மேலும் அறிய

PM Modi: மக்களவை தேர்தல் - 76 நாட்களில் 206 பேரணிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி - கடைசியாக தியானம்..!

PM Modi: நாடாளுமன்ற மக்களவை தேர்தலையோட்டி பிரதமர் மோடி 76 நாட்களில், 200-க்கும் மேற்பட்ட பரப்புரை தொடர்பான பேரணிகளில் ஈடுபட்டுள்ளார்.

PM Modi: நாடாளுமன்ற மக்களவ தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, தற்போது கன்னியாகுமரியில் தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல்:

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலின் ஏழு கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதையடுத்து கடைசி கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெற்று, ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு, தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தனர்.

அந்தவகையில், தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சூறாவளி பரப்புரயை மேற்கொண்டார்.

200-க்கும் மேற்பட்ட பரப்புரை கூட்டங்கள்:

அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி 76 நாட்களில் 206 தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு நாட்டில் சாதனை படைத்துள்ளார். தேர்தல் அட்டவணை வெளியான மார்ச் 16 முதல் மே 30 வரை 76 நாட்கள் பேரணிகள், சாலை நிகழ்ச்சிகள், கூட்டங்கள் என 206 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்றார். கடந்த மூன்று நாட்களாக ஒரு நாளைக்கு ஐந்து பரப்புரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அதுமட்டுமின்றி கடந்த 22 நாட்களாக தினமும் நான்கு இடங்களில் பரப்புரையில் ஈடுபட்டார். மே மாதத்தில், இந்தியா முழுவதும் 96 பரப்புரை நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

நான்கு மாநிலங்களில் கூடுதல் கவனம்:

பிரதமர் மோடி நான்கு மாநிலங்களில் குறிப்பிட்டு அதிக கவனம் செலுத்தினார். நாட்டிலேயே அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட (80 இடங்கள்) உத்தரப் பிரதேசத்தில், அதிகபட்சமாக 31 தேர்தல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றினார். கடந்த தேர்தலில் அந்த மாநிலத்தில் 64 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இம்முறையும் அந்த மாநிலத்தில் தனது பலத்தை காட்ட வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கமாகும்.

அதனை தொடர்ந்து,  பீகாரில் 20 தேர்தல் பரப்புரைகளில் பிரதமர் பங்கேற்றார். மகாராஷ்டிராவில் 19 நிகழ்ச்சிகளிலும், மேற்கு வங்கத்தில் 18 நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பரப்புரை மேற்கொண்டார்.  குறிப்பாக இந்த தேர்தல் மூலம் மேற்கு வங்கத்தில் தனது பலத்தை அதிகரிக்க பாஜக விரும்புகிறது.

அதனால்தான் கொல்கத்தாவில் பிரமாண்ட ரோட் ஷோவுடன் 18 பிராந்தியங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். மும்பை மற்றும் பாட்னாவில் நடந்த பிரதமர் மோடியின் ரோட்ஷோவிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒடிசாவில் தடம் பதிக்க முனைப்பு:

ஒடிசாவில் பாஜக தனித்து போட்டியிட்டுள்ளது. முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை வீழ்த்தும் நோக்கில், பூரியில் பிரமாண்ட ரோட் ஷோ உட்பட 10 பேரணிகளில் பங்கேற்றார்.  மத்திய பிரதேசத்தில் 10 பகுதிகளிலும், ஜார்கண்டில் 7 இடங்களிலும் மோடி பிரசாரம் செய்தார். ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் தலா நான்கு பிராந்தியங்களில் பிரச்சாரம் நடத்தப்பட்டது.

தென்னிந்தியாவில் இருப்பை தக்கவைக்க தீவிரம்:

தென் மாநிலங்களில் பாஜக தனது இருப்பை தக்கவைக்க போராடி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட  ஐந்து மாநிலங்களிலும் 35 தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதிலும் அதிகபட்சமாக கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் தலா 11 நிகழ்ச்சிகளிலும், தமிழகத்தில் 7 நிகழ்ச்சிகளிலும் மோடி பங்கேற்றார். 

சொந்த மாநிலத்தில் 5 பரப்புரை நிகழ்ச்சிகள்:

பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் ஐந்து பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்தினார்.  பஞ்சாபில் நான்கு பேரணிகளும், ஹரியானாவில் மூன்று பேரணிகளும் நடத்தப்பட்டன. டெல்லி, இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு பேரணிகள் நடத்தப்பட்டன.  இருப்பினும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக துண்டாடப்பட்ட காஷ்மீர் மற்றும் பெரும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் ஆகிய பகுதிகளில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடவில்லை.

முன்னதாக,  2019 தேர்தலின் போது ​​பிரதமர் மோடி சுமார் 145 பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Pongal Gift 2026: 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
Nissan Kait SUV: இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
Heavy Rain Alert: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் அலர்ட்
மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை மையம் அலர்ட்
Embed widget