![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Local body election 2022 : வெற்றிபெற்ற இளம் கவுன்சிலர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ?
”ஒரு வார்டு கவுன்சிலராக என்ன செய்ய முடியுமோ அனைத்து வசதிகளை மக்களுக்கு செய்து கொடுப்பேன். என்னை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம்” என்றார்.
![Local body election 2022 : வெற்றிபெற்ற இளம் கவுன்சிலர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ? Urban local body election Councillors have theri opinion on shaping up their constituencies Local body election 2022 : வெற்றிபெற்ற இளம் கவுன்சிலர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/25/ee1533501e1439207f35abf94ae13809_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. மதுரையில் ஒரு மாநகராட்சி, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 3 நகராட்சிகள், அ.வல்லாளபட்டி, அலங்காநல்லூர், டி.கல்லுப்பட்டி, பாலமேடு உள்ளிட்ட 9 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மொத்தம் 100 வார்டுகள் தி.மு.க., 67 வார்டுகள் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க கூட்டணிகளான காங்கிரஸ் 5 இடத்திலும், வி.சி.க ஒரு இடத்திலும், சி.பி.எம் 4 இடத்திலும், ம.தி.மு.க 3 இடத்திலும் என தி.மு.க கூட்டணி மொத்தம் 80 இடத்தில் வெற்றிபெற்றுள்ளது. அதே போல் அ.தி.மு.க 15 இடத்திலும், பா.ஜ.க ஒரு இடத்திலும், சுயேட்சை 4 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்ட பகுதியில் இளம் வேட்பாளர்கள் அதிகளவு தேர்தல் களம் கண்டு வெற்றியும் பெற்றுள்ளனர். இளம் வார்டு கவுன்சிலர்களின் செயல்பாட்டிற்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்பு அளித்துவருகின்றனர். சில இளம் வார்டு கவுன்சிலர்களிடம் பேசினோம்.
#Abpnadu | 'என்னுடை வார்டு மக்களுக்கு அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து கொடுப்பேன்'. என சிவகங்கை நகராட்சி 20-வது வார்டை சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் பிரியங்கா தெரிவித்தார். 22வயது இளம் வார்டு கவுன்சிலர் பிரியங்காவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
— Arunchinna (@iamarunchinna) February 25, 2022
| @reportervignesh | pic.twitter.com/BqOcnm6mz4
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 20 வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 22 வயதே ஆன எம்.பி.ஏ மாணவி பிரியங்காவிடம் பேசினோம்..,” முதல்முறையாக வேட்புமனு தாக்கல் செய்தபோது புதுவித அனுபவத்தை ஏற்படுத்தியது. இளைஞர்கள் அரசியலுக்கு வர முன்வரவேண்டும். நான் வெற்றி பெற்ற பின் என்னுடைய வார்டுபகுதி மக்கள் வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் கூட என்னை தொடர்பு கொண்டு குறைகளை தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். என் வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து கொடுப்பேன்” என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)