திருவள்ளூரில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு! 387 சிசிடிவி கேமரா பொருத்தம்... ஆய்வில் சொன்ன ஆட்சியர்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும மையங்களில் 387 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு திருவள்ளூர் மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் சராசரியாக 82 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும மையங்களில் 387 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.சுழற்சி முறையில் 3 அடுக்கு பாதுகாப்பில் 160 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாவட்டம் முழுவதும் பரவலாக வாக்குகள் பதிவான நிலையில், கும்மிடிப்பூண்டி தொகுதி 87.45% வாக்குப்பதிவுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருவள்ளூர், பொன்னேரி, மாதவரம் மற்றும் மதுரவாயல் ஆகிய தொகுதிகளிலும் 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள் செவ்வாபேட்டை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையமும், பெருமாள்பட்டு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆவடி, பூந்தமல்லி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய 6 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 387 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் சுழற்சி முறையில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும்,160-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டுள்ளதாகவும், 2 வாக்கு எஎண்ணும் மையங்களிலும் தலா ஒரு உதவி ஆணையர் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தபால் வாக்குகள் குறித்த விவரம் பின்னர் தெரிவிக்கப்பட வேண்டும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வரும் மே 4ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ட்ரெண்டிங் செய்திகள்




















