மேலும் அறிய

முதல் நாளிலேயே சுணக்கம்... வேட்புமனு தாக்கல் செய்ய வராததால் காற்று வாங்கிய கலெக்டர் அலுவலகம்

கோடை வெயில் ஒரு புறம் கொளுத்த தொடங்கி உள்ள நிலையில் மறுபுறம் பாராளுமன்ற தேர்தல் அனலை கிளப்ப தொடங்கி உள்ள நிலையில் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு மத்தியில் மனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை.

தஞ்சாவூர்: கோடை வெயில் ஒரு புறம் கொளுத்த தொடங்கி உள்ள நிலையில் மறுபுறம் பாராளுமன்ற தேர்தல் அனலை கிளப்ப தொடங்கி உள்ள நிலையில் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு மத்தியில் மனு தாக்கல் செய்ய யாரும் வராததால் முதல்நாள் தஞ்சை கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடியது.  

தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் நேற்று வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்ய வரவில்லை. தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த மாதம் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வருகிற 27ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற 30ம் தேதி கடைசி நாள் ஆகும்.

பாராளுமன்ற தேர்தல் அதிகாரி

தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அதிகாரியாக கலெக்டர் தீபக் ஜேக்கப்பும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக 12 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் அடங்கியுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு 2 உதவி அதிகாரிகள் வீதம் 12 உதவி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரான கலெக்டரிடம் தாக்கல் செய்ய வேண்டும்  இதே போல் தஞ்சையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.


முதல் நாளிலேயே சுணக்கம்... வேட்புமனு தாக்கல் செய்ய வராததால் காற்று வாங்கிய கலெக்டர் அலுவலகம்

எல்லைக்கோடுகள் அமைப்பு

இதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் படி கலெக்டர் அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு 100 மற்றும் 200 மீட்டர் தூரத்தில் சாலையில் எல்லை கோடுகள் வரையப்பட்டுள்ளன. இந்த எல்லைக் கோட்டுக்கு அப்பால் தான் வேட்பாளர்கள் வரும் வாகனங்களை நிறுத்த வேண்டும். மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4 அல்லது 5 பேர் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல் நாளான நேற்று தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரும் மனுதாக்கல் செய்ய வரவில்லை. இனி வரக்கூடிய நாட்களில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய வருவார்கள். இதனை முன்னிட்டு கலெக்டர் அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய வருவதை முன்னிட்டு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வரும் 27ம் தேதி வரை வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வெளிப்புறம், நுழைவாயில் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் பணியமத்தப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் மெட்டல் டிடெக்டர் வைத்து உள்ளே வருபவர்கள் முழு பரிசோதனைக்கு பின்பு அனுமதிக்கப்பட்டனர். மேலும் வேட்பாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேட்பு மனுதாக்கல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செ கொடுத்த திடீர் ட்விஸ்ட்
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செயலாளர்கள் கொடுத்த திடீர் ட்விஸ்ட்
North Korea tests missile: டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
Trump India: வெனிசுலா பிரச்னைக்கு மத்தியில் இந்தியாவிற்கு ட்ரம்ப் வார்னிங்.. ”எங்களுக்கு உதவி செய்யலைன்னா”
Trump India: வெனிசுலா பிரச்னைக்கு மத்தியில் இந்தியாவிற்கு ட்ரம்ப் வார்னிங்.. ”எங்களுக்கு உதவி செய்யலைன்னா”
SSTA Strike: இன்னும் சிறிது நேரத்தில் குட் நியூஸ்.. ஆசிரியர்களுக்கு சம ஊதியம்- அமைச்சர் பேச்சுவார்த்தை! 
SSTA Strike: இன்னும் சிறிது நேரத்தில் குட் நியூஸ்.. ஆசிரியர்களுக்கு சம ஊதியம்- அமைச்சர் பேச்சுவார்த்தை! 
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செ கொடுத்த திடீர் ட்விஸ்ட்
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செயலாளர்கள் கொடுத்த திடீர் ட்விஸ்ட்
North Korea tests missile: டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
Trump India: வெனிசுலா பிரச்னைக்கு மத்தியில் இந்தியாவிற்கு ட்ரம்ப் வார்னிங்.. ”எங்களுக்கு உதவி செய்யலைன்னா”
Trump India: வெனிசுலா பிரச்னைக்கு மத்தியில் இந்தியாவிற்கு ட்ரம்ப் வார்னிங்.. ”எங்களுக்கு உதவி செய்யலைன்னா”
SSTA Strike: இன்னும் சிறிது நேரத்தில் குட் நியூஸ்.. ஆசிரியர்களுக்கு சம ஊதியம்- அமைச்சர் பேச்சுவார்த்தை! 
SSTA Strike: இன்னும் சிறிது நேரத்தில் குட் நியூஸ்.. ஆசிரியர்களுக்கு சம ஊதியம்- அமைச்சர் பேச்சுவார்த்தை! 
நனவாகும் வெளிநாட்டு கனவு! கத்தாரில் இலவச உயர்கல்வி: முழு உதவித்தொகை அறிவிப்பு- என்ன தகுதி?
நனவாகும் வெளிநாட்டு கனவு! கத்தாரில் இலவச உயர்கல்வி: முழு உதவித்தொகை அறிவிப்பு- என்ன தகுதி?
Tn Govt free laptop: மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
Top 10 News Headlines: மாணவர்களுக்கு லேப்டாப், வேதாந்தாவிற்கு அனுமதி, ஐபோன் ஏற்றுமதி அபாரம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மாணவர்களுக்கு லேப்டாப், வேதாந்தாவிற்கு அனுமதி, ஐபோன் ஏற்றுமதி அபாரம் - 11 மணி வரை இன்று
DMK vs Congress: கூட்டணி ஆட்சி.! நேரம் பார்த்து திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் காங்.எம்பி- அசால்டு செய்யும் திமுக
கூட்டணி ஆட்சி.! நேரம் பார்த்து திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் காங்.எம்பி- அசால்டு செய்யும் திமுக
Embed widget