மேலும் அறிய

Postal Vote : முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு.! தேதி குறித்த தேர்தல் ஆணையம்- எப்போ தெரியுமா.?

 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர் மற்றும் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் என அடையாளப்படுத்தப் பட்டவர்கள் தபால் ஓட்டு மூலம் தங்கள் வாக்கு செலுத்த தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. அந்த வகையில் ஏப்ரல் 3 ஆம் தேதி ஆவணங்களை சமர்பிக்க கடைசி நாளாகும்.

தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணையம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இன்னும் 33 நாட்கள் மட்டுமே இருப்பதால் வாக்கப்பதிவிற்கான இயந்திரங்களை தயார் செய்வது, வாக்குப்பதிவு மையங்களை ஏற்பாடு செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 30ஆம் தேதி முதல் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படவுள்ளது. ஏற்கனவே அரசு ஊழியர்கள், காவல்துறையினர், போக்குவரத்து துறையினர், பத்திரிக்கையாளர்கள் என பல தரபினருக்கு தபால் வாக்குகை தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது. அந்த வகையில்  85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர் மற்றும் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் என அடையாளப்படுத்தப் பட்டவர்கள் தபால் ஓட்டு மூலம் தங்கள் வாக்கு செலுத்த தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.

தபால் வாக்கு- ஏற்பாடு தீவிரம்

இதன் படி  85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 3.99 லட்சம் பேரும், மாற்றுத் திறனாளிகளாக  அடையாளப்படுத்த பட்ட 4.63 லட்சம் வாக்காளர்களும் தபால் வாக்கு அளிக்க தகுதி உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.  எனவே தபால் வாக்குகளை பதிவு செய்த இவர்கள் படிவம் 12டி பயன்படுத்தி, தேர்தல் அறிவிக்கை வெளியான 5 நாட்களுக்குள் (ஏப்ரல் 3ம் தேதிக்குள்) சம்பந்தப்பட்ட வாக்கு சாவடி நிலை அலுவலர் மூலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்தப் படிவத்தின் அடிப்படையில் தபால் வாக்குகளை சேகரிக்க தேர்தல் அலுவலர்களை கொண்ட குழுக்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று வாக்குகளை சேகரிக்கும். இதற்கான கால அட்டவணை தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வேட்பாளர்களுக்கு பகிரப்படவுள்ளது. தேர்தல் அலுவலர்கள் வாக்காளர் வீட்டிற்கு சென்று  நேரில் சென்று ஒப்புதல் பெறுவர். படிவத்தை பூர்த்தி செய்து திரும்ப வழங்குபவர்களுக்கு மட்டும் ஓட்டுப்பதிவு செய்ய ஏதுவாக, வாக்காளர் வீட்டுக்கு ஓட்டுப்பதிவு அலுவலர்கள் வரும் நாள், நேரம் குறித்து தகவல் அனுப்புவார்கள். போன் இல்லாதவர்களுக்கு தபால் மூலம் அல்லது ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் மூலம் தகவல் தெரிவிப்பர். 

தபால் வாக்கு செலுத்தும் முறை .?

குறிப்பிட்ட நாள், நேரத்தில் ஓட்டுச்சாவடி அலு-வலர் குழு வாக்காளர் வீடு வந்து, அடையாளத்தை சரி பார்த்து, கையெழுத்து அல்லது கைரேகை பெற்று தபால் ஓட்டுச்சீட்டு வழங்கப்படும்.வாக்காளர் கண் பார்வையற்றஅல்லது உடல் நலிந்து ஓட்டுப்-போட இயலாதவராக இருந்தால் அவரது சார்பில் கட்சி சார்பற்ற வயது வந்த ஒருவரை, ஓட்டுப்பதிவை ரகசியம் காப்பு உறுதிமொழி பெற்று, ஓட்டுப்போட அனுமதிக்கபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
Embed widget