மேலும் அறிய

Lok Sabha Election: யாருக்கு பறிபோகிறது வாய்ப்பு? தமிழ்நாட்டில் இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை..!

Lok Sabha Election: மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட, வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட உள்ளன.

Lok Sabha Election: தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட, ஆயிரத்து 749 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

1, 749 வேட்புமனுக்கள்:

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் முடிவடைந்தது. அதற்கு பிறகு வந்தவர்களுக்கு டோக்கன் அடிப்படையில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் ஆயிரத்து 749 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. 

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 73 பேரும், அதற்கு அடுத்தபடியாக வடசென்னையில் 67 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 31 பேரும், தென்சென்னையில் 28 பேரும் மத்திய சென்னையில் 22 பேரும்,  நாகப்பட்டினம் தொகுதியில் 26 பேரும், சிதம்பரம் தொகுதியில் 27 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.  இதனிடையே, விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட 18 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனு பரிசீலனை:

பெறப்பட்ட வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பொதுப்பார்வையாளர்கள் முன்பு இன்று பரிசீலனை செய்வார்கள். அதில் முறையாக கையொப்பமிடாத, சரியாக பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும். ஏற்கப்பட்ட வேட்புமனுக்களை திரும்பப் பெற விண்ணப்பதாரர்களுக்கு வரும் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். அதைதொடர்ந்து தொகுதி வாரியாக இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும்.

சின்னம் ஒதுக்கீடு..!

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு சின்னங்கள் கிடைப்பதில் பெரும்பாலும் சிக்கல் இருக்காது. அதற்கான படிவம் கிடைத்ததும் சின்னம் ஒதுக்கப்பட்டு விடும். மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு அவர்கள் கேட்கும் சின்னத்தை வேறு யாரும் கேட்காமல் இருந்தால் கிடைத்து விடும். இல்லையென்றால் தேர்தல் கமிஷன் குலுக்கல் முறையில் ஒதுக்கக் கூடும்.

களைகட்டிய வேட்புமனு தாக்கல்:

நாடு முழுவதுமுள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதில் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த 20ம் தேதி தொடங்கியது. முதல் நான்கு நாட்கள் சுயேச்சைகளே அதிகப்படியாக வேட்புமனு தாக்கல் செய்தனர். தேர்தல் அலுவலர் அலுவலகத்திற்கு மாட்டு வண்டியில் வருவது, கராத்தே செய்து கொண்டு வருவது, நடனமாடியபடி வருவது என பல்வேறு நூதன செயல்பாடுகளுடன் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால், தேர்தல் அலுவலர்களின் அலுவலகங்கள் களைகட்டின.

நட்சத்திர வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்:

நாடாளுமன்ற மக்களவை தேர்தல்லில், தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மற்றும் பாஜக என மூன்று பெரும் கூட்டணிகள் தேர்தலை சந்திக்க, நாம் தமிழர் கட்சி மீண்டும் தனித்து களம் காண்கிறது. இதனால் மாநிலத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து கடந்த திங்கட்கிழமை முதல் அதிதீவிரமாக வேட்புமனுதாக்கல் செய்தனர். பங்குனி உத்திரமான அன்றைய தினத்தில் அதிமுக சார்பில் களம் காணும் 33 வேட்பாளர்களும் வேட்புமனுதாக்கல் செய்தனர். அன்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 400-க்கும் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget