![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
watch video : 43 வயதில் தாயாகும் நடிகை பிபாஷாபாசு ! பிரம்மாண்டமாக நடைபெற்ற வளைகாப்பு! ரசிகர்கள் வாழ்த்து
பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவின் வளைகாப்பு சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
![watch video : 43 வயதில் தாயாகும் நடிகை பிபாஷாபாசு ! பிரம்மாண்டமாக நடைபெற்ற வளைகாப்பு! ரசிகர்கள் வாழ்த்து Bipasha Basu and Karan Singh Grover celebrate second baby shower, wish for 'happy and healthy baby'. See pics watch video : 43 வயதில் தாயாகும் நடிகை பிபாஷாபாசு ! பிரம்மாண்டமாக நடைபெற்ற வளைகாப்பு! ரசிகர்கள் வாழ்த்து](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/24/3058abac7b2ea3a18141f974d49c0d901664007079206224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவும் நடிகர் கரண் சிங் குரோவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து 6 வருடங்களை கழிந்துள்ள நிலையில், நடிகை பிபாசு பாடு தனது 43வது வயதில் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
View this post on Instagram
தற்போது நிறைமாத கர்பிணியாக இருக்கும் பிபாஷா பாசு தனது கணவர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சூழ வளைக்காப்பு நடத்திய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அவை, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலர் ஏற்பாடுகள் மற்றும் இளஞ்சிவப்பு மற்றும் ஊதா பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சுவரின் முன்பு இளஞ்சிவப்பு கவுனுடன் பிபாஷா தனது மகிழ்ச்சியான வளைக்காபினை கொண்டாடியுள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை பகிர்ந்தவர் “லிட்டில் மங்கி ஆன் தி வே” என தெரிவித்திருந்தார். முன்னதாக வீடில் பிங் நிற புடவையில் எளிமையாக அம்மாவின் அன்புடன் நடிகை வளைக்காப்பு நடத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
பிபாஷா பாசு தான் பெண் குழந்தையை அதிகமாக விரும்புவதாகவும் , தனக்கு பெண் குழந்தைதான் வேண்டும் என பிரபல ஆங்கில நாளிதழின் பேட்டியில் தெரிவித்திருந்தார். முன்னதாக தனது ரசிகர்களுக்கு தான் கர்ப்பிணியாக இருப்பதை அறிவித்த பிபாசு பாசு “ புதிய நேரம், புதிய கட்டம், புதிய ஒளி எங்களுடைய வாழ்விற்கு தனித்துவமான ஷேடை கொடுத்திருக்கிறது. முன்பு இருந்ததை விட கொஞ்சம் முழுமையாக உணர்கிறோம். நாங்கள் இந்த வாழ்க்கையைத் தனித்தனியாகத் தொடங்கினோம். பின்னர் ஒருவரையொருவர் சந்தித்தோம். நாம் இருவர் மட்டுமே பகிர்ந்து கொண்ட அன்பு பார்ப்பதற்கே கொஞ்சம் அநியாயமாகத் தோன்றியது. இருவராக இருந்த நாங்க மூவராகப்போகிறோம் “ என கூறியிருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)