மேலும் அறிய

விழுப்பரத்தில் விசிக ரவிக்குமார் மீண்டும் வெற்றி ... மோடிக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர் - அமைச்சர் பொன்முடி

அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என மோடி பேசியதை அவர் எதற்காக பேசினார் என்பதை மக்கள் தெரிந்து வைத்திருப்பதினால் அதற்கான தகுந்த பாடத்தினை தேர்தலில் மக்கள் புகட்டியுள்ளனர் - அமைச்சர் பொன்முடி.

விழுப்புரம்: அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என மோடி பேசியதை, அவர் எதற்காக பேசினார் என்பதை மக்கள் தெரிந்து வைத்திருப்பதினால் அதற்கான தகுந்த பாடத்தினை தேர்தலில் மக்கள் புகட்டிருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கீழ்பெரும்பாக்கத்திலுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் ரவிக்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். விழுப்புரம் தனி தொகுதியில் 25 சுற்றுகள் இன்று எண்ணப்பட்டதில் விசிக வேட்பாளர் 4,77,033 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 4,06,330 வாக்குகளும் 

பாமக முரளி சங்கர்181882 வாக்குகளும் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் 57242 வாக்குகளும் பெற்றனர். விசிக வேட்பாளர் ரவிக்குமார் அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ்யை விட 70,703 வாக்குகள் அதிகமாக பெற்று ரவிக்குமார் வெற்றி பெற்றார். இதனையடுத்து தேர்தல் அலுவலரிடமிருந்து தேர்தல் வெற்றிக்கான சான்றிதழை ரவிக்குமார் அமைச்சர் பொன்முடி முன்னிலையில் பெற்று கொண்டார்.

அமைச்சர் பொன்முடி பேட்டி

அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி வாக்களித்த நன்றியை தெரிவிப்பதாகவும் நாப்பதும் நமதே என்று கூறியது போல் 40 தொகுதிகளிலும் திமுகவும் தோழமை கட்சிகள் வெற்றி பெற்று இருப்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்றும் மீண்டும் ரவிக்குமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளது ரவிக்குமாரின் எழுத்து திறமைக்க கிடைத்த வெற்றி என பெருமிதம் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர், மிகப்பெரிய வெற்றியை ஈட்டி தந்த அனைவருக்கும் வாக்காளர்க்களுக்கும் நன்றியை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று சமூக நீதி கொள்கைக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து சமூக நீதி ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பார். ரவிக்குமார் தொடர்ந்து பணியாற்றி சாதனைகளை செய்து தருவார் என்றும் பாஜக எந்த அளவிற்கு நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டுமென்று எக்சிட் போல் என்ற பெயரில் என்னன்னமோ செய்து அவர்களுக்கு தகுந்த மாதிரி எழுதினார்கள். அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என மோடி பேசியதை அவர் எதற்காக பேசினார் என்பதை மக்கள் தெரிந்து வைத்திருப்பதினால் அதற்கான தகுந்த பாடத்தினை தேர்தலில் மக்கள் புகட்டிருப்பதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். 

ரவிக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

இரண்டாவது முறையாக போட்டியிட வைத்து வெற்றி பெற செய்த ஸ்டாலினுக்கும் திருமாவளவனுக்கு வெற்றிக்கு முதன்மையாக காரணமாக இருந்த அமைச்சர் பொன்முடிக்கும் வாக்காளர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாக ரவிக்குமார் கூறியுள்ளார். விழுப்புரம் தொகுதியை மேம்படுத்த உழைக்க வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றியையும் தேர்தலில் வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் சேர்ந்து பாடுபடுவேன் என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Embed widget