மேலும் அறிய

Trichy Lok Sabha Election Results 2024 : கண்கலங்கிய திருச்சி எம்பி துரை வைகோ, ஆறுதல் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ் - திருச்சியில் நெகிழ்ச்சி

எனக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற விருப்பமில்லை. இந்த வெற்றியை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன் - திருச்சி எம்பி துரை வைகோ

தமிழ்நாட்டின் மையப் பகுதியாக திகழ்வது திருச்சி என்று சொன்னால் அது மிகையாகாது.  தமிழ்நாடு அரசியலை பொறுத்தவரை அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் வரை திருச்சி என்றாலே திருப்பு முனையாக அமையும் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். 

குறிப்பாக அரசியல் கட்சி ரீதியாக எந்த முடிவு எடுக்க வேண்டுமானாலும், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றாலும், அனைத்து அரசியல் கட்சியினரும் முதலில் தேர்வு செய்வது திருச்சி தான். ஏனென்றால் திருச்சி என்றாலே திருப்புமுனையை உருவாக்கித் தரும் என்று அனைவரும் மனதில் ஆணித்தனமான நம்பிக்கையாக உள்ளது.

அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளும் முயற்சி செய்தனர். 

இந்நிலையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியின் உள்ள  மதிமுக சார்பாக துரை வைகோ, அதிமுக சார்பாக கருப்பையா, அமமுக சார்பாக செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி சார்பாக ராஜேஷ், ஆகியோர்  போட்டியிட்டனர். 


Trichy Lok Sabha Election Results 2024 : கண்கலங்கிய திருச்சி எம்பி துரை வைகோ, ஆறுதல் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ் - திருச்சியில் நெகிழ்ச்சி

மதிமுக வேட்பாளர் துரை வைகோ தேர்தல் பிரச்சாரம்  

திருச்சி மக்களவை தொகுதியை திமுக நிர்வாகிகளுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றது. ஆனால் திமுக தலைமை சில காரணங்களால் தனது கூட்டணியில் இருக்கக்கூடிய மதிமுகவிற்கு ஒதுக்கீடு செய்தது. இதனால் திருச்சி திமுக நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. 

ஆனாலும் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் இருவரும் கழகத்தின் நிர்வாகிகளை அரவனைத்து, தலைமையின் முடிவை ஏற்று கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என கூறினார்கள். 

இந்நிலையில், கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஒன்றிணைத்து, கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற செயல்வீரர் கூட்டத்தில் துரை வைகோ வாக்கு சேகரித்தார். அப்போது திமுக நிர்வாகிகள் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர். இந்த நிகழ்வில் திடீரென்று ஆதங்கப்பட்ட துரை வைகோ,  செத்தாலும் தனி சின்னத்தில் தான் நிற்பேன், எனக்கு அரசியல் முக்கியமில்லை, என் தந்தைக்காகவும், கட்சியை வளர்ப்பதற்காகவும் மட்டுமே அரசியல் இருக்கு வந்தேன் என்றார். 

அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ், ரகுபதி மற்றும் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் மத்தியில் துரை வைகோ பேசியது திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. 


Trichy Lok Sabha Election Results 2024 : கண்கலங்கிய திருச்சி எம்பி துரை வைகோ, ஆறுதல் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ் - திருச்சியில் நெகிழ்ச்சி

தேர்தல் பிரச்சாரத்தில் துரை வைகோ சந்தித்த சிக்கல்கள்

இதனால் துரை வைகோ தேர்தல் பிரச்சாரத்தில் மதிமுக நிர்வாகிகள் மற்றும் திமுக பகுதி, வட்டகழக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

தேர்தல் தேதி நெருங்கும் வேளையில் கூட  வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து திமுக அமைச்சர்கள் பிரச்சாரம் செய்யவில்லை என பல்வேறு சர்ச்சைகள் எழும்பியது. இதனால் அமைச்சர் நேரு மற்றும் அன்பில் மகேஷ் இறுதி வாரத்தில் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக துரை வைகோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டேன், தனிச் சின்னத்தில் தான் போட்டிடுவேன் என்று பேசியது திமுகவினர் இடையே பெரும் கோபத்தையும், வருத்தையும் ஏற்படுத்தியது. இதனால், துரை வைகோ பிரச்சாரம் செய்யும் போது நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் மதிமுக வட்டாரங்களில் கேள்வியாக எழுந்தது.

திமுகவினருக்கு வருத்தம் இருந்தாலும், திருச்சியில் கூட்டணி கட்சி வேட்பாளர் தோற்றால் அது அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர்களுக்கு மட்டும் அவமானம் இல்லை, திமுகவிற்கு அவமானம் ஏற்பட்டுவிடும் என்று நிர்வாகிகள் எண்ணினார்கள். இந்நிலையில் திமுக தலைமையின் அறிவுறுத்தின்படி இந்த தேர்தலில் பணியாற்றி உள்ளோம், நிச்சயமாக துரை வைகோ வெற்றி பெறுவார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.


Trichy Lok Sabha Election Results 2024 : கண்கலங்கிய திருச்சி எம்பி துரை வைகோ, ஆறுதல் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ் - திருச்சியில் நெகிழ்ச்சி

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள்..

தமிழ்நாட்டில் மக்களை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது. திருச்சி தொகுதியில் 7,57,130 ஆண் வாக்காளர்களும், 7,96,616 பெண் வாக்காளர்களும் 239 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 15,53,985 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் 5,12,264 ஆண் வாக்காளர்களும், 5,36,844 பெண் வாக்காளர்களும் , 102 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 10,49,210 பேர் வாக்களித்தனர். 

