மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

Priyanka Gandhi: ”எங்க அப்பா பெற்ற வாரிசு உரிமை இதுதான்” : பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு பிரியங்கா பதிலடி

Lok Sabha Election 2024: வாரிசு உரிமை தொடர்பாக காங்கிரஸ் மீதான பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார்.

Lok Sabha Election 2024: தங்களது குடும்பத்தினர் செய்த தியாகத்தை பிரதமர் மோடி புரிந்து கொள்ள மாட்டார் என்று,  காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி ஆவேசம்:

கடந்த வாரம் மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்த பிறகு தனது தாயிடமிருந்து பெற்ற சொத்துக்கு வரி விதிக்கப்படக்கூடாது என்பதற்காக,  வாரிசு வரியை ரத்து செய்தார் என்று குற்றம் சாட்டினார். காங்கிரஸ் மீண்டும் வாரிசு வரி விதிக்க திட்டமிட்டு வருவதாகவும் தொடர்ந்து சாடி வருகிறார். இந்நிலையில் மொரேனாவில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆவேசமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பதிலளித்துள்ளார். 

”உயிர் தியாகமே ராஜிவ் காந்தி பெற்ற உரிமை”

அதன்படி, ”எனது தந்தை ராஜீவ் காந்தி உயிர் தியாகத்தை தான் அவரது தாயாரிடமிருந்து வாரிசு உரிமையாக பெற்றாரே தவிர, சொத்துக்களை அல்ல. இதை மோடி புரிந்துகொள்ளமாட்டார். இந்திரா காந்தி போன்ற பெண்ணைப் பற்றி மோடி முட்டாள்தனமாக பேசும்போது, ​​​​ வம்ச அரசியலை மட்டுமே பார்க்கிறார். எங்களது குடும்பம் செய்த தியாகத்தை புரிந்துகொள்ளமாட்டார்.  ஆனால், இந்த மாதிரியான கோபம் நீங்கள் மிகவும் நேசிக்கும் ஒருவருக்காக என்று இப்போது நான் புரிந்துகொள்கிறேன். மோடி எனது தந்தையை துரோகி என்று அழைக்கும்போதும், வாரிசு சொத்துகளுக்காக எனது தந்தை சட்டத்தை திருத்தினார் என்றுசொல்லும்போதும்,  இந்த நாட்டின் மீது நான் வைத்திருக்கும் அன்பை  நான் எப்படி விளக்க முடியும்” என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

தந்தையால் தியாகத்தை உணர்ந்தேன் - பிரியங்கா:

மேலும், “ நீங்கள் எங்களை துரோகிகள் என்று சொன்னாலும், நாட்டை விட்டு துரத்தினாலும், சட்ட வழக்குகளில் கட்டிப் போட்டாலும், அதற்கும் மேல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், எங்களை கொலையும் செய்யுங்கள். ஆனால், நாட்டின் மீதான எங்களது தேசபக்தியை இதயத்திலிருந்து நீக்க முடியாது. 

எனக்கு 19 வயதாக இருந்தபோது என் தந்தையை துண்டுகளாக வீட்டிற்கு கொண்டு வந்தனர். ​​​​அப்போது எனது நாட்டின் மீது நான் கோபமாக இருந்தேன்.  நான் என் தந்தையை அனுப்பினேன்,  அவரைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது உங்கள் கடமை. ஆனால்,  நீங்கள் அவரை துண்டுகளாக என்னிடம் திருப்பி அனுப்பினீர்கள். சிதறிப்போன எனது தந்தையின் உடல் பாகங்கள்  தேசியக் கொடியில் மூடப்பட்டு இருந்தன. அப்போது தியாகம் என்பதற்கான அர்த்தம் எனக்குப் புரிந்தது. இன்று எனக்கு 52 வயதாகிறது. இது குறித்து பொது மேடையில் பேசுவது இதுவே முதல் முறை.

ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிவிட்டனர் - பிரியங்கா:

நாட்டில் வேலையின்மை விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.  அரசாங்க பணிகளுக்கான தேர்வுகள் தொடர்பான வினாத்தாள் கசிவுகளால் ஆட்சேர்ப்பு நடவடிக்கை பாதிக்கப்படுகிறது.  அதே நேரத்தில் மோடி அரசாங்கம் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகளை மூடுகிறது.  20 முதல் 22 தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது. மோடி அரசின் கீழ், கடந்த பத்து ஆண்டுகளில் ஏழைகள் மேலும் ஏழைகளாகிவிட்டனர்” என பிரியங்கா காந்தி கடுமையாக சாடினார்.

ராஜீவ் காந்தியின் தாயும், மறைந்த பிரதமருமான இந்திரா காந்தி, அக்டோபர் 31, 1984 அன்று டெல்லியில், தனது  வீட்டில் தனது இரண்டு சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மே 21, 1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: வெளியே செல்லும் மக்களே..! 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
வெளியே செல்லும் மக்களே..! 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
Breaking News LIVE: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
Rasipalan: கடகத்துக்கு புத்துணர்ச்சி! மிதுனத்துக்கு தடுமாற்றம்! எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: கடகத்துக்கு புத்துணர்ச்சி! மிதுனத்துக்கு தடுமாற்றம்! எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
IND vs IRE T20 World Cup 2024: ஹிட்மேன் ரோஹித்தின் கலக்கல் அரைசதம்.. அசால்ட்டாக அயர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி!
ஹிட்மேன் ரோஹித்தின் கலக்கல் அரைசதம்.. அசால்ட்டாக அயர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

PM Modi vs I.N.D.I.A Alliance : மோடிக்கு எதிராக ஸ்கெட்ச்..ராகுல் எடுத்த முக்கிய முடிவு!Edappadi Palanisamy : ’’நான் தான் கிங்’’எகிறி அடித்த எடப்பாடி சறுக்கிய அ.மலை!Edappadi Palanisami : பத்து முறை தோல்வி! வெற்றிக்கு திண்டாடும் EPS தத்தளிக்கும் அதிமுகChandrababu Naidu Decision : ’’NDA தான் ஆனால்..மக்கள் நலனுக்காக!’’சந்திரபாபு நாயுடு அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: வெளியே செல்லும் மக்களே..! 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
வெளியே செல்லும் மக்களே..! 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
Breaking News LIVE: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
Rasipalan: கடகத்துக்கு புத்துணர்ச்சி! மிதுனத்துக்கு தடுமாற்றம்! எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: கடகத்துக்கு புத்துணர்ச்சி! மிதுனத்துக்கு தடுமாற்றம்! எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
IND vs IRE T20 World Cup 2024: ஹிட்மேன் ரோஹித்தின் கலக்கல் அரைசதம்.. அசால்ட்டாக அயர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி!
ஹிட்மேன் ரோஹித்தின் கலக்கல் அரைசதம்.. அசால்ட்டாக அயர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி!
10 years of Manjapai: கண்கலங்க வைத்த தாத்தா - பேரன் உறவு -  'மஞ்சப்பை' படம் வெளியாகி 10 வருஷமாச்சு..!
10 years of Manjapai: கண்கலங்க வைத்த தாத்தா - பேரன் உறவு - 'மஞ்சப்பை' படம் வெளியாகி 10 வருஷமாச்சு..!
Anjaamai movie Review: நீட் தேர்வு அவலத்தை தோல் உரித்ததா அஞ்சாமை? ரசிகர்கள் மனதை வென்றதா? முழு திரைவிமர்சனம்
Anjaamai movie Review: நீட் தேர்வு அவலத்தை தோல் உரித்ததா அஞ்சாமை? ரசிகர்கள் மனதை வென்றதா? முழு திரைவிமர்சனம்
Rajinikanth :
"என்னுடைய நண்பர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்".. ஆன்மிக பயணத்தை முடித்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த்!
TN Weather Update: 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வெப்பநிலை எப்படி இருக்கும்?
TN Weather Update: 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வெப்பநிலை எப்படி இருக்கும்?
Embed widget