மேலும் அறிய

Actor Vishal: ’நீதிமன்றத்தை விட நீங்கள் ஒன்றும் பெரிய ஆள் இல்லை’ விஷாலை கண்டித்த உயர்நீதிமன்ற நீதிபதி

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டும் ஆவணங்களை சமர்ப்பிக்காத நடிகர் விஷாலை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. 

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், உத்தரவிட்டும் ஆவணங்களை சமர்பிக்காத நடிகர் விஷாலை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. 

கடன்தொகை:

நடிகர் விஷால் சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் அவர் பட தயாரிப்புக்காக, பிரபல பைனான்சியர் அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21.29 கோடி கடன் பெற்றிருந்தார். இதற்கிடையில் லைகா நிறுவனம் விஷாலுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துக் கொண்டு  கடன் தொகை முழுமையாக  லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. 

சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தில், “கடன் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தில் வெளியாகும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவேன்” என உத்தரவாதம் வழங்கப்பட்டது. இதனிடையே விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான "வீரமே வாகை சூடும்" படம் வெளியானது.  லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகையை தராமல் இந்த படத்தை ரிலீஸ் செய்யவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை கேட்டும் லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

விஷாலின் வங்கிக்கணக்குகள்:

இதனை விசாரித்த தனி நீதிபதி உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் ரூ.15 கோடியை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து விஷால் தரப்பு மேல்முறையீடு செய்ய, இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தனர். மேலும் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்குகள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளை தனி நீதிபதி எழுப்பினார். தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வரையிலான விஷாலின் வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனை விவரங்களையும், சொத்து ஆவணங்களையும்  தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

விஷாலுக்கு கண்டிப்பு:

ஆனால் இந்த வழக்கு செப்டம்பர் 19 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது விஷால் தரப்பு ஆஜராகவில்லை. மேலும் நீதிபதி சமர்பிக்கக்கோரிய ஆவணங்களும் அளிக்கப்படவில்லை. இதனையடுத்து செப்டம்பர் 22 ஆம் தேதி சம்பந்தப்பட்ட ஆவணங்களோடு விஷால் ஆஜராகுமாறு நீதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் இன்றும் விஷால் ஆஜரானார், அதேசமயம் ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. 
 
இதனால் கடுப்பான நீதிபதி, ‘நீதிமன்றத்தை விட தன்னை பெரிய ஆள் என எண்ண வேண்டாம். இங்கு அனைவரும் சமம்’ என விஷாலை கண்டித்ததோடு, உங்கள் மேல் ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என கேள்வி எழுப்பினார். ஆனால் வங்கியில் இருந்து ஆவணங்கள் கிடைக்கப்பெற காலதாமதம் ஆகி விட்டதாகவும், 6 நாட்கள் அவகாசம் வேண்டும் எனவும் விஷால் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Sivakarthikeyan : பலபேரோட ரத்தமும் வியர்வையும் இருக்கு...விஜய்க்கு ஆதரவாக வந்த சிவகார்த்திகேயன்
Sivakarthikeyan : பலபேரோட ரத்தமும் வியர்வையும் இருக்கு...விஜய்க்கு ஆதரவாக வந்த சிவகார்த்திகேயன்
JanaNayagan : பலரின் கனவுகள் சிதைக்கப்பட்டிருக்கிறது..தயாரிப்பாளர் ஆதங்கம்
JanaNayagan : பலரின் கனவுகள் சிதைக்கப்பட்டிருக்கிறது..தயாரிப்பாளர் ஆதங்கம்
LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
Jananayagan Vijay : இணையத்தில் வெளியான ஜனநாயகன்.! ஷாக்கான விஜய்- படக்குழு சொன்ன முக்கிய அறிவிப்பு
இணையத்தில் வெளியான ஜனநாயகன்.! ஷாக்கான விஜய்- படக்குழு சொன்ன முக்கிய அறிவிப்பு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83%% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03%% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38%% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?
Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?
மெட்ரோ ரயிலில் பயணித்த ஸ்டாலின்.! போட்டி போட்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பயணிகள்
மெட்ரோ ரயிலில் பயணித்த ஸ்டாலின்.! போட்டி போட்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பயணிகள்
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
Top 10 News Headlines: மும்மொழிக்கொள்கைக்கு அரசு கெடு, சென்னையில் 419 வேட்பாளர்கள், நாசா அப்டேட் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மும்மொழிக்கொள்கைக்கு அரசு கெடு, சென்னையில் 419 வேட்பாளர்கள், நாசா அப்டேட் - 11 மணி வரை இன்று
EPS election campaign : அதிமுக ஆட்சி வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சா முழுவதுமாக ஒழிக்கப்படும்.! அடித்து சொன்ன எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சி வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சா முழுவதுமாக ஒழிக்கப்படும்.! அடித்து சொன்ன எடப்பாடி பழனிசாமி
Embed widget