மேலும் அறிய

‛உன்னைச் சொல்லி குற்றமில்லை... என்னைச் சொல்லி குற்றமில்லை...காலம் செய்த கோலமடி...’ மாமியார்-மருமகளை மோத வைத்த சூழ்நிலை!

Sriperumbudu Urban Local Body Election 2022: மாமியாருக்கு அதிக ஓட்டு விழுகிறதா... மருமகளுக்கு அதிக ஓட்டு விழுகிறதா... என்று முடிவுக்காக காத்திருக்கிறது அந்த வார்டு.

தேர்தலில் மாமியார்-மருமகள் , தாய்-மகள், அப்பா-மகன் , அண்ணன்-தம்பி போட்டியிடுவதெல்லாம் பெரிய விசயமா? அதெல்லாம் காலம் காலமாகவா நடந்து கொண்டிருக்கும் விசயம் தான். ஆனால், அவையெல்லாம் அவர்களின் விருப்பத்தின் பேரில் தான் அமைந்த போட்டியாகும். ஆனால், ஸ்ரீபெரும்பதூரில் விருப்பமே இல்லாமல், மாமியாரும், மருமகளும் நேரடியாக போட்டியிடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதுவும் ‛காலத்தின்’ கோலத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் இறுதி வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர். ஆனால், 1வது வார்டில் மட்டும் ஒரு சுயேட்சை வேட்பாளர், எனக்கு ஓட்டு போடாதீங்க என கேட்டுக் கொண்டிருக்கிறார், 1வது வார்டு பக்தவச்சலம் நகரைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர், அந்த வார்டில் போட்டியிட சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தார்.


‛உன்னைச் சொல்லி குற்றமில்லை... என்னைச் சொல்லி குற்றமில்லை...காலம் செய்த கோலமடி...’ மாமியார்-மருமகளை மோத வைத்த சூழ்நிலை!

அனைவரை போல, அவரும், தனக்கு மாற்று வேட்பாளராக தனது மருமகள் புனிதவள்ளியை மனுத்தாக்கல் செய்ய வைத்திருந்தார். ஒருவேளை தனது மனு நிராகரிக்கப்பட்டால், தனது மருமகள் மனு ஏற்கப்படும் என்பதால் இந்த ஏற்பாடு. இது அனைவரும் செய்யும் வழக்கமான ஏற்பாடு தான். ஆனால், இருவரும் மனுவும் சரியாக இருந்ததால், பரிசீலனையின் போது அவை இரண்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இப்போது, மருமகள் புனிதவள்ளி தனது மனுவை வாபஸ் பெற வேண்டும். கடந்த திங்களன்று வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள். அன்றைய தினம் வேட்புமனுவை வாபஸ் பெற முடிவு செய்த புனித வள்ளி, காலையிலிருந்து மாலை வரை இருந்த நேரத்தையெல்லாம் விட்டு விட்டு, வீட்டில் சமைத்து முடித்து விட்டு மாலை 4 மணிக்கு மேல் உதவி தேர்தல் அலுவலரின் அலுவலகத்திற்கு சென்றார். ஆனால், நேரம் முடிந்ததை அவர் அறியவில்லை. அதை காரணமாக கூறி, அதிகாரிகள் வேட்புமனு வாபஸ் பெற முடியாது, நீங்கள் போட்டியிட்டு தான் ஆக வேண்டும் என தெரிவித்தனர். 


‛உன்னைச் சொல்லி குற்றமில்லை... என்னைச் சொல்லி குற்றமில்லை...காலம் செய்த கோலமடி...’ மாமியார்-மருமகளை மோத வைத்த சூழ்நிலை!

இதனால் அதிர்ச்சி அடைந்த புனிதவள்ளி, வீட்டில் வந்து விபரத்தை கூறியுள்ளார். குடும்பத்தாருக்கும் ஒரே அதிர்ச்சி. இப்படி ஆகிவிட்டதே என்று அனைவரும் குழம்பிவிட்டனர். மாமியருக்கு ஒரு சின்னம், மருமகளுக்கு ஒரு சின்னம் என தேர்தல் அலுவலர் சின்னத்தையும் ஒதுக்கிவிட்டார். இனி வேறு வழியே இல்லை. மாமியார் தான் பிரதான வேட்பாளர், எனவே தனக்கு யாரும் ஓட்டு போட்டுவிட வேண்டாம் என பிரச்சாரம் செய்யும் புனிதவள்ளி, தனது மாமியாருக்கு ஓட்டளிக்குமாறு பிரச்சாரம் செய்து வருகிறார். 

மாமியாருக்கு அதிக ஓட்டு விழுகிறதா... மருமகளுக்கு அதிக ஓட்டு விழுகிறதா... என்று முடிவுக்காக காத்திருக்கிறது அந்த வார்டு. நாமும் காத்திருப்போம். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK PMK Alliance : பாமக போஸ்டரில் ஜெ. படம்! EPS மாஸ்டர் ப்ளான்!விறுவிறுக்கும் விக்கிரவாண்டிHathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Embed widget