மேலும் அறிய

Lok Sabha Election 2024: ஆந்திராவில் அதிகபட்சமாக 68.04 % வாக்குகள்.. 4ம் கட்ட மக்களவை - வாக்குப்பதிவு சதவீதம்?

இன்று மாலை 5 மணி நிலவரப்படி, ஒட்டுமொத்தமாக 62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தலின் 4ம் கட்ட வாக்குப்பதிவானது இன்று 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளில் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த 96 தொகுதிகளிலும் எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் இன்று இரவு அல்லது நாளை காலை அதிகாரப்பூர்வமாக அறிக்கையாக வெளியிடும். 

2024 மக்களவைத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவின் ஒரு பகுதியாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் இன்று மாலை 5 மணி வரை தோராயமாக 62.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 4ம் கட்ட தேர்தல் நடைபெற்ற 8 தொகுதிகளில் 75.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதனை தொடர்ந்து, ஆந்திராவில் 68.04 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 68.01 சதவீதமும், ஜார்கண்டில் 63.14 சதவீதமும், பீகாரில் 54.14 சதவீதமும், மகாராஷ்டிராவில் 52.49 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 56.35 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

மாநில வாரியாக 4ஆம் கட்ட வாக்களிப்பு விகிதம் பின்வருமாறு:

  1. ஆந்திரப் பிரதேசம்: 68.04%
  2. பீகார்: 54.14%
  3. ஜம்மு காஷ்மீர்: 35.75%
  4. ஜார்கண்ட்: 63.14%
  5. மத்தியப் பிரதேசம்: 68.01%
  6. மகாராஷ்டிரா: 52.49%
  7. ஒடிசா: 62.96%
  8. தெலுங்கானா: 61.16%
  9. உத்தரப் பிரதேசம்: 56.35%
  10. மேற்கு வங்காளம்: 75.66%

எத்தனை 3 மணிநிலவரப்படி எத்தனை சதவீத வாக்குகள்

நான்காம் கட்ட மக்களவைத் தேர்தலின் 96 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெற்றது. இன்று நடைபெற்ற 96 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தலில் காலை 7 மணி முதல் 9 மணிவரை வெறும் 10 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியது. அதனை தொடர்ந்து, முதல் 4 மணிநேர நிலவரப்படி, 24 சதவீத வாக்குகளும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52 சதவீத வாக்குகள் பதிவாகின. 

தொடர்ந்து, மாலை 5 மணி வரை 62 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. 

எங்கெங்கு தேர்தல் நடைபெற்றது..? 

தெலங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளிலும், ஆந்திராவில் 25 இடங்களிலும், உத்தரப் பிரதேசத்தில் 13, பீகாரில் 5, ஜார்க்கண்டில் 4, மத்தியப் பிரதேசத்தில் 8, மகாராஷ்டிராவில் 11, ஒடிசாவில் 4, மேற்கு வங்கத்தில் 8 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் நடைபெறும் முதல் மக்களவை தேர்தல் இதுவாகும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளிலும், ஒடிசாவில் 28 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

இன்று களமிறங்கிய முக்கிய வேட்பாளர்கள் யார் யார்..? 

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், டிஎம்சியின் முன்னணி தலைவர் மொஹுவா மொய்த்ரா, ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசாதுதீன் ஓவைசி, காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திரினாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஒய்எஸ் ஷர்மிளா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படும், அடுத்த 5 ஆண்டுகள் நம்மை ஆளும் பிரதமர் யார் என்பது தெரியவரும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?Chennai's Amirtha | அடுத்த கட்ட பாய்ச்சலில் பிரபல கல்வி குழுமம்..பிராண்ட் அம்பாசிடராக ஸ்ரீலீலாJagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Vidamuyarchi Update : திரிஷாவின் கணவராக நடிக்கவிருக்கும் அஜித் குமார்.. விடாமுயற்சி படத்தின் புது புது அப்டேட்!
Vidamuyarchi Update : திரிஷாவின் கணவராக நடிக்கவிருக்கும் அஜித் குமார்.. விடாமுயற்சி படத்தின் புது புது அப்டேட்!
Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்
Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்
ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!
ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!
Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு
Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு
Embed widget