பங்களாவை விட்டு வாடகை வீட்டிற்கு மாறும் ராதிகா சரத்குமார்..? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க !
பல கோடி மதிப்புள்ள தங்களது பங்களாவை விட்டு நடிகை ராதிகா மற்றும் அவரது கணவர் சரத்குமார் வாடகை வீட்டிற்கு குடியேறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களாக ஜொலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் நடிகை ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார். அண்மையில் இருவரும் தங்களது 25 ஆவது திருமண நாளை கொண்டாடினார்கள். ஒருபக்கம் அரசியல் இன்னொரு பக்கம் சினிமா என இன்றும் பயங்கர பிஸியாகவும் ரசிகர்களை கவர்ந்த பிரபலங்களாகவும் இருந்து வருகிறார்கள். பல்வேறு படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார் சரத்குமார். இன்னொரு பக்கம் ராதிகா நீண்ட நாட்களுக்கு நடித்துள்ள தாய்கிழவி திரைப்படம் பிப்ரவரி 27 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த தம்பதிகளைப் பற்றிய தகவல் ஒன்று தற்போது வைரலாக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது
வாடகை வீட்டிற்கு குடியேறும் ராதிகா , சரத்குமார் !
சுமார் 500 கோடி மதிப்புள்ள பிரமாண்ட ஆடம்பர பங்களா வீட்டை விட்டு வாடகை வீட்டுக்கு நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா தம்பதி குடியேறியுள்ளதாக இந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. "14,000 முதல் 15,000 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டிற்கு குறைந்தது 15 வேலைக்காரர்கள் தேவைப்படுவதாலும், வீட்டின் 7 கதவுகளையும் மூடுவது, திறப்பது என பல வேலைகள் இருப்பதாலும் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அண்மையில் நடிகை ராதிகாவின் அண்ணை உயிரிழந்தார் . தனது அண்ணையின் மறைவுக்குப் பின் தான் மொத்தமாக உடைந்துவிட்டதாகவும் அப்போது தன்னையும் தனது குடும்பத்தினர் அனைவரையும் சரத்குமார் தான் பார்த்துக்கொண்டதாக பேட்டி ஒன்றில் பேசிய போது ராதிகா தெரிவித்திருந்தார். தற்போது பெரிய வீட்டை விட்டு சின்ன வீட்டிற்கு அவர் மாறுவதற்கான காரணமும் இதுவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது
தாய்கிழவி ரிலீஸ் ஒத்திவைப்பு
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள தாய்கிழவி படத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மேரியன், முத்துக்குமார், ரைச்சல் ரபேக்கா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 75 வயதுடைய மூதாட்டியை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்த நிலையில் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாக இருந்தது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது























