நீங்க நகை வாங்கப் போறீங்களா? முதல்ல இதை படிங்க! – நாளை நகைக்கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சட்டமன்றத் தேர்தலையொட்டி சென்னையில் நகைக்கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் உள்ளா நகைக்கடைகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நாளை 234 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 14.59 லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்களாக தேர்தல் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்களார்கள் வாக்களிக்க அனைத்துவிதமான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சம்பளத்துடன் விடுமுறை விட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
நகை கடைகள் நாளை இயங்காது
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் உள்ள நகைக் கடைகள் நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நகைக்கடைகள் வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தடையின்றி வாக்குப்பதிவு செய்திடும் வகையில் விடுமுறை விடப்பட்டுள்ளதாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய தங்கம் விலை என்ன.?
தங்கத்தின் விலையானது இன்று குறைந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைந்து 14,250 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,14,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளியின் விலையானது இன்று எந்தவித மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு 275 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்



















