மேலும் அறிய

Vichitra: “அங்க எல்லாமே தப்பு தப்பா நடந்துச்சு” - பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விசித்ரா காட்டம்!

Bigg Boss 7 Tamil Vichitra: ”பிக்பாஸ் டைட்டில் வின்னர் பைனலில் டாப் 5இல் வரவேண்டும் என்று நான் நினைத்து இருந்தேன். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது நான் ரொம்ப அப்செட் ஆகினேன்” - விசித்ரா

Bigg Boss 7 Tamil Vichitra: ரசிகர்களிடம் லைவில் பேசிய நடிகை விசித்ரா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பினாலேவில் பங்கேற்காததை நினைத்து வருத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 
 
விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 96 நாட்களை கடந்துள்ளது. முந்தைய ஆறு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரண்டு வீடுகள், டபுள் எவிக்‌ஷன், மிட்வீக் எவிக்‌ஷன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, அடுத்தடுத்த எலிமினேஷன்ஸ், பல்வேறு டாஸ்குகள் என முற்றிலும் மாறுப்பட்டதாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி உள்ளது. 
 
பிக்பாஸ் வீட்டில் இருந்து ரூ.16 லட்சம் பணப்பெட்டியுடன் பூர்ணிமா வெளியேறிய நிலையில் பிக்பாஸ் வீட்டில் விசித்ரா, மாயா, அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், மணி மற்றும் விஜய் வர்மா இருந்தனர். அவர்களில் விசித்ரா நேற்று வெளியேறினார். விசித்ரா பிக்பாஸ் டைட்டில் வின்னர் பைனலுக்கு செல்வார் என்று நினைத்த நிலையில், அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது அவரது ஃபேன்பேஸ்க்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
 
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த விசித்ரா சமூக வலைதளங்களில் லைவில் பேசியுள்ளார். அப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய விசித்ரா, “டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. டிக்கெட் டூ பினாலே டாஸ்குக்கு முன்னாடி ஸ்டோரி சொன்னாங்க. அதில் எனக்கு 3 சதவீத வாக்குகள் தான் இருந்தது. அதனால் எனக்கு 3 சதவீத மக்களின் ஆதரவு தான் இருந்ததா என்று தோன்றியது. ஆனாலும் சிலர் வைத்திருந்த நம்பிக்கையால் விளையாடினேன். 
 
பைனல் ரவுண்டில் நான் வின் பண்ணவில்லை என்று சிலர் கவலையடைந்தனர். என்னை சிலர் வாழ்த்தி இருக்கிறார்கள், என்னை அதிகமாக பிடித்தவர்கள் குடும்பப் பெண்களும், குழந்தைகளுமாக தான் அதிகம் இருந்துள்ளனர். இந்த 3 சதவீத மக்கள் என் மீது நம்பிக்கை வைத்திருந்ததால் நான் பெஸ்ட் ஆக இருக்கணும்னு நினைத்தேன். மீடியாவில் எனக்கு அதிகமான வரவேற்பு இல்லை. 
 
இதனால் பிக்பாஸ் டைட்டில் வின்னர் பைனலில் டாப் 5-ல் வரவேண்டும் என்று நான் நினைத்து இருந்தேன். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும்போது நான் ரொம்ப அப்செட் ஆகினேன். 100 சதவீதம் என்னால் மக்கள் நினைத்ததை செய்யவில்லை என்று வருந்தினேன். நிறைய பேர் நான் டென்ஷனாக இருந்ததற்கு வருத்தப்பட்டார்கள். அந்த நாள் அங்கே எல்லாமே தப்பு தப்பாக நடந்தது. அதிகமாக வெற்றி பெற்றது நான் தான். ஆனால் நான் எப்படி பினாலேவை விட்டேன் என்று நினைத்தால் இப்போது வரை வருத்தமாக உள்ளது” என பேசியுள்ளார். 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Embed widget