மேலும் அறிய

S.J.Suryah: 'சம்பாதித்த பணத்தையெல்லாம் சினிமாவிலேயே இழந்தேன்’ .. வேதனையுடன் பேசிய எஸ்.ஜே.சூர்யா..!

அமிதாப்பச்சனை வைத்து எடுத்த படம் நின்றுபோனது. அந்த வலியில் இருப்பதாக பொம்மை படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். 

அமிதாப்பச்சனை வைத்து எடுத்த படம் நின்றுபோனது. அந்த வலியில் இருப்பதாக பொம்மை படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். 

தமிழில் அபியும், நானும், மொழி, பயணம், காற்றின் மொழி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் அடுத்ததாக ‘பொம்மை’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், சாந்தினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  மான்ஸ்டர் படத்திற்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளதால் படத்திற்கு பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வரும் ஜூன் 16 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது. 

இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, “ பொம்மை படம் ரொம்ப நல்லா வந்துருக்குது. இயக்குநர் ராதாமோகன் இந்த கதையை சொல்லும்போது ரொம்ப பிடித்திருந்தது. பாலுமகேந்திரா, மகேந்திரன் படங்களில் இயற்கையான நடிப்பு என்பது இதில் வெளிப்படும். பிரியா பவானி ஷங்கர் நிறைய படம் நடித்திருந்தாலும் இந்த படத்தில் ஸ்பெஷலான நடிப்பு என்பது வெளிப்பட்டுள்ளது. நடிகை சாந்தினி இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் அவரின் கேரக்டரும் அழகாக வந்துள்ளது. 

நான் ஒரு 4,5 நாட்களாக தூங்கவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு எனது குடும்ப உறுப்பினர்களை கூட அழைக்க முடியவில்லை. பொம்மை  எனக்கு முக்கியமான படம். நான் துணை நடிகராக என் சினிமா வாழ்க்கையை தொடங்கினேன். பின்னர் பிளான் போட்டு இயக்குநராகி சம்பாதித்து அதன்பின் அந்த பணத்தை தயாரிப்பாளராக சினிமாவில் போட்டேன். நியூ, அன்பே ஆரூயிரே படத்தை தொடர்ந்து அடுத்த வந்த படங்கள் சரியாக போகாமல் அடிபட்டு, குழிக்குள் விழுந்தேன். திருப்பி அங்கிருந்து எழுந்து இசை என்ற படம் பண்ணி தரையில் வந்து உட்கார்ந்தேன். 

அதன்பிறகு கார்த்திக் சுப்புராஜ் அருளால் ஆரம்பித்த 2வது இன்னிங்ஸில் சம்பாதித்த பிறகு, மீண்டும் தயாரிப்பு வேண்டாம் என நினைத்தேன். ஆனால் ராதாமோகன் கதை சொன்ன மாத்திரத்தில் படம் தயாரிக்க ஒப்புக் கொண்டேன். காரணம் அமிதாப்பச்சனை வைத்து எடுத்த படம் நின்றுபோனது. அந்த வலியில் நான் இருந்தேன். நான் வந்த பணத்தையெல்லாம் மீண்டும் மீண்டும் சினிமாவுக்குள் தான் முதலீடு செய்கிறேன். மக்கள் ஆதரவு அளித்தால் நான் வைத்திருக்கும் பல திட்டங்களை எடுப்பதற்கு உதவிகரமாக இருக்கும்” என தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget