மேலும் அறிய

தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தனை வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

தூத்துக்குடி மாவட்டத்தில் 1622 வாக்கு சாவடிகள் உள்ளன. மேலும் 2 துணை வாக்கு சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் ஆறு சட்டப்பேரவை தொகுதியில் உள்ளன. இவைகளில் மொத்தம் 1622 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாகப் பிடிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்து உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி ஆகிய தொகுதியில் தலா ஒரு வாக்குச்சாவடியை இரண்டாகப் பிரிக்க தேர்தல் ஆணையத்திற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தால் தூத்துக்குடி மக்களை தொகுதியில் மொத்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 1624 ஆக உயரும்.


தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தனை வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

தற்போதைய நிலையில் 256 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை எனவும், இரண்டு வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவை முழுமையாக வெப் கேமரா மூலம் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான வாக்கிய எண்ணிக்கை மையம் தூத்துக்குடி வ உ சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 22ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் படி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 7,08,244 ஆண் வாக்காளர்களும், 7,39,720 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 215 பேர் என மொத்தம் 14,48,179 வாக்காளர்கள் உள்ளனர். அதன் பின்னரும் வாக்காளர் பட்டியலில் சிலர் புதிதாக சேர்ந்துள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தனை வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லவும் வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு என்னும் மையத்துக்கு அவற்றைக் கொண்டு செல்வதற்காகவும் 136 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதிக்கும் 9 பறக்கும் படை என மொத்தம் 54 பறக்கும் படை குழுக்களும் 54 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 6 சட்டப்பேரவை தொகுதிக்கும் தலா ஒரு குழு என ஆறு வீடியோ கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு கண்காணிக்க 348 நுண் பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தனை வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக சுமார் 10,000 பணியாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 4431 வாக்குப்பதிவு அலகுகள், 2090 கட்டுப்பாட்டு அலகுகள்,2595 விவிபாட் கருவிகள் பரிசோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் 163 வாக்குப்பதிவு அலகுகள், கட்டுப்பாட்டு அலகுகள், விவிபாட் கருவிகள் விழிப்புணர்வு மற்றும் பயிற்சியாளர் பயிற்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முதல் கட்டமாக ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த 48 பேர் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். தேர்தல் பணிகளை கண்காணிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா..? இன்றே கடைசி நாள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி பகுதிகளில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், பதாகைகள், சுவர் விளம்பரங்களை 48 மணி நேரத்திற்குள் அழிக்க அல்லது அகற்ற பட வேண்டும், அதேபோல் தனியார் , அரசியல் கட்சிகள் தங்கள் பகுதிகளில் உள்ள அரசியல் விளம்பரங்கள், பதாகைகளை 72 மணி நேரத்தில் அழிக்க அல்லது அகற்ற வேண்டும், அரசியல் கட்சி கொடிகள், சிலைகள் அனைத்தையும் துணிகளால் மூடிட வேண்டும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget