மேலும் அறிய

முதல் நாளிலேயே சுணக்கம்... வேட்புமனு தாக்கல் செய்ய வராததால் காற்று வாங்கிய கலெக்டர் அலுவலகம்

கோடை வெயில் ஒரு புறம் கொளுத்த தொடங்கி உள்ள நிலையில் மறுபுறம் பாராளுமன்ற தேர்தல் அனலை கிளப்ப தொடங்கி உள்ள நிலையில் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு மத்தியில் மனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை.

தஞ்சாவூர்: கோடை வெயில் ஒரு புறம் கொளுத்த தொடங்கி உள்ள நிலையில் மறுபுறம் பாராளுமன்ற தேர்தல் அனலை கிளப்ப தொடங்கி உள்ள நிலையில் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு மத்தியில் மனு தாக்கல் செய்ய யாரும் வராததால் முதல்நாள் தஞ்சை கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியது.  

தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் நேற்று வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்ய வரவில்லை. தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த மாதம் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வருகிற 27ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற 30ம் தேதி கடைசி நாள் ஆகும்.

பாராளுமன்ற தேர்தல் அதிகாரி

தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அதிகாரியாக கலெக்டர் தீபக் ஜேக்கப்பும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக 12 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் அடங்கியுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு 2 உதவி அதிகாரிகள் வீதம் 12 உதவி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரான கலெக்டரிடம் தாக்கல் செய்ய வேண்டும்  இதே போல் தஞ்சையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.


முதல் நாளிலேயே சுணக்கம்... வேட்புமனு தாக்கல் செய்ய வராததால் காற்று வாங்கிய கலெக்டர் அலுவலகம்

எல்லைக்கோடுகள் அமைப்பு

இதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் படி கலெக்டர் அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு 100 மற்றும் 200 மீட்டர் தூரத்தில் சாலையில் எல்லை கோடுகள் வரையப்பட்டுள்ளன. இந்த எல்லைக் கோட்டுக்கு அப்பால் தான் வேட்பாளர்கள் வரும் வாகனங்களை நிறுத்த வேண்டும். மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4 அல்லது 5 பேர் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல் நாளான நேற்று தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரும் மனுதாக்கல் செய்ய வரவில்லை. இனி வரக்கூடிய நாட்களில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய வருவார்கள். இதனை முன்னிட்டு கலெக்டர் அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய வருவதை முன்னிட்டு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வரும் 27ம் தேதி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வெளிப்புறம், நுழைவாயில் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் பணியமத்தப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் மெட்டல் டிடெக்டர் வைத்து உள்ளே வருபவர்கள் முழு பரிசோதனைக்கு பின்பு அனுமதிக்கப்பட்டனர். மேலும் வேட்பாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேட்பு மனுதாக்கல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Embed widget