Prithviraj | பொழுதுபோக்கு.. த்ரில்லர்.. பிரேமம் இயக்குநரின் படம் குறித்து வாய்திறந்த பிரித்திவிராஜ்!
அல்ஃபோன்ஸ் புத்ரன் படமென்றாலே மலையாள திரையுலகில் ஓர் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

அல்ஃபோன்ஸ் புத்ரன் படமென்றாலே மலையாள திரையுலகில் ஓர் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.
அதுவும், அந்தப் படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் என்றால் எதிர்பார்ப்பு எக்ஸ்ட்ரா மைல் செல்லும் தானே. ஆம் கோல்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைபடத்தில் பிருத்விராஜ் நாயகனாக நடிக்கிறார்.
பிருத்விராஜ் இது குறித்து, நான் கோல்ட் திரைப்பட படப்பிடிப்பில் இருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் இருந்துதான் இதைச் சொல்கிறேன். இந்தப் படத்தில் நான் இணைத் தயாரிப்பாளராக இருக்கிறேன். கோல்ட், முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு த்ரில்லர் திரைப்படம். ஒரு நடிகராக இந்தப் படத்தில் பணியாற்றுவது எனக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. இப்படியொரு படத்தில் நானும் இருப்பது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. நான், நயன்தாரா இன்னும் சிலர் என மொத்தம் 50 பேர் இத்திரைப்படத்தில் இருக்கிறோம். அல்ஃபோன்ஸ் புத்ரன் படமாயிற்றே! சொல்லவா வேண்டும். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த த்ரில்லர் திரைப்படம் நேரம் திரைப்படத்தைப் போல் உங்களை ரசிக்க வைக்கும். நான் பட வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்று கூறினார்.

பிருத்விராஜ் இதற்கு முன்னதாக 2019ல் நடத்த படம் ட்ரைவிங் லைசன்ஸ். இத்திரைப்படம் விரைவில் இந்தியில் ரீமேக் செய்யப்படும் என்றும் பிருத்விராஜ் கூறினார்.
அல்ஃபோன்ஸ் புத்ரன், நேரம், பிரேமம் திரைப்படங்களால் மலையாளம், தமிழ் என இரண்டு திரைத்துறையிலும் ரொம்பவே ஃபேமஸ்.
தனது நண்பர் நிவின் பாலி, சாய் பல்லவி கூட்டணியில் பிரேமம் படத்தை இயக்கினார் அல்ஃபோன்ஸ் புத்ரன். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட். என்றாலும் கூட ஆறு வருடங்களாக அல்ஃபோன்ஸ் புத்ரன் எந்தவொரு திரைப்படத்தையும் இயக்கவில்லை.
அல்ஃபோன்ஸ் புத்ரன் ஏன் படம் இயக்கவில்லை என கேள்விகள் எழுந்த நிலையில் அவரே தனது ஃபேஸ்புக்கில் ஒரு விளக்கத்தை போஸ்ட் செய்தார். விரைவில் ஒரு படம் இயக்கவிருப்பதாகவும், ஹீரோ நிவின் பாலி இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் நேரம், பிரேமம் போல் அல்லாமல் அந்தத் திரைப்படம் இருக்கும் என்றார். அதன்பின்னர் பிருத்விராஜ், நயன்தாரா இயக்கத்தில் பாட்டு எனப் பெயரிடப்பட்ட படத்தை அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்குவதாக தகவல் வெளியானது. ஆனால், இடையில் அந்தப் படம் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து கோல்ட் என்ற திரைப்படத்தில் நடிப்பதாக பிருத்விராஜ் தெரிவித்திருக்கிறார்.
பிருத்விராஜ், மோகன்லாலை வைத்து ப்ரோ டேடி என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். இந்தத் திரைப்படம் முடிவடைந்த நிலையில் தற்போது அல்ஃபோன்ஸ் புத்திரனின் கோல்ட் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















