Bigg Boss 6 Tamil : வெளியேறிய ஜிபிமுத்து.. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபல வில்லன்.. எகிறும் எதிர்பார்ப்பு..!
பிக்பாஸ் நிகழ்ச்சியால் கிடைக்கும் பணம், புகழை விட தன் மகன் முக்கியம் என்றும், நான் குடும்பத்தை பிரிந்து இத்தனை நாள் இருந்தது இல்ல. அதனால நான் போயே ஆகணும் என கமலிடம் உறுதியாக ஜி.பி.முத்து சொன்னார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்துவுக்கு பதிலாக பிரபல வில்லன் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. இதில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம், விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் முதல் போட்டியாளராக பங்கேற்று முதல் வாரம் நல்ல ஆக்டிவ் ஆக இருந்த ஜிபி முத்து இந்த வாரம் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக தன்னால் உள்ளே இருக்க முடியவில்லை என்றும், வீட்டில் இருப்பவர்களை தேடுவதாகவும், மகன் விஷ்ணுவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தான் வெளியேற வேண்டும் என தெரிவித்தார். அவரிடம் பிக்பாஸ், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித பிரயோஜனமும் இல்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியால் கிடைக்கும் பணம், புகழை விட தன் மகன்தான் முக்கியம் என்றும், அவன் என்னை ஒவ்வொரு நிமிடமும் தேடுவான். நான் குடும்பத்தை பிரிந்து இத்தனை நாள் இருந்தது இல்ல. அதனால நான் போயே ஆகணும் என கமலிடம் உறுதியாக சொன்னார். இதனால் ஜி.பி.முத்துவின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் வெளியே செல்ல அனுமதிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
இதனை சக போட்டியாளர்களிடம் கமல் சொன்ன போது முதலில் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் பணத்தை விட பாசம் தான் பெரிது என ஜி.பி.முத்து சொன்னதாக கமல் சொல்ல சக போட்டியாளர்கள், ரசிகர்கள் ஆகியோர் அவரை பாராட்டியுள்ளனர். முத்து இல்லாவிட்டால் பிக்பாஸ் நிகழ்ச்சி கலகலப்பாக செல்லாதே என ஏங்கிய ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் கிடைத்துள்ளது. அவருக்கு பதிலாக பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகானிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிரடியாக பேசக்கூடிய மன்சூர் அலிகான் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிச்சயம் எண்டெர்டெயின்மெண்ட் உறுதி என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் சில வாரங்களுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜூ வுட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற மன்சூர் அலிகானிடம் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டால் போவீர்களா என கேட்டார். உடனே மன்சூர் அலிகான், சத்தியமா தான் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியே பார்த்தது இல்லை. எத்தனை மணிக்கு இந்த ஷோ வருது என கேட்டது குறிப்பிடத்தக்கது.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
ட்ரெண்டிங் செய்திகள்





