ஆண் வாக்காளர்கள் 67.66 சதவீதமும், பெண் வாக்காளர்கள் 67.39 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர்கள் 42.68 சதவீதமும் என மொத்தம் 67.52 சதவீதம் வாக்குகள் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் பதிவாகியுள்ளது.

இதனை தொடர்ந்து வாக்குபதிவு இயந்திரங்கள் அனைத்தையும் போலீஸ் பாதுக்காப்புடன் திருச்சி ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் வைக்கபட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுக்காப்பு போடபட்டு இருந்தது. 


Trichy Lok Sabha Election Results 2024 : கண்கலங்கிய திருச்சி எம்பி துரை வைகோ, ஆறுதல் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ் - திருச்சியில் நெகிழ்ச்சி

திருச்சி எம்பியாக  துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

இதனை தொடர்ந்து ஜுன் 4 ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே திமுக கூட்டணி கட்சி மதிமுக  வேட்பாளர் துரை வைகோ அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். தபால் வாக்குகள், வாக்குபதிவு இயந்திரம் எண்ணிக்கை என மொத்தம் 5,42,213 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

மதிமுக வேட்பாளர் துரை வைகோ தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கருப்பையாவை விட 3,13,094 வாக்குகள் அதிகம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE:
Breaking News LIVE: "விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்வை பாடமாக்குவேன்" - ஆளுநர் ரவி
வயநாட்டில் களமிறங்கும் பிரியங்கா காந்தி! தேர்தல் அரசியலில் முதல் சவால்!
வயநாட்டில் களமிறங்கும் பிரியங்கா காந்தி! தேர்தல் அரசியலில் முதல் சவால்!
அதிகளவு சொத்து வரி பாக்கி வைத்துள்ள டாப் 100 நபர்கள்! லிஸ்டில் நம்பர் 1 இந்த பிரபலமா? முழு விவரம்..
அதிகளவு சொத்து வரி பாக்கி வைத்துள்ள டாப் 100 நபர்கள்! லிஸ்டில் நம்பர் 1 இந்த பிரபலமா? முழு விவரம்..
Amala Paul: ஹாப்பி நியூஸ்! ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால்! குழந்தையோட பெயர் என்ன தெரியுமா?
Amala Paul: ஹாப்பி நியூஸ்! ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால்! குழந்தையோட பெயர் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Kanimozhi : குவைத் விபத்தில் இளைஞர் மரணம்!கனிமொழி நேரில் நிவாரணம்’’அழாதீங்க மா’Jagan Mohan Reddy Plan : சந்திரபாபு நாயுடுவுக்கு செக்..மோடியிடம் SURRENDER-ஆன ஜெகன்?Thiruvarur | தந்தை துப்புரவு பணியாளர்.. மகள் நகராட்சி ஆணையர்! திருவாரூரில் அசத்தல்!Sasikala vs EPS | ”இதான் இந்த பேட்டை பாயுற நேரம்” ஆட்டத்தை தொடங்கும் சசிகலா! கலக்கத்தில் EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE:
Breaking News LIVE: "விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்வை பாடமாக்குவேன்" - ஆளுநர் ரவி
வயநாட்டில் களமிறங்கும் பிரியங்கா காந்தி! தேர்தல் அரசியலில் முதல் சவால்!
வயநாட்டில் களமிறங்கும் பிரியங்கா காந்தி! தேர்தல் அரசியலில் முதல் சவால்!
அதிகளவு சொத்து வரி பாக்கி வைத்துள்ள டாப் 100 நபர்கள்! லிஸ்டில் நம்பர் 1 இந்த பிரபலமா? முழு விவரம்..
அதிகளவு சொத்து வரி பாக்கி வைத்துள்ள டாப் 100 நபர்கள்! லிஸ்டில் நம்பர் 1 இந்த பிரபலமா? முழு விவரம்..
Amala Paul: ஹாப்பி நியூஸ்! ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால்! குழந்தையோட பெயர் என்ன தெரியுமா?
Amala Paul: ஹாப்பி நியூஸ்! ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால்! குழந்தையோட பெயர் என்ன தெரியுமா?
Viral Video : மாலத்தீவில் கடலில் தத்தளித்த தம்பதி.. உயிரை காப்பாற்றிய ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் வீரர்! வைரல் வீடியோ!
மாலத்தீவில் கடலில் தத்தளித்த தம்பதி.. உயிரை காப்பாற்றிய ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் வீரர்!
Watch Video: அடேங்கப்பா.. பாடிபில்டிங் ஸ்டைலில் கலக்கல்..பீச் வாலிபாலில் அசத்திய இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
Watch Video: அடேங்கப்பா.. பாடிபில்டிங் ஸ்டைலில் கலக்கல்..பீச் வாலிபாலில் அசத்திய இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி.. ரேபரேலி எம்.பி.யாக தொடர முடிவு!
வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி.. ரேபரேலி எம்.பி.யாக தொடர முடிவு!
Pakistan: ”ஒற்றுமையே இல்லை.. இப்படி பார்த்ததே இல்லை..” பாகிஸ்தான் டீமை கழுவி ஊற்றிய பயிற்சியாளர்
”ஒற்றுமையே இல்லை.. இப்படி பார்த்ததே இல்லை..” பாகிஸ்தான் டீமை கழுவி ஊற்றிய பயிற்சியாளர்
Embed widget