மேலும் அறிய

Local Body Election | அதிமுக வேட்பாளராக களம் இறங்கும் பிரபல ரவுடி குரங்கு குமாரின் மருமகள்

’’பிரபல ரவுடியாக இருந்த குரங்கு குமார் செங்கல்பட்டு நகராட்சியின் துணை சேர்மேனாக இருந்தபோதே முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்’’

செங்கல்பட்டு நகராட்சி
 
33 வார்டுகளை கொண்ட செங்கல்பட்டு நகராட்சியில் 60 ஆயிரத்து 204 வாக்காளர்கள் உள்ளனர். செங்கல்பட்டு நகராட்சியை பொருத்தவரை கடைசியாக நடந்த 2006, 2011 நகர மன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகியவை மாற்றி மாற்றி கைப்பற்றின. தற்பொழுது நீண்ட நாட்களுக்குப் பிறகு நகர மன்ற தேர்தல் நடைபெறுவதால் திமுக , அதிமுகவிற்கு இடையே செங்கல்பட்டு நகராட்சி கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கு முன் நடந்த இரண்டு தேர்தலிலும், நகர்மன்ற தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
Local Body Election | அதிமுக வேட்பாளராக களம் இறங்கும் பிரபல ரவுடி குரங்கு குமாரின் மருமகள்
 
 
பிரபல ரவுடி குரங்கு குமார்
 
செங்கல்பட்டில் அசைக்கமுடியாத பிரபல ரவுடியாக இருந்து வந்தவர்தான் "குரங்கு குமார்" . தமிழகத்தில் குரங்கு குமாரை தெரியாத பிரமுகர்களே கிடையாது, என்ற அளவிற்கு குரங்கு குமார் செங்கல்பட்டு பகுதியில் கொடிகட்டி பறந்தார். குரங்கு குமாரின் அண்ணன்கள் இருவரும் செங்கல்பட்டு பகுதியில் முக்கிய ரவுடிகளாக இருந்து வந்தனர். அந்த செல்வாக்கை பயன்படுத்தி செங்கல்பட்டை தான் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் குரங்கு குமாரை காவல்துறையினர் அவரை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு இருந்தனர். அப்பொழுதுதான் திருந்தி வாழ நினைத்த குமார். தன்னை தற்காத்து கொள்வதற்காக அரசியலுக்குள் நுழைந்தார்.
 
Local Body Election | அதிமுக வேட்பாளராக களம் இறங்கும் பிரபல ரவுடி குரங்கு குமாரின் மருமகள்
 
அதிமுகவின் நகரச் செயலாளரான குரங்கு குமார்
 
கட்ந்த 2006ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் செங்கல்பட்டு நகராட்சியில் 13 ஆவது வார்டு மக்கான் சந்துப்பகுதியில் போட்டியிட்டு கவுன்சிலரனார் குமார். இதனையடுத்து, செங்கல்பட்டு  நகர்மன்றத் துணை  தலைவர் பதவியை எளிதாக கைப்பற்றினார். செங்கல்பட்டு, அதிமுக நகரச் செயலாளரான குமாருக்கு கட்சி வட்டாரத்தில் செல்வாக்கு கூடத் தொடங்கியது. கட்சிப் பணியை செங்கