மேலும் அறிய

‛வேறு வழியில்லாமல் இங்கு இளையராஜா இசையமைத்துக் கொண்டிருக்கிறார்...’ - ‛அழகி’ அனுபவம் பகிர்ந்த தங்கர்பச்சான்!

‛‛நானும், லெனின் சாரும் போட்டு போட்டு பார்க்குறோம். எப்படி பார்த்தாலும் எங்களுக்கு சிக்கவில்லை. உன் குத்தமா பாடலை அங்கு போட்ட பிறகு தான், அந்த இடத்தில் வேறு உணர்வு வந்தது,’’

ஒளிப்பதிவாளர் என்பதை கடந்து, இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அற்புத படைப்புகளை தந்தவர் என்பதால், என்றும் கொண்டாடப்பட வேண்டியவர் இயக்குனர் தங்கர்பச்சான். தன் நாவல்களை திரைப்படங்களாக உருவாக்கிய தங்கர்பச்சானின் படைப்புகள், அனைத்து தரப்பையும் சென்றடைந்ததோடு, உணர்வோடு கலந்தவையாகவும் அவை இருந்தன. அவரது முதல் படமான 'அழகி'யில் இளையராஜாவின் இசை, பின்னணி பெரிய பலம். அது பற்றி சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு தங்கர்பச்சான் பேட்டியளித்தார். இதோ அந்த பேட்டி...

 

‛வேறு வழியில்லாமல் இங்கு இளையராஜா இசையமைத்துக் கொண்டிருக்கிறார்...’ - ‛அழகி’ அனுபவம் பகிர்ந்த தங்கர்பச்சான்!
ஒளிப்பதிவாளர்-இயக்குனர்-தங்கர்பச்சான்

‛‛இளையராஜாவை சினிமா இசையமைப்பாளராக எல்லோரும் பார்க்கிறீர்கள். வேறு வழியில்லாமல் இதை பண்ணிட்டு இருக்காரு. உலக அரங்கில் அவர் போயிருந்தால், பீத்தேவன் அளவிற்கு கொண்டு சென்றிருப்பார்கள். அவர் ஒரு கடல். யார் என்ன சொன்னாலும், கேட்பதை கொடுத்துக் கொண்டே இருக்காரு. அவரது இசையில் நான் நிறைய படத்தில் கேமரா மேனா வேலை செய்திருக்கேன். எனது முதல் படத்திற்காக அவரிடம் இசைக்க போகும் போது, சிறுகதையா படித்து காட்டினேன். நாவலா படித்து காட்டினேன். அவரிடம் செல்லும் போது தெளிவாக இருக்க வேண்டும் என்பதால் தயாராகவே போனேன். 

பாடலுக்கு தொடர்பான காட்சிகளை நான் எழுத்து வடிவில் இளையராஜாவிடம் எடுத்துச் செல்வேன். எல்லாத்தையும் கேட்பார். அவருக்கு புரிந்துவிடும். அடுத்து ஒரு கோரிக்கை வைத்தேன். நீங்க தான் பாடல் எழுத வேண்டும் என்றேன். ‛எதற்கு பாடலாசிரியர்கள் பிழைப்பில் கை வைக்க வேண்டும்’ என தயங்கினார். நான் அவரை வற்புறுத்தினேன். நீங்கள் ஒரு கிராம பின்னணியில் இருந்து வந்தவர்; உங்களுக்கு அது வேதனை தெரியும். நீங்கள் எழுதினீர்கள் என்றால் சரியாக இருக்கும் என்றேன், அவரும் அதை புரிந்து கொண்டு மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். அப்படி தான் அவர் எனது படத்திற்கு பாடல் எழுதினார். 

நானும், லெனின் சாரும் போட்டு போட்டு பார்க்குறோம். எப்படி பார்த்தாலும் எங்களுக்கு சிக்கவில்லை. உன் குத்தமா பாடலை அங்கு போட்ட பிறகு தான், அந்த இடத்தில் வேறு உணர்வு வந்தது. 

 

‛வேறு வழியில்லாமல் இங்கு இளையராஜா இசையமைத்துக் கொண்டிருக்கிறார்...’ - ‛அழகி’ அனுபவம் பகிர்ந்த தங்கர்பச்சான்!
அழகி திரைப்படத்தின் மறக்க முடியாத காட்சி

சாலையில் வீடில்லாமல், பிச்சைக்காரர்கள் மாதிரியான நிலையில் இருக்கும் ஒரு தொழிலாளர்களுடன், எங்கேயோ எப்படியோ இருக்க வேண்டிய மகனுடன், தேவதை மாதிரி இருக்க வேண்டிய ஒரு பெண் வாழ்கிறாள். அவன் விரும்பியவனும் இல்லை, மணந்தவனும் இல்லை. இந்த நிலையில் இப்போது இருக்கிறாள். இதற்கு யார் காரணம்? யார் செய்த குற்றம் இது? என்று தான், நான் இளையராஜாவிடம் கூறினேன். அவ்வளவு தான்... அவர் ரொம்ப கூர்மையானவர். கேட்டதும், போட்டாரு.... ‛உன் குத்தமா... என் குத்தமா... யாரை நானும் குத்தம் சொல்ல...’. . அவ்வளவு தான், அந்த பாடல் செய்த மந்திரம் வேறுவிதமானது. 

 

‛வேறு வழியில்லாமல் இங்கு இளையராஜா இசையமைத்துக் கொண்டிருக்கிறார்...’ - ‛அழகி’ அனுபவம் பகிர்ந்த தங்கர்பச்சான்!
அழகி படப்பிடிப்பு தளம்

முதல் நாள் சூட்டிங் வந்த நந்திதா தாஸ், அவருக்கு அந்த சூழலே பிடிக்கவில்லை. ‛என்ன தங்கர்... நாம் ஏமாந்துட்டேனோ...’ என்றெல்லாம் கூற ஆரம்பித்துவிட்டார். முதல்நாளே அவர் திரும்பிச் செல்லும் சூழலுக்கு தயாரானார். முதல் காட்சிக்கு நாங்கள் எல்லாம் அவ்வளவு தயாராக இருந்தோம். செயற்கை மழை உருவாக்கி வைத்திருந்தோம். திரைப்பட கல்லூரியில் ஒரு ஓரத்தில் வைத்து தான் அந்த காட்சி எடுத்தேன். ஒரே ரோலில் அந்த பாடலை எடுத்தோம்,’’ என, அந்த பேட்டியில் தங்கர்பச்சான் கூறியிருந்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Embed widget