மேலும் அறிய

Connect : நயனுடன் மீண்டும் கூட்டணி.. இயக்குநர் கொடுத்த சூப்பர் தகவல்... லாக் டவுன் நிகழ்வுகளால் உருவான 'கனெக்ட்'

கனெக்ட் படத்தின் இயக்குனர் அஷ்வின் சரவணன் இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக நடிகை நயன்தாராவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். நேர்காணலின்போது அவர் பகிர்ந்த ஸ்வாரஸ்யமான தகவல்களை இங்கு காணலாம்.

மாயா, கேம் ஓவர் போன்ற திரில்லர் திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அஷ்வின் சரவணன். 2015 ஆம் ஆண்டு வெளியான மாயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் தனது முதல் படத்தில் பெண்களை மையப்படுத்திய கதையின் மூலம் வெற்றி பெற்றவர். இந்த படம் தான் நடிகை நயன்தாராவும் ஒரு ஹீரோயினை மையமாக வைத்து நடித்த முதல் படம் அதுவாகும். இரண்டாவது முறையாக இயக்குனர் அஷ்வின் சரவணன் மற்றும் நயன்தாரா இணைந்துள்ள திரைப்படம் 'கனெக்ட்'. 

எதையும் யோசிப்பதில்லை :

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் 'கனெக்ட்' திரைப்படம் குறித்த  சில சுவாரஸ்யமான தகவல்களை சரவணன் பகிர்ந்துள்ளார். " நான் படம் எடுக்க துவங்கும் போது எனது முந்தைய படங்களுக்கு பொருத்தமாக இருக்குமா அல்லது ஒரு குறிப்பிட்ட நடிகருக்கு பொருத்தமாக அமையுமா என்பதை பற்றி எல்லாம் யோசிப்பதில்லை. எனது உள்ளுணர்விற்கு ஏற்றபடியே நான் படத்தை நகர்த்துவேன்.

இந்த படத்தின் கதை பற்றி நான் நயன்தாராவிடம் கூறியவுடன் அவர் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். என்னுடைய மற்ற படங்களை விடவும் பிரமாண்டமாக இருக்கும் என்று யோசித்து எல்லாம் இதை தொடங்கவில்லை. படத்தில் சுவாரஸ்யம் சேர்க்கும் விஷயங்களை பற்றி மட்டுமே யோசித்தேன். கொரோனா லாக்டவுன் சமயத்தில் நான் அனுபவித்த சில விஷயங்களை இந்த திரைப்படத்தில் சேர்த்துள்ளேன்" என்றார் அஷ்வின். 

Connect : நயனுடன் மீண்டும் கூட்டணி.. இயக்குநர் கொடுத்த சூப்பர் தகவல்... லாக் டவுன் நிகழ்வுகளால் உருவான 'கனெக்ட்

கிரியேட்டிவிட்டி தான் முக்கியம் :
 
மேலும் அவர் கூறுகையில் " எந்த ஒரு அழுத்தமும் எடுத்து கொள்ளாமல் ஒவ்வொரு படத்தையும் புதிய படம் போலவே நினைத்து அதை எப்படி சுவாரஸ்யமாக, கிரியேட்டிவாக உருவாக்குவது என்பதை மட்டுமே ஆராய்ந்து செய்வது தான் பெரிய சவால். மேலும் நான் பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என யோசிப்பதில்லை. என்னுடைய கதைக்கு பொருந்த கூடிய வகையில் மட்டுமே முடிவு செய்கிறேன்.

லாக்டவுன் சமயத்தில் எதிர்காலத்தை பற்றியும், அந்த நிலைமையில் எனக்கு இருந்த நம்பிக்கையற்ற சூழ்நிலையையும் உணர்ச்சிகளையும் நான் எப்படி எதிர்கொண்டேன் என்பதை ஒரு திரைப்படமாக உருவாக்க வேண்டும் என நினைத்தேன். உணர்ச்சிகளை வெளிப்படுத்த தகுந்த ஜானர் திகில் திரைப்படங்கள் என்பதை உணர்ந்ததால் தான் இப்படத்தை உருவாக்கினேன் என அவர் கூறியுள்ளார்.  


அனுபவசாலிகள் என்னுடன் கூட்டணி :

கனெக்ட் திரைப்படத்தில் அனுபவமிக்க நடிகர்களான அனுபம் கெர், சத்யராஜ் உள்ளிட்டவர்கள் நடித்தது ஒரு பெரிய பாக்கியமாக இருந்தது. திகில் திரைப்படங்களை ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள். மாயா திரைப்படத்திற்காக நடிகை நயன்தாராவை முதலில் சந்தித்தபோது எனது அனுபவம் குறித்து கேட்கவில்லை. படத்தின் கதையை கேட்ட பின்னர் உடனே ஒத்துக்கொண்டார். முதலில் நான் நயன்தாரா மாயா படத்திற்கு ஒப்புதல் அளிக்கமாட்டார் என நினைத்தேன் ஆனால் அதற்கு மாறாக அவர் ஒத்துக் கொண்டு சிறப்பாக நடித்தும் கொடுத்தார். நீங்கள்  யாரு என்ன என்பதை பற்றி எல்லாம் கவலை கொள்ள தேவை இல்லை. படத்தின் ஸ்கிரிப்ட் சரியாக இருந்தால் நிச்சயம் ரசிகர்கள் அதை விரும்புவார்கள் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்" என்றார் அஷ்வின் சரவணன். 
 

நயனோடு இரண்டாவது படம் :

நடிகை நயன்தாரா ஒரு தயாரிப்பாளராகவும் இருப்பதால் அவருடன் பணிபுரிவது எளிதாக இருந்தது. மிகவும் ஒத்துழைப்போடும், அக்கறையோடும் நடித்து கொடுத்தார். இப்படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களிலேயே நடத்தி முடிக்கப்பட்டது. பார்வையாளர்களை கவர வைக்கும் வகையில் பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் அவருடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்ததற்கான காரணம் என்றார் இயக்குனர் அஷ்வின்  சரவணன். இப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Embed widget