மேலும் அறிய

Actress Kavitha: “உன்னை எம்.எல்.ஏ., ஆக்குறேன்” .. ஏமாற்றிய சந்திரபாபு நாயுடு.. நடிகை கவிதா சொன்ன அதிர்ச்சி தகவல்

நானும், ஜெயசுதாவும் காங்கிரஸில் சேர்ந்து விட்டதாக  யாரோ சந்திரபாபு நாயுடுவிடம் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு அப்போது அரசியலே தெரியாது.

எம்.எல்.ஏ., சீட்டு கொடுப்பதாக சொல்லி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஏமாற்றிய சம்பவத்தை நடிகை கவிதா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

அந்த நேர்காணலில் பேசும் கவிதா, “நானும், ஜெயசுதாவும் காங்கிரஸில் சேர்ந்து விட்டதாக  யாரோ சந்திரபாபு நாயுடுவிடம் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு அப்போது அரசியலே தெரியாது. ஆனால் ராமராவ் இருக்கும்போதே தெலுங்கு தேசம் கட்சியில் உறுப்பினராக சேர்ந்துவிட்டார். அது எப்படி காங்கிரஸில் சேர்வார் என கூறி என்னை அழைத்து வர சொன்னார். என் வீட்டுக்கு 4,5 எம்.எல்.ஏ.,க்கள் வந்து சந்திரபாபு நாயுடு சந்திக்க வேண்டும் என சொல்லி நடந்ததை தெரிவித்தார்கள். ஆனால் என் கணவர், ‘யார் அப்படி சொன்னது? என கேட்டார். ஆனால் எம்.எல்.ஏ.,க்கள் சொன்னதற்காக நான் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன். 

நான் ஹீரோயினாக சென்னையில் இருக்கும்போது சந்திரபாபு நாயுடு என் பக்கத்து வீட்டில் இருந்ததால் கிட்டதட்ட 40 ஆண்டுகளாக இரண்டு குடும்பத்துக்கு நல்லுறவு இருந்தது. அப்போது என்னிடம், ‘காங்கிரஸ் கட்சிக்கு எப்படி போவீர்கள்?’ என கேட்டார். உடனே நான், ‘நான் எந்த கட்சியிலும் இல்லை. எனக்கு எதுவும் வேண்டாம்’ என கூறினேன். அவரோ, தெலுங்கு தேசம் கட்சியில் நீங்கள் இருக்க வேண்டும். எம்.எல்.ஏ., சீட்டு கொடுக்கிறேன். பெண் பிரபலம் மற்றும் நீங்கள் சார்ந்திருக்கும் சமூகம் என அனைத்தையும் நான் ஆதரித்தது போல இருக்கும் என சந்திரபாபு நாயுடு சொன்னார். 

என் கணவர் அந்த வாய்ப்பை மறுத்து விட்டார். ஆனால் கவிதா நல்ல திறமையானவர், நான் பார்த்துக் கொள்கிறேன் என உறுதியளித்து எம்.எல்.ஏ.வாக மாற்றுகிறேன் என சொன்னதால் மறுநாள் நான் தெலுங்குதேசம் கட்சியில் இணைந்தேன். அப்போது ஆந்திரா, தெலுங்கானா  இரண்டு ஒன்றாக இருந்தது. என்னை விசாகப்பட்டினம் தெற்கில் வேட்பாளராக நிறுத்தினார். அங்கே போய் வீடு, ஆபீஸ் எல்லாம் எடுத்து நிறைய பணம் செலவழித்தேன். என் கணவர் மதுரை மாவட்டத்தில் காண்ட்ராக்டில் சம்பாதித்த பணம் எல்லாம் செலவழித்தேன். 

வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற இடத்தில் நானும், சந்திரபாபு நாயுடுவும் உட்கார்ந்திருந்தேன். அப்போது அங்கு வந்த விசாகப்பட்டினம் எம்.பி., வந்து ஏதோ சொன்னார். என்னை 5 நிமிடம் வெளியே காத்திருக்க சொன்னார். நான் என்னால் முடியாது என சொல்லிவிட்டேன். நான் போகிறேன் என சொல்லிவிட்டேன். நீங்கள் எனக்கு எம்.எல்.ஏ. சீட் தர மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். நான் போறேன்னு சொல்லிட்டு அரசியலுக்கு குட் பை சொன்னேன்.

நான் திரும்பவும் 2018 ஆம் ஆண்டு பாஜகவில் இருந்தேன். பிரதமர் மோடி மீதான ஈர்ப்பால் மறைமுகமாக சப்போர்ட் செய்ய நினைத்தேனே தவிர நேரடியாக களம் காண நினைக்கவில்லை” என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Embed widget