இளையராஜா - பாக்யராஜ் மோதலுக்கு காரணம் என்ன? ஸ்டூடியோவில் நடந்த பிரச்சினை இதுதான்!
திரைக்கதை மன்னன் பாக்யராஜிற்கும், இசைஞானி இளையராஜாவிற்கும் ஏற்பட்ட மோதலுக்கு காரணம் என்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் பாக்யராஜ். இவரது ஆரம்ப கால படங்களில் இளையராஜா இசையமைத்து வந்தார். பின்னர், பாக்யராஜின் திரைப்படங்களுக்கு அவர் பெரியதாக இசையமைக்கவில்லை.
இளையராஜா - பாக்யராஜிற்கு என்ன பிரச்சினை?
இருவருக்கும் என்ன பிரச்சினை? என்பது குறித்து பாக்யராஜ் ஒரு முறை பேட்டி ஒன்றில் விளக்கமாக கூறியிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
இளையராஜா சின்னவீடு படம் வரைக்கும் பண்ணிக்கொண்டு இருந்தார். என்னுடைய நிறைய படங்களுக்கு பண்ணிக்கொண்டு வந்தார். ஒவ்வொரு படத்தின்போதும் அடுத்து எப்போ? என்று முன்கூட்டியே சொல்லுங்கள் என்பார்.
நான் ஸ்கிரிப்ட் ரெடியாகவும் முன்னாடியே சொல்லிவிடுவேன். அடுத்த ஸ்கிரிப்ட் ரெடியாகிவிட்டது என்பதால் ஸ்டூடியோவிற்கு போகும்போது அவர் உடன் இருக்கும் உதவியாளரிடம், சாரிடம் நான் ரெடி என்று சொல்லுங்கள். எப்போ வேண்டுமானாலும் ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம் என்றேன்.
முடியாது என்ற பாக்யராஜ்:
அவர் சாரை வீட்டிற்குச் சென்று பார்த்துவிடுங்கள் என்றார். நான் இது என்ன புதுசா இருக்குது? வீட்டிற்குச் சென்று பார்க்கச் சொல்கிறீர்கள்? எதுக்கு? என்று கேட்டேன். இல்லை, இல்ல. வீட்டில் சென்று பாருங்கள். எல்லாரும் அப்படித்தான் பார்க்கிறார்கள்.
என்னங்க இது? ஸ்டூடியோவில்தான் எப்போதும் இருப்பார். அதனால் இங்கேதான் பார்க்கிறேன். வீட்டில் தனியாக போய் பார்க்கிறது என்ன? எனக்கு புரியவில்லையே என்றேன். இல்லை, இல்லை எல்லாரும் வந்து பார்க்கிறார்கள் என்றார். வந்துட்டு போனேனு சொல்லுங்க. தேவைப்பட்டா வந்து பாக்குறேன். இதுக்கு முன்னால வேலை பார்க்கலனா கூட பரவாயில்ல. நான் ரெகுலரா வேலை பார்த்துட்டு இருக்கேன். நீங்க சொல்றது புதுசா இருக்குது?
இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் இணைந்த கூட்டணி:
இந்த படத்திற்கு பிறகு பாக்யராஜ் தனது சில படங்களுக்குத் தானே இசையமைத்தார். சின்ன வீடு படத்திற்கு அடுத்து பாக்யராஜ் இயக்கிய எங்க சின்ன ராசாவே படத்திற்கு சங்கர் கணேஷு் இசையமைத்தார். அவர் எழுதிய இது நம்ம ஆளு படத்திற்கு அவரே இசையமைத்தார். அவரது ஆராரோ ஆரிராரோ படத்திற்கு இசையமைத்தார்.
பின்னர், இந்த கூட்டணி மீண்டும் ராசுக்குட்டி படத்தில் இணைந்தது. வீட்ல விசேஷங்க, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ஆகிய படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். சமீபத்தில் பாக்யராஜிற்கு நடந்த திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக நடந்த பாராட்டு விழாவில், இளையராஜா பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.























