![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IJK Campaign : வாரிசு அரசியல் முடிவுக்கு நேரம் வந்துவிட்டது.. பாரிவேந்தரை ஆதரித்து ஜே.பி. நட்டா பரப்புரை
Lok Sabha Elections 2024: பெரம்பலூர் மக்களவை தொகுதியில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா ஐ.ஜே.கே. கட்சி வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
![IJK Campaign : வாரிசு அரசியல் முடிவுக்கு நேரம் வந்துவிட்டது.. பாரிவேந்தரை ஆதரித்து ஜே.பி. நட்டா பரப்புரை Lok Sabha Elections BJP National President JP Nadda Election Campaign in Trichy Parivendhar IJK Campaign : வாரிசு அரசியல் முடிவுக்கு நேரம் வந்துவிட்டது.. பாரிவேந்தரை ஆதரித்து ஜே.பி. நட்டா பரப்புரை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/17/c2afcbd02466cefd82c9f419b0a3b6031713336303646333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே வேட்பாளர் டாக்டர். பாரிவேந்தரை ஆதரித்து, முசிறி கை.காட்டி பகுதியில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வரும் 19-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கூட்டணி மற்றும் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் பரப்புரை
இந்திய ஜனநாயக கூட்டணியின் ஐ.ஜே.கே கட்சி வேட்பாளர் பாரிவேந்தருக்கு ஆதரவாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள முசிறியில் ஜெ.பி. நட்டா வாகன பேரணி மூலம் வாக்கு சேகரித்தார். அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பரப்புரையில் பேசிய ஜெ.பி.நட்டா, நாட்டு மக்கள் உயர்வதற்கான உத்தரவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி உள்ளதாகவும், தமிழ் கலாசாரத்தின் மீது பற்று இருப்பதால் நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவி உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கு 11 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளதாக கூறினார். தி.மு.க. என்றால் வாரிசு அரசியல், பணமோசடி, கட்டபஞ்சாயத்து என்றுதான் அர்த்தம் என ஆங்கில வார்த்தைகளை சுட்டிக்காட்டி விமர்சித்த ஜெ.பி.நட்டா, இவற்றுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)