மேலும் அறிய

தனுஷூடன் ஏற்பட்ட மோதல்... படிக்காதவன் படத்தில் பாதியில் விலகிய வடிவேலு... போட்டு உடைத்த நடிகர்!

அசால்ட் ஆறுமுகம் கேரக்டரில் இடம் பெற்றிருந்த நடிகர் விவேக்கின் நகைச்சுவை இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கேரக்டரில் முதலில் பிரபல நடிகர் வடிவேலு தான் நடிக்கவிருந்தார்.

நடிகர் தனுஷின் படிக்காதவன் படத்தில்  இருந்து வடிவேலு ஏன் விலகினார் என்பது தொடர்பாக நடிகர் மீசை ராஜேந்திரன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

சுராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் படிக்காதவன். மணிசர்மா இசையமைத்து இருந்த இப்படத்தில் நடிகர் தனுஷ், நடிகை தமன்னா, விவேக், சுமன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக அசால்ட் ஆறுமுகம் கேரக்டரில் இடம் பெற்றிருந்த நடிகர் விவேக்கின் நகைச்சுவை இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது. 

ஆனால் இந்த கேரக்டரில் முதலில் பிரபல நடிகர் வடிவேலு தான் நடிக்கவிருந்தார். தலைநகரம், மருதமலை போன்ற படங்களில் சுராஜூடன் பணியாற்றிய வடிவேலுவை படிக்காதவன் படத்திற்காக சுராஜ் ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் திடீரென வடிவேலு படத்தில் இருந்து விலக விவேக் நடித்தார்.  இந்த படத்தில் நடிகர் மீசை ராஜேந்திரனும் ஒரு காட்சியில் நடித்திருப்பார். அவர் இணைய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்  படிக்காதவன் படத்தில்  இருந்து வடிவேலு ஏன் விலகினார் என்பது குறித்து தெரிவித்துள்ளார். 


தனுஷூடன் ஏற்பட்ட மோதல்... படிக்காதவன் படத்தில் பாதியில் விலகிய வடிவேலு... போட்டு உடைத்த நடிகர்!

அதில் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. முதல் காட்சியில் நான் வடிவேலுவை அடிப்பது போலவும் அதனை தனுஷூம், அவரது நண்பரும் பார்ப்பது போலவும் சீன் எழுதப்பட்டிருந்தது. நாங்கள் எல்லாம் படப்பிடிப்புக்கு காலை ஆஜரான நிலையில் லேட்டாக வந்த வடிவேலு சுராஜிடம் என்ன சீன் என கேட்டார். அவரும் அதனை விளக்க யார் என்னை அடிக்கப்போவது என கேள்வியெழுப்பினார். இயக்குநர் என்னைக் காட்ட முதலில் என்னை வேண்டாம் என வடிவேலு கூறிவிட்டார். 

சென்னை என்றால் வேறு ஆளை ஏற்பாடு செய்யலாம். இங்கே எப்படி என சுராஜ் கேட்க சிறிது நேரத்திற்குப் பின் வடிவேலு ஒப்புக் கொண்டார். அடுத்ததாக வடிவேலும், தனுஷூம் நேருக்கு நேர் பேசிக் கொள்ளும் காட்சிகள் படமாக்கப்பட்டது. ஆனால் தனுஷ் முகத்தை பார்க்காமல் வடிவேலு திரும்பியதால் கிட்டதட்ட 8 டேக்குகள் போனது. உடனே கேமராமேன் லைட்டிங் செட் செய்த சமயம் சுராஜ் மைக்கில் சீக்கிரம் லைட் செட் பண்ணுங்க..அண்ணனுக்கு (வடிவேலு)  நிமிஷத்துக்கு நிமிஷம் ரேட் ஏறும் என கூற வடிவேலு அவரைப் பார்த்து முறைத்தார்.

அதன்பின் 14 டேக்குகள் போன நிலையில் தனுஷ் வடிவேலுவிடம் இயக்குநர் சொன்ன மாதிரி பண்ணுங்க என தெரிவிக்க வடிவேலு அவரை ஒரு முறைப்பு முறைத்தார். பின்னர் ஹோட்டல் ரூமில் இதுகுறித்து பேசியதாகவும், அப்போது வடிவேலு சந்திரமுகி படத்தில் அவரது மாமனாருக்கே (ரஜினி) நான் தான் சொல்லிக் கொடுத்தேன். இவரு என்ன சொல்றாரு என சொன்னதாக நான் கேள்விப்பட்டேன் என மீசை ராஜேந்திரன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

