மேலும் அறிய

Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!

சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் புறநானூறு படத்தின் கதையை பகிர்ந்துள்ளார் இயக்குநர் சுதா கொங்காரா. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுதா கொங்காரா

இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் பாலா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்தான் சூரரை போற்று திரைப்பட இயக்குநர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான துரோகி என்னும் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். விஷ்னு விஷால், ஸ்ரீகாந்த், ஷாம்னா கசிம், பூனம் பஜுவா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள்.

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும் துரோகி படம் வணிக ரீதியாக தோல்விப் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மாதவன் ரித்திகா சிங்கை வைத்து இறுதிச் சுற்று படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தார் சுதா கொங்காரா. ஸ்போர்ட்ஸ் டிராமா என்கிற வகைமையில் இயக்கப்பட்ட இந்தப் படம் பெண்கள் குத்துச்சண்டைப் போட்டியில் எதிர்கொள்ளும் சவால்களை மையமாக கொண்டு எடுக்கப் பட்டது. தமிழைத் தொடர்ந்து இப்படம் இந்தி மற்றும் தெலுங்குவில் ரீமேக் செய்தார்.

சூரரைப் போற்றுவின் பிரம்மாண்ட வெற்றி:

தமிழ் சினிமாவில் குறிப்பிடத் தகுந்த பெண் இயக்குநர்களில்  ஒருவராக கருதப்படும் இயக்குநர் சுதா கொங்காரா ( அப்படி சொல்வது அவருக்கு பிடிக்காதும் கூட) கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கினார். சூரரைப் போற்று  திரைப்படம் மொத்தம் ஐந்து தேசிய விருதுகளை வென்றது.  இதனைத் தொடந்து பாவக் கதைகளில் ஒரு அத்தியாயமான தங்கம் என்கிற கதையை இயக்கினார் சுதா கொங்காரா. சூரரைப் போற்று திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக சூர்யாவுடன் இணைந்துள்ளார் சுதா கொங்காரா.

புறநானூறு படத்தின் கதை

சூர்யாவின் 43 ஆவது படத்தை சுதா கொங்காரா இயக்கவிருப்பதாக கடந்த ஆண்டு தகவல் வெளியானது . இப்படத்திற்கு புறநாநூறு என டைட்டில் அறிவிக்கப் பட்டது. துல்கர் சல்மான் ,விஜய் வர்மா , நஸ்ரியா நஸிம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு சார்பில் தகவல் வெளியானது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கவிருந்த நிலையில் படப்பிடிப்பு தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து இந்த படம் கைவிடப் பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பேசப் பட்டு வருகிறது. இந்நிலையில் புறநாநூறு படத்தின் கதைப் பற்றி பேசியுள்ளார் சுதா கொங்காரா.

தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுதா கொங்காரா, புறநானூறு படம் இந்தி எதிர்ப்பை மையமாக கொண்ட கதை. இது ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு படம்.  என்னுடைய எல்லா படங்களும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான படங்கள் தான். என்னுடைய அடுத்த படம் தமிழில் தான். அது புறநானூறு படமாக இல்லை என்றாலும் வேறு ஒரு தமிழ் படம் தான். “ என்று அவர் தெரிவித்துள்ளார். 

தற்போது நடிகர் சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் அவர் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் புறநானூறு படம் இன்னும் சில காலம் தள்ளிப்போகலாம் என்றும் அதற்கு முன்பாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் உடன் சுதா கொங்காரா தனது அடுத்த படத்தை தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai on EPS :“ஈரோடு இடைத் தேர்தல் சீக்ரெட்” போட்டுடைத்த அண்ணாமலை – அதிர்ச்சியில் ஈபிஎஸ்..!
Annamalai on EPS :“ஈரோடு இடைத் தேர்தல் சீக்ரெட்” போட்டுடைத்த அண்ணாமலை – அதிர்ச்சியில் ஈபிஎஸ்..!
UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!
UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!
தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
Veera Serial Today July 5th: காதலை சொன்ன மாறன்.. வீரா முடிவு என்ன? கண்மணிக்கு காத்திருந்த ஷாக் - வீரா சீரியல் அப்டேட்!
Veera Serial Today July 5th: காதலை சொன்ன மாறன்.. வீரா முடிவு என்ன? கண்மணிக்கு காத்திருந்த ஷாக் - வீரா சீரியல் அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai on EPS :“ஈரோடு இடைத் தேர்தல் சீக்ரெட்” போட்டுடைத்த அண்ணாமலை – அதிர்ச்சியில் ஈபிஎஸ்..!
Annamalai on EPS :“ஈரோடு இடைத் தேர்தல் சீக்ரெட்” போட்டுடைத்த அண்ணாமலை – அதிர்ச்சியில் ஈபிஎஸ்..!
UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!
UK Elections: பிரிட்டன் தேர்தல் முடிவுகள்; மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்! நன்றி தெரிவித்த மோடி!
தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
தூத்துக்குடியில் இளைஞரை கடத்தி கொடூர கொலை! தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - மக்கள் அதிர்ச்சி
Veera Serial Today July 5th: காதலை சொன்ன மாறன்.. வீரா முடிவு என்ன? கண்மணிக்கு காத்திருந்த ஷாக் - வீரா சீரியல் அப்டேட்!
Veera Serial Today July 5th: காதலை சொன்ன மாறன்.. வீரா முடிவு என்ன? கண்மணிக்கு காத்திருந்த ஷாக் - வீரா சீரியல் அப்டேட்!
kanimozhi Supports Vijay : “விஜய்க்கு திமுக எம்.பி. கனிமொழி ஆதரவு” மாறுகிறதா தமிழக அரசியல் களம்..?
kanimozhi Supports Vijay : “விஜய்க்கு திமுக எம்.பி. கனிமொழி ஆதரவு” மாறுகிறதா தமிழக அரசியல் களம்..?
Trichy: பரபரப்பு! திருச்சியில் பிரபல ரவுடி மீது துப்பாக்கிச்சூடு - போலீஸ் சுட்டது ஏன்?
Trichy: பரபரப்பு! திருச்சியில் பிரபல ரவுடி மீது துப்பாக்கிச்சூடு - போலீஸ் சுட்டது ஏன்?
Tirunelveli mayor : “ராஜினாமா செய்த மேயர் சரவணன்” நெல்லையின் புதிய மேயர் யார்..? யாருக்கு ஜாக்பாட்..?
Tirunelveli mayor : “ராஜினாமா செய்த மேயர் சரவணன்” நெல்லையின் புதிய மேயர் யார்..? யாருக்கு ஜாக்பாட்..?
இந்திய வம்சாவளிகளை கவர்ந்து இங்கிலாந்து பிரதமரானார் கெய்ர் ஸ்டார்மர்! யார் இவர்?
இந்திய வம்சாவளிகளை கவர்ந்து இங்கிலாந்து பிரதமரானார் கெய்ர் ஸ்டார்மர்! யார் இவர்?
Embed widget