மேலும் அறிய

44 years of Niram Maradha Pookal : ஆயிரம் மலர்களே மலருங்கள்… பாரதிராஜாவின் எவர்க்ரீன் காதல் கதை.. 'நிறம் மாறாத பூக்கள்' வந்து 44 வருஷமாச்சு!

உணர்வுகளின் உருவமான காதலை மிகவும் அழகான திரைக்கதையாக கொடுத்த பாரதிராஜாவின் 'நிறம் மாறாத பூக்கள்'வெளியாகி இன்றுடன் 44 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.  

ஒரு மெல்லிய தென்றலாக சினிமாவில் வீசிய பாசத்திற்குரிய பாரதிராஜா ஐந்தே படங்களில் தமிழ் திரையுலகில் ஒரு பெரிய சூறாவளியை ஏற்படுத்திவிட்டார். உணர்வுகளின் உருவமான காதலை மிகவும் அழகான திரைக்கதை மூலம் ரசிகர்களை ஆர்ப்பரித்த பாரதிராஜாவின் 'நிறம் மாறாத பூக்கள்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 44 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.  

சிட்டி சப்ஜெக்ட் :

'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தில் கிராமத்து கிளிகளாக சிறகை விரித்து பறந்த பாஞ்சாலியும் பரஞ்சோதியும் அதற்கு நேர்மாறாக மாடர்ன் சிட்டியில் உலா வருகிறார்கள். பணக்கார வீடு பெண்ணாக மாடர்ன் கேர்ள் தோரணையில் மிடுக்காக ராதிகாவும் வேலையில்லா பட்டதாரியாக சுதாகரும் கதாபாத்திரங்களுக்கு அழகு சேர்த்தனர். 

 

44 years of Niram Maradha Pookal : ஆயிரம் மலர்களே மலருங்கள்…  பாரதிராஜாவின் எவர்க்ரீன் காதல் கதை.. 'நிறம் மாறாத பூக்கள்' வந்து 44 வருஷமாச்சு!

கதை சுருக்கம் :

வேலையில்லாமல் கஷ்டப்படும் சுதாகருக்கு மேனேஜர் வேலையோடு மனதையும் பரிசளிக்கிறாள் ராதிகா. மெல்ல மெல்ல அவர்களுக்குள் காதல் மலர்கிறது, ராதிகாவின் அப்பாவுக்கும் உண்மை தெரிகிறது. பணக்கார பெண் - ஏழை காதலன் என்றால் எந்த அப்பா தான் சம்மதம் சொல்வார். சம்மதித்தது போல நடித்து பணத்தை கையாடல் செய்து ஓடிவிட்டான் என பழியை போட்டு மகளையும் அதை பக்காவாக நம்ப வைத்து காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார். 

மகள் காதல் தோல்வியின் துயரத்தில் இருந்து வெளிவர ஆறுதல் தேவை என ஊட்டியில் இருக்கும் நண்பனின் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் உண்மையில் நண்பனின் மகன் விஜயனுக்கும் ராதிகாவும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அதன் உள்நோக்கம். விஜயனுக்கும் ஒரு பிளாஷ் பேக் இருக்கிறது. காதல் தோல்வியால் முழு நேர குடிகாரனாக கையில் டேப்ரிக்கார்டருமாக வலம் வருகிறார். தன்னுடைய கதை கதையை ராதிகாவிடம் சொல்கிறார். 

