![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN Urban Local Body Election 2022 Results: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: இன்னும் சற்று நேரத்தில் தொடக்கம் !
TN Urban Local Body Election Results 2022: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
![TN Urban Local Body Election 2022 Results: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: இன்னும் சற்று நேரத்தில் தொடக்கம் ! TN Urban Local Body Election 2022 Results: TN urban local body election votes counting to start today at 8am TN Urban Local Body Election 2022 Results: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: இன்னும் சற்று நேரத்தில் தொடக்கம் !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/22/63d515b2029a1a6cd1fdd997e80502a4_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக தமிழ்நாட்டில் 268 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன்பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாட்டு முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டிருந்தது. சென்னையில் மூவர் உட்பட 38 மாவட்டங்களில் மொத்தம் 41 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடப்படுத்தப்பட்டிருந்தனர். கோவையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி:
மொத்த பதவியிடங்கள்: 1374
போட்டியின்றி தேர்வானவர்கள்: 4
தேர்தல் நடக்கும் பதவியிடங்கள்: 1370
தேர்தலில் போட்டியிடும் நபர்கள்: 11,196
நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி:
மொத்த பதவியிடங்கள்: 3843
போட்டியின்றி தேர்வானவர்கள்: 18
தேர்தல் நடக்கும் பதவியிடங்கள்: 3825
தேர்தலில் போட்டியிடும் நபர்கள்: 17,922
பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி:
மொத்த பதவியிடங்கள்: 7609
போட்டியின்றி தேர்வானவர்கள்:196
தேர்தல் நடக்கும் பதவியிடங்கள்: 7412
தேர்தலில் போட்டியிடும் நபர்கள்: 28,660
மொத்தமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமாக 12,607 பதவியிடங்களுக்கு 57,778 பேர் போட்டியிட்டுள்ளனர். அந்தப் பதவிகளுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.
சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியின் 8ஆவது வார்டில் தேர்தல் நடைபெறவில்லை. அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தின் கடம்பூர் பேரூராட்சியின் 12 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 36ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டதால் அங்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரோடு அம்மாப்பேட்டை பேரூராட்சியில் வேட்பாளர் ஐயப்பன் மறைவால் தேர்தல் அங்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தின் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9ஆவது வார்டிலும் வேட்பாளர் மரணத்தால் தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)