(Source: Poll of Polls)
TN Exit Polls 2026: தமிழ்நாட்டில் முடிந்த தேர்தல்... தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எப்போது? ஆவலுடன் காத்திருக்கும் மக்கள்
Tamil Nadu Exit Poll Results 2026: 6 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 84.90 சதவீகிதம் வாக்குகளானது பதிவாகி உள்ளது, அதிகபட்சமாக சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் 93.5% வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்த முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எப்போது வெளியாகும் என்கிற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு:
இந்தியாவில் உள்ள 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேதி கடந்த மார்ச் 15 ஆம் தேதி அறிவிக்கபட்டது, அதன்படி முதற்கட்டமாக அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் முதற்கட்டமாக ஏப்ரல் (ஏப்ரல் 30) ஆம் தேதி நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவும் இன்று தேர்தல் நடைப்பெற்றது. அதே போல் மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டத்தில் முதல் கட்ட தேர்தல் இன்று( ஏப்ரல் 30) நடைப்பெற்றது.
எவ்வளவு வாக்குப்பதிவு?
மொத்தம் 234 தொகுதிகளில் நடைப்பெற்ற வாக்குப்பதிவில் பெரிய அளவில் பாதிப்பின்றி தேர்தல் வாக்குப்பதிவானது நடைப்பெற்றது முடிந்தது. 6 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 84.90 சதவீகிதம் வாக்குகளானது பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் 93.5% வாக்குகள் பதிவாகியுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்:
பொதுவாக தேர்தல் முடிந்த பின்னர் தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகும், ஆனால் தேர்தல் நடக்கும் அனைத்தும் மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிந்த பின்னரே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெளிவாகக் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் எப்போது வெளியாகும்?
தற்போது மேற்கு வங்கத்தில் இரண்டு கட்ட தேர்தலில் முதற்கட்டமே முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் அங்கு ஏப்ரல் 29ஆம் தேதி நடைப்பெறுகிறது, அது முடிந்த பின்னரே தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 126A
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) எப்போது வெளியாகும் என்ற ஆவல் அனைவரிடமும் உள்ளது. ஆனால், இதற்கான கட்டுப்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மிகவும் கடுமையாக்கியுள்ளது.
சட்டம் என்ன சொல்கிறது? மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 126A-ன் கீழ், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவதற்கும், அதனை ஊடகங்களில் வெளியிடுவதற்கும் குறிப்பிட்ட காலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்காலத்தை மீறி எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிடுபவர்கள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சிறைத் தண்டனை மற்றும் அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளது.
ஏன் இந்தத் தடை?
-
தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முழுமையாக முடியும் வரை வாக்காளர்களின் மனநிலை திசைதிருப்பப்படக் கூடாது.
-
தேர்தல் செயல்முறை நியாயமாகவும், வெளிப்படையாகவும், எந்தவிதமான வெளிப்புறத் தாக்கங்களும் இன்றி நடைபெறுவதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