விஜயன் காதலியாக ரதி. ஹார்ஸ் ரைடிங், கார் டிரைவிங் என அனைத்தையும் ரதிக்கு விஜயன் சொல்லி கொடுக்கும் வேலையில் தனியாக செல்லும் போது குதிரை வேகம் எடுத்த போதிலும், கார் சீறி பாய்ந்த போதிலும், பதறி போய் துடித்த விஜயனிடம் 'எனக்கு ஹார்ஸ் ரைடிங்', 'கார் டிரைவிங்' தெரியும் என சொல்லி வெறுப்பேற்றுகிறாள். அதே போல ஒரு நாள் ஏரியில் இறங்கிய ரதி 'எனக்கு ஸ்விம்மிங் தெரியாது' என சொன்னதை நம்பாத விஜயன் கரையிலேயே நின்று கொண்டு ரதிக்காக சிரித்து கொண்டே காத்திருக்கிறார். ஆனால் அவரின் கண் முன்னாடியே ரதி மூழ்கி இறந்து போகிறார். விஜயனின் இந்த காதல் கதையை கேட்ட ராதிகாவுக்கு மனம் மாறுகிறது. திருமணத்திற்கு சம்மதிக்கிறார்கள். 

44 years of Niram Maradha Pookal : ஆயிரம் மலர்களே மலருங்கள்…  பாரதிராஜாவின் எவர்க்ரீன் காதல் கதை.. 'நிறம் மாறாத பூக்கள்' வந்து 44 வருஷமாச்சு!

அந்த நேரத்தில் தான் கூலி வேலை செய்பவராக சுதாகரை ஊட்டி எஸ்டேட்டில் சந்திக்கிறாள் ராதிகா. உண்மை வெளிச்சத்துக்கு வர அவர்களை விஜயன், சேர்த்து வைத்து விட்டு ரதி மூழ்கிய அதே ஏரியில் சென்று மூழ்கி உயிரை விடுகிறார். அந்த நேரத்தில் டேப்ரிக்கார்டரில் இருந்து ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ என்ற பாடல் ஒலிக்கிறது. கதை நிறைவைகிறது. கனத்த இதயங்களுடன் திரும்பிய ரசிகர்கள் இன்று வரை அப்படத்தை கொண்டாடுகிறார்கள். 

பலே கூட்டணி :

பாக்யராஜ் கதைக்கு இளையராஜா இசையமைக்க, வசனங்களுக்கு பஞ்சு அருணாச்சலம் உயிர் கொடுக்க அப்படத்தை இயக்கி உருவம் கொடுத்தார் பாரதிராஜா. ராதிகா - சுதாகர் காதல் ஜோடி படம் முழுக்க ட்ராவல் செய்தாலும் மனதை நெகிழ வைத்தது விஜயன் - ரதி ஜோடி தான். ஊட்டியின் அழகுக்கு அழகு சேர்த்து இருந்தது பி.எஸ்.நிவாஸின் ஒளிப்பதிவு. 


ராஜாங்கம் செய்த இளையராஜா :

இளையராஜாவின் மேற்கத்திய இசை, மலேசியா வாசுதேவன், ஜென்சி, எஸ்.பி.பியின் குரலும் மனங்களை இன்று வரை கொள்ளை கொண்டுள்ளன. பாரதிராஜாவின் இயக்கத்தில் எஸ்.பி.பி பாடிய முதல் பாடல் ‘முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே...’ பாடல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’, ’இரு பறவைகள் மலை முழுவதும்’ என அனைத்து பாடல்களிலுமே இளையராஜா ஆக்ரமித்துவிட்டார். நிறம் மாறவில்லை என்றாலும்  ரசிகர்கள் மத்தியில் என்றுமே மனம் வீசி கொண்டு இருக்கும்  பாரதிராஜாவின் ‘நிறம் மாறாத பூக்கள்’.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

OPS BJP: பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் - தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?
OPS BJP: பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் - தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?
BCCI: மத்திய அரசே நினைச்சாலும் முடியாது.. தனிக்காட்டு ராஜா பிசிசிஐ.. IND Vs PAK போட்டி நடந்தே தீருமாம்
BCCI: மத்திய அரசே நினைச்சாலும் முடியாது.. தனிக்காட்டு ராஜா பிசிசிஐ.. IND Vs PAK போட்டி நடந்தே தீருமாம்
Top 10 News Headlines: ஒரே நாளில் 14 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு, பிரதமர் மோடி நிறைவுரை, சீனாவை முந்திய இந்தியா - 11 மணி செய்திகள்
ஒரே நாளில் 14 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு, பிரதமர் மோடி நிறைவுரை, சீனாவை முந்திய இந்தியா - 11 மணி செய்திகள்
Amit Shah Angry: “நீங்க செய்யுறது சரியா.?“ மக்களவையில் பொங்கி எழுந்த அமித் ஷா - எதற்காக தெரியுமா.?
“நீங்க செய்யுறது சரியா.?“ மக்களவையில் பொங்கி எழுந்த அமித் ஷா - எதற்காக தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi : விக்கிரவாண்டியில் பொன்முடி? அன்னியூர் சிவா போர்க்கொடி! பற்றி எரியும் விழுப்புரம் திமுக
EPS Modi Secret Call : மோடியுடன் ரகசிய PHONECALLரேடாரில் மூர்த்தி, சக்கரபாணி!ஆட்டத்தை தொடங்கிய EPS
Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP
Madhampatty Rangaraj |  2வது மனைவியுடனும் சண்டை? PHOTOS-ஐ லீக் செய்த ஜாய் சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்
MK Stalin Discharge | காலை வெடிகுண்டு மிரட்டல்?மாலை முதல்வர் Discharge! Alert mode- ல் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS BJP: பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் - தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?
OPS BJP: பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் - தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?
BCCI: மத்திய அரசே நினைச்சாலும் முடியாது.. தனிக்காட்டு ராஜா பிசிசிஐ.. IND Vs PAK போட்டி நடந்தே தீருமாம்
BCCI: மத்திய அரசே நினைச்சாலும் முடியாது.. தனிக்காட்டு ராஜா பிசிசிஐ.. IND Vs PAK போட்டி நடந்தே தீருமாம்
Top 10 News Headlines: ஒரே நாளில் 14 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு, பிரதமர் மோடி நிறைவுரை, சீனாவை முந்திய இந்தியா - 11 மணி செய்திகள்
ஒரே நாளில் 14 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு, பிரதமர் மோடி நிறைவுரை, சீனாவை முந்திய இந்தியா - 11 மணி செய்திகள்
Amit Shah Angry: “நீங்க செய்யுறது சரியா.?“ மக்களவையில் பொங்கி எழுந்த அமித் ஷா - எதற்காக தெரியுமா.?
“நீங்க செய்யுறது சரியா.?“ மக்களவையில் பொங்கி எழுந்த அமித் ஷா - எதற்காக தெரியுமா.?
“TCS ஆட்குறைப்ப நிறுத்துங்க“; மத்திய தொழிலாளர் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம் - யார் எழுதியது.?
“TCS ஆட்குறைப்ப நிறுத்துங்க“; மத்திய தொழிலாளர் துறை அமைச்சருக்கு பறந்த கடிதம் - யார் எழுதியது.?
Tamilnadu Roundup: 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு, ராமேஸ்வரம் மீனவர்கள் கைது, தங்கம் விலை குறைவு - பரபரப்பான 10 மணி செய்திகள்
17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு, ராமேஸ்வரம் மீனவர்கள் கைது, தங்கம் விலை குறைவு - பரபரப்பான 10 மணி செய்திகள்
ஆணவத்தின் உச்சம் -  ஒன்வேயில் ஸ்கூட்டரை இடித்த SUV.. வேண்டுமென்றே முதியவரை மோதி தூக்கி வீசும் வீடியோ
ஆணவத்தின் உச்சம் - ஒன்வேயில் ஸ்கூட்டரை இடித்த SUV.. வேண்டுமென்றே முதியவரை மோதி தூக்கி வீசும் வீடியோ
Lok Sabha: அனல்பறந்த ‘ஆபரேஷன் சிந்தூர்‘ விவாதம்; அமைச்சர்கள் விளக்கமும், எதிர்க்கட்சிகளின் கேள்வியும்
அனல்பறந்த ‘ஆபரேஷன் சிந்தூர்‘ விவாதம்; அமைச்சர்கள் விளக்கமும், எதிர்க்கட்சிகளின் கேள்வியும்
Embed widget