்தையா, “எனது ஒவ்வொரு படத்திலும் உறவுகளைப் பற்றி சொல்லியுள்ளேன். இதில் உறவுகளிடம் நன்றி இருக்க வேண்டும் என்று சொல்லியுள்ளேன். நன்றி இருந்தால் உறவுகளில் பிரச்சினை இருக்காது என்று சொல்லியுள்ளேன்.

மீண்டும் கொம்பன் படத்துக்கு பிறகு ராமநாதபுரம் படத்தை பற்றி சொல்லியுள்ளேன். கதைக்களம் ராமநாதபுரம் தான். இப்படம் யார் மனதும் புண்படுத்தும் படி இருக்காது.

இதனை நீங்கள் தான் சப்போர்ட் செய்ய வேண்டும். இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் சிறப்பாக செய்துள்ளனர். பிரபுவின் கதாபாத்திரம் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருக்கும். எனக்கு தயாரிப்பாளர்கள் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். படம் நன்றாக வந்துள்ளது" எனப் பேசியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget