பக்கா தமிழ் பொண்ணு.. எனக்கு பிடிச்சது ரசமும், தயிர் சாதமும்.. ஜாலி பேட்டி கொடுத்த ப்ரியங்கா மோகன்
அன்பா, மரியாதை கொடுக்குற , ஃபீலிங்ஸை மதிக்குற பையனா இருந்தாபோதும்..

தமிழ் திரையுலகில் முதல் படம் மூலமாக அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் அசத்தலாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது சிவகார்த்திகேயனுடன் டான் படத்திலும் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள டான் திரைப்படம் வருகிற மே மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அந்த படத்தை நெல்சன் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
பொறியியல் பட்டதாரியான நடிகை பிரியங்கா மோகன் தனது சினிமா கெரியர் மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார். “நான் பெங்களூரில்தான் பிறந்து வளர்ந்தேன் ஆனால் தமிழ் பொண்ணுதான். என்னை பற்றி நிறைய மீம் வீடியோக்களை பார்க்க முடிஞ்சுது. அதெல்லாம் நான் வேணும்னே சொன்னது கிடையாது. அதெல்லாம் உண்மை. நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத கேள்விகள்தானே . அந்த பதில் அப்படி அமைஞ்சுடுது. நான் தமிழ் படங்களில் நடிப்பேன்னு எதிர்பார்க்கவே இல்லை. அதெல்லாம் ஆசிர்வாதம்” என்றார்
View this post on Instagram
நடக்கணும்னு இருக்குறது நடக்கும். எனக்கு ரசம் , தயிர்சாதம் பிடிக்கும். சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் பொழுது ஜாலியாக இருக்கும். அவர் ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பார். நான் அதிகமா அனிருத்துடன் படம் பண்ணியிருக்கேன். அனிருத் ரொம்ப அமைதியான ஆளுங்க.
எப்படிப்பட்ட பையனை கல்யாணம் பண்ணிப்பீங்கன்னு கேட்டதுக்கு, எனக்கு அன்பான, மரியாதை கொடுக்குற , ஃபீலிங்ஸை மதிக்குற பையனா இருந்தா போதும்.. நான் கல்யாணம் பண்ணிப்பேன்“ என தெரிவித்துள்ளார் பிரியங்கா மோகன்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