மறுநாள் வில்லன் நடிகர் சுமனை வடிவேலு சந்திக்கும் காட்சிகளும், அவரது காலை அமுக்கும் காட்சிகளும் படமாக்கப்பட இருந்தது. ஆனால் நான் தமிழ்நாட்டில் மிகப்பெரிய காமெடி நடிகர். அவரது காலை நான் பிடித்தால் என்னாவது என கூறியுள்ளார். அதன்பின் படப்பிடிப்பில் இருந்து உடல் நலக்குறைவு என கிளம்பியவர் சொல்லாமல் கொள்ளாமல் ஊர் திரும்பி விட்டார். இதனால் படக்குழுவினர் அனைவரும் சென்னை வந்து விட்டோம்.அதன் பின்னர் தான் விவேக் இப்படத்தில் இணைந்தார் என மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் - சென்னையில் கொட்டிய கனமழை - இன்று ஆரஞ்சு அலெர்ட், வானிலை அறிக்கை
TN Rain Update: பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் - சென்னையில் கொட்டிய கனமழை - இன்று ஆரஞ்சு அலெர்ட், வானிலை அறிக்கை
கார் விபத்தில் தின பூமி பத்திரிகையின் உரிமையாளர் மணிமாறன் உயிரிழப்பு.. கோவில்பட்டி அருகே சோகம்!
கார் விபத்தில் தின பூமி பத்திரிகையின் உரிமையாளர் மணிமாறன் உயிரிழப்பு.. கோவில்பட்டி அருகே சோகம்!
பாலத்தின் மீது கார் நிறுத்த தடையும் இல்லை, அபராதமும் இல்லை- தாம்பரம் மாநகர காவல்துறை
பாலத்தின் மீது கார் நிறுத்த தடையும் இல்லை, அபராதமும் இல்லை- தாம்பரம் மாநகர காவல்துறை
தேசிய நீர் விருது அறிவிப்பு: எந்த மாநிலம் முதல் இடம்? தமிழ்நாட்டிலிருந்து யாருக்கு விருது?
தேசிய நீர் விருது அறிவிப்பு: எந்த மாநிலம் முதல் இடம்? தமிழ்நாட்டிலிருந்து யாருக்கு விருது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EB Office Alcohol | பணி நேரத்தில் மது அருந்தியமின்வாரிய ஊழியர்கள் “ஏய் யாருடா நீங்க...”Balaji Murugadoss Vs Fatman | ”1.5 வருஷம் வீணாப்போச்சு என்னை ஏமாத்திட்டாரு”FAT MAN vs BIGBOSS பாலாஜிGovernor RN Ravi | ”காப்பாத்துங்க சார்.. முடியல..”ஆளுநரிடம் மாணவர் பகீர்!பதறிய அமைச்சர் கோவி.செழியன்Kallakurichi : கள்ளச்சாராய விற்பனை ஜோர் கள்ளக்குறிச்சியில் மீண்டும் பகீர்.. ஆக்‌ஷனில் இறங்கிய POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் - சென்னையில் கொட்டிய கனமழை - இன்று ஆரஞ்சு அலெர்ட், வானிலை அறிக்கை
TN Rain Update: பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் - சென்னையில் கொட்டிய கனமழை - இன்று ஆரஞ்சு அலெர்ட், வானிலை அறிக்கை
கார் விபத்தில் தின பூமி பத்திரிகையின் உரிமையாளர் மணிமாறன் உயிரிழப்பு.. கோவில்பட்டி அருகே சோகம்!
கார் விபத்தில் தின பூமி பத்திரிகையின் உரிமையாளர் மணிமாறன் உயிரிழப்பு.. கோவில்பட்டி அருகே சோகம்!
பாலத்தின் மீது கார் நிறுத்த தடையும் இல்லை, அபராதமும் இல்லை- தாம்பரம் மாநகர காவல்துறை
பாலத்தின் மீது கார் நிறுத்த தடையும் இல்லை, அபராதமும் இல்லை- தாம்பரம் மாநகர காவல்துறை
தேசிய நீர் விருது அறிவிப்பு: எந்த மாநிலம் முதல் இடம்? தமிழ்நாட்டிலிருந்து யாருக்கு விருது?
தேசிய நீர் விருது அறிவிப்பு: எந்த மாநிலம் முதல் இடம்? தமிழ்நாட்டிலிருந்து யாருக்கு விருது?
Thanjavur Power Shutdown: தஞ்சை மக்களே உங்கள் கவனத்திற்கு... நாளை மின்தடை - எங்கெல்லாம் தெரியுமா..?
தஞ்சை மக்களே உங்கள் கவனத்திற்கு... நாளை மின்தடை - எங்கெல்லாம் தெரியுமா..?
Chennai Red Alert: தாக்குப்பிடிக்குமா சென்னை விமான நிலையம்? - அதிகாரிகள் செய்யப்போவது என்ன?
தாக்குப்பிடிக்குமா சென்னை விமான நிலையம்? - அதிகாரிகள் செய்யப்போவது என்ன?
மீனவர்களே உஷார்... மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு போக வேண்டாம்... புயல் காற்று அடிக்குமாம்
மீனவர்களே உஷார்... மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு போக வேண்டாம்... புயல் காற்று அடிக்குமாம்
Kanchipuram Rain: JCB முதல் படகு வரை.. காஞ்சிபுரத்தை என்ன செய்யப் போகிறது மழை ? ஆட்சியர் சொன்ன முக்கிய தகவல்..
Kanchipuram Rain: JCB முதல் படகு வரை.. காஞ்சிபுரத்தை என்ன செய்யப் போகிறது மழை ? ஆட்சியர் சொன்ன முக்கிய தகவல்..
Embed widget