மேலும் அறிய

உள்ளாட்சித் தேர்தல்: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரேநாளில் 4,170 பேர் மனுதாக்கல்

’’ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் நிறைவு’’

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில், நெல்லை மாவட்டத்தில் 9 யூனியன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதில் 204 பஞ்சாயத்து தலைவர்கள், 1,731 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 122 யூனியன் வார்டு உறுப்பினர்கள், 12 மாவட்ட பஞ்சாயத்து குழு உறுப்பினர்கள் நேரடியாக வாக்காளர்களால் ஓட்டு போட்டு தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.


உள்ளாட்சித் தேர்தல்:  நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரேநாளில் 4,170 பேர் மனுதாக்கல்

வாக்குப்பதிவு வருகிற 6ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதி என 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை மந்தகதியில் இருந்த வேட்புமனு தாக்கல் நேற்று விறுவிறுப்பு அடைந்தது. யூனியன் அலுவலகங்கள், பஞ்சாயத்து அலுவலங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,885 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நேற்று முன்தினம் வரை 218 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று மேலும் 483 பேர் மனு தாக்கல் செய்தனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 701 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏற்கனவே 870 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 1,234 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

உள்ளாட்சித் தேர்தல்:  நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரேநாளில் 4,170 பேர் மனுதாக்கல்
 
இவர்களுடன் சேர்த்து 2,104 பேர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்து உள்ளனர். யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு இதுவரை 23 பேரும், நேற்று 162 பேர் என மொத்தம் 185 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். மாவட்ட பஞ்சாயத்து குழு உறுப்பினர் பதவிக்கு இதுவரை யாருமே மனு தாக்கல் செய்யாத நிலையில் நேற்று 6 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நெல்லை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2,996 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2,285 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 556 பேரும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,503 பேரும், யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு 211 பேரும், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 15 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று ஒரேநாளில் 4,170 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

கொரோனா குறித்த அச்சம் கொஞ்சம் கூட இல்லாமல் மூச்சு விட கூட இடமில்லாமல் சமூக இடைவெளியின்றி நெல்லை மாவட்டம் பாளையம்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூடிய கூட்டம் . கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர் . பாளையம்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள சாலையில் சித்தா கல்லூரி உள்ளது மேலும் கல்லூரிகள் பள்ளிகள் திறந்ததால் காலை மாலை வேளையில் மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் செய்ய வருவோரிடம் ஒரு கிராமமே அவர்களுடன் வருகிறார்கள். மேலும் குறுகிய சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் அந்தப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது . இதுமட்டுமின்றி தேவையற்ற கூட்டங்களை கட்டுப்படுத்த பாளையம்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget