கே.சி.வீரமணி மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்; பொளந்து கட்டிய அதிமுகவினர்; களேபரமான ஜோலார்பேட்டை
கே.சி.வீரமணி தாக்கல் செய்த பிரமாண பத்திரம் பொய்யானது ஆட்சேபனை தெரிவித்த நபருக்கு சரமாரி அடி உதை! ஜோலார்பேட்டையில் அதிர்ச்சி

திருப்பத்தூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்த பிரமாண பத்திரம் பொய்யானது என ஆட்சேபனை தெரிவித்த நபருக்கு அவரின் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அறிக்கை என்ன வருகிறதோ அதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது பொய்யான பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக காட்பாடி பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றம் ஏறும் நிலைமையும் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. எனவே வழக்கை நடத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது என கூறப்பட்டு வந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், கே.சி வீரமணி செய்த பிரமாண பத்திரம் மீண்டும் பொய்யானது எனக்கூறி காட்பாடி பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி மற்றும் அவருடைய நண்பர் ஜெயபிரகாஷ் ஆகிய இருவரும் ஆட்சேபனை தெரிவிக்க நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

இதனை அறிந்த அதிமுகவினர் இருவரையும் சரமாரியாக தாக்கினார்கள். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் யாஷா முக்தால் ஐஏஎஸ் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல அதிகாரிகளிடம் என்ன நடந்தது என கேட்டு அறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அப்சர்வர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கவனத்திற்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளது. இதனை கண்காணித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையில் இருந்து அறிக்கை என்ன வருகிறதோ, அதன்படி சம்பந்தப்பட்ட நபரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















