மேலும் அறிய

Suriya: 10க்கு 10 அறை முதல் முதல் பிரமாண்ட அலுவலகம் வரை; நடிகர் சூர்யா அகரம் குறித்து நெகிழ்ச்சி!

சென்னை தியாகராய நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகரம் ஃபவுண்டேஷன் புதிய அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் அகரம் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். அகரம் ஃபவுண்டேஷன் மூலமாக ஏழை மாணவ, மாணவிகளின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். இந்த நிலையில் தான் ,சென்னை தியாகராய நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகரம் ஃபவுண்டேஷன் புதிய அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசினார். 

இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த விழாவில் இயக்குநர் டி ஜே  ஞானவேலுவும் கலந்து கொண்டார். "அப்போது பேசிய சூர்யா கூறியிருப்பதாவது...  2006 ஆம் ஆண்டு விதைக்கப்பட்ட விதை தான் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. எனக்கு அன்பும், ஆதரவும் அளித்து வரும் மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காக தொடங்கப்பட்டது தான் அகரம் ஃபவுண்டேஷன். ஆரம்பத்தில் ஒரு சிறிய அறையில் தொடங்கப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்களால் பணம் கொடுக்க முடியவில்லை என்ற காரணத்திற்காக முதல் தலைமுறை மாணவர்களின் படிப்பு பாதியிலேயே நின்றுவிடுகிறது.


Suriya: 10க்கு 10 அறை முதல் முதல் பிரமாண்ட அலுவலகம் வரை; நடிகர் சூர்யா அகரம் குறித்து நெகிழ்ச்சி!

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பற்றி அவர்களுக்கு கேள்வி எழுகிறது. பள்ளி படிப்பு பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்கையையே இழந்துவிடுகிறார்கள். ஒரு சிறிய 10க்கு 10 அறையில் தொடங்கப்பட்ட அகரம் ஃபவுண்டேஷன் அதன் பிறகு 2 அறைகள் கொண்ட ஒரு வீட்டில் தொடங்கப்பட்டது. இதையடுத்து, என்னுடைய அப்பாவின் இடத்தில் தொடங்கப்பட்டது. பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் அடுத்ததாக கல்லூரியில் சேரும் திட்டம் தான் அகரம் ஃபவுண்டேஷனின் விதை. 

அகரம் ஃபவுண்டேஷன் மூலமாக இதுவரையில் கிட்டத்தட்ட 5813 மாணவ, மாணவிகள் படித்துள்ளனர். தற்போது 2000க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இதில் 70 சதவிகிதம் மாணவிகள். 2010 ஆம் ஆண்டும் 100 மாணவர்களுக்கு 10000 விண்ணப்பங்கள் வந்தது. ஆனால், 700 மாணவ, மாண்விகள் படிக்கிறார்கள். இப்பவும் 10000 விண்ணப்பங்கள் வந்து கொண்டு தான இருக்கிறது.


Suriya: 10க்கு 10 அறை முதல் முதல் பிரமாண்ட அலுவலகம் வரை; நடிகர் சூர்யா அகரம் குறித்து நெகிழ்ச்சி!

இந்த காலகட்டத்திலும் கூட முதல் தலைமுறை மாணவ, மாணவிகள் இருக்கிறார்கள். இந்த கட்டிடம் நன்கொடையாக வந்த பணத்தின் மூலமாக கட்டியது கிடையாது. என்னுடைய வருமானத்தில் கட்டப்பட்ட கட்டிடம் தான் இது. நன்கொடையாக வரும் காசு, பணத்தை மாணவர்களின் படிப்பு செலவுகளுக்கு தான் பயன்படுத்துகிறோம். தன்னார்வலர்களின் தேவையும் நேரமும் தேவைப்படுகிறது. மலைப்பகுதிகளில் வசிக்கும் மாணவர், மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்தாலும் நேரடியாக அவர்களை பார்க்க முடியவில்லை. 7க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் முயற்சித்தும் பலனில்லை. கடைசியாக 10ஆவது தன்னார்வலர் சென்று ஒரு மாணவரை கண்டறிந்தார். அவர் தான் இன்று மருத்துவராக இருக்கிறார்
சொந்தமாக வீடு கட்டிய போது இருக்கும், சந்தோஷத்தை விட இந்த அலுவலகம் திறக்கும் போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget