மேலும் அறிய

"கவுரி லங்கேஷை புதைக்கவில்லை.. விதைத்திருக்கிறோம்" ஏபிபி மாநாட்டில் எமோஷனலாக பேசிய பிரகாஷ் ராஜ்!

நான் இடதுசாரியும் இல்லை வலதுசாரியும் இல்லை. அனைவருக்கும் சம அந்தஸ்து கிடைக்க வேண்டும் என ஏபிபி மாநாட்டில் நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளரும் தனது நண்பருமான கவுரி லங்கேஷை புதைக்கவில்லை. விதைத்திருக்கிறோம் என ஏபிபி மாநாட்டில் நடிகர் பிரகாஷ் ராஜ் உருக்கமாக பேசியுள்ளார். 

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வரும் ஏபிபி நெட்வொர்க் நடத்தும் இரண்டாவது 'தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024' தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியால் இன்று காலை தொடங்கி வைக்கப்பட்டது. முதன்முறையாக கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது.

 

அதன் தொடர்ச்சியாக, ஏபிபி நெட்வர்க்கின் நடப்பாண்டிற்கான சதர்ன் ரைசிங் மாநாடு இன்று ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அரசியல், கலை, சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.

"ஒற்றை நபர்; பல்துறை திறமை" என்ற தலைப்பில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், அரசியல் முதல் சினிமா வாழ்க்கை குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, தனது நண்பர் கவுரி லங்கேஷ் குறித்து பேசிய அவர், "பேசியதால் சுட்டு கொல்லப்பட்டார்.

அவரை புதைக்கும் போது, ​​அவரை புதைக்கவில்லை, விதைகளாக விதைக்கிறேன் என்று சொன்னேன். ஒரு குரலை அடக்கினால் அதைவிடப் பெரிய குரல் எழும் என்பது மக்களுக்குத் தெரியும். வலி என்பது வேறு.

எனது குழந்தை மற்றும் கௌரி லங்கேஷ் இறந்த பிறகு, எனக்கு இன்னும் அதிக பொறுப்புகள் உள்ளன. எனக்கு மகள்கள் உள்ளனர். அவர்கள் மீது எனக்கும் பொறுப்புகள் உள்ளன. அதனால்தான் நான் வலியால் பலமாகிவிட்டேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய பிரகாஷ் ராஜ், "சகிப்பின்மை என்பதுதான் மிகப்பெரிய பிரச்னை. மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். இந்திய அரசியலைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். நாங்கள் எதிர்காலத்தை பற்றி புதிதாக யோசிக்கிறோம்.

நான் இடதுசாரியும் இல்லை வலதுசாரியும் இல்லை. அனைவருக்கும் சம அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். பல விஷயங்கள் உங்களைத் தொந்தரவு செய்கின்றன. அதனால் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது. தவறான அரசியல் செய்யும் இப்படிப்பட்டவர்கள் உங்களுடன் அமர்ந்து பேச விரும்பவில்லை. அவர்கள் உங்களை அமைதியாக்க விரும்புகிறார்கள்" என்றார்.

மாநாட்டில் கூட்டாட்சி குறித்த விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என். சோமு, "கூட்டாட்சியே இப்போதைய தேவை. இந்தியா நாடு மட்டும் அல்ல. அது ஒரு துணை கண்டம். மாநிலங்கள் அடங்கிய ஒன்றியம். பல இனக்குழுக்கள். பல மொழிகளை கொண்டது. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை மொழியில் இருந்து வேறுபடுகிறோம். கலாசாரத்தில் இருந்து வேறுபடுகிறோம்.

எல்லா மாநிலங்களும் தனித்துவமான காலநிலையை கொண்டுள்ளது. மொழியை கொண்டுள்ளது. எனவே, அனைத்து மாநிலங்களுக்கும் தனித்துவமான கொள்கை தேவைப்படுகிறது. எனவேதான், திமுக மாநில சுயாட்சியை மூர்க்கமாக பேசுகிறது" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Embed widget