தவெகவின் இளம் வேட்பாளர் ரேவந்த் சரண்..மதுரவாயல் தொகுதியில் 56 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!
தமிழக வெற்றிக் கழகத்தில் இளம் வேட்பாளர் ரேவந்த் சரன் மதுரவாயல் தொகுதியில் 56 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ரோகினி திரையரங்க உரிமையாளர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் இளம் வேட்பாளரான ரேவந்த் சரன் மதுரவாயல் தொகுதியில் 56 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட காரப்பாக்கம் கனபதி 14266 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார் . அதிமுக வேட்பாளர் 9860 வாக்குகளும் , நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2421 வாக்குகளும் பெற்றுள்ளார்கள்.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வரலாறு படைக்க இருக்கிறது. 234 தொகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார் . பெரம்பூரில் 34482 வாக்குகளைப் பெற்று 13574 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார். அதேபோல் திருச்சி கிழக்கில் 24884 வாக்குகள் பெற்று 9639 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.
தவெக வேட்பாளர் ரேவந்த் சரண் முன்னிலை
விஜயின் தீவிர ரசிகரும் சென்னை ரோகினி திரையரங்கத்தின் உரிமையாளர் ரேவந்த சரண். விஜய் படம் என்றாலே ரோகினி என்னும் அளவிற்கு இந்த திரையரங்கத்திற்கு ஒரு பராம்பரியம் இருந்து வருகிறது. இவர் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களில் இளம் வேட்பாளர் ஆவார். ரேவந்த் சரண் தான் போட்டியிட்ட மதுரவாயல் தொகுதியில் ஒன்றுக்கு பல முறை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு அப்பகுதி மக்களின் பிரச்சனைகளை பற்றி பேசி வந்தார். மதுரவாயல் பகுதியில் மக்கள் தங்கள் வாழும் இடத்திற்கு பட்டா இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதை தனது பிரச்சாரத்தின் போது சுட்டிக்காட்டினார். திமுக ஆட்சியும் சரி அதிமுக ஆட்சியும் சரி மதுரவாயல் பகுதியை குற்றம் நடக்கும் இடமாகவும் குப்பைமேடாக மட்டுமே வைத்திருப்பதாக ரேவந்த் தனது பிரச்சாரத்தின் போது சுட்டிக்காட்டினார்.
ட்ரெண்டிங் செய்திகள்



















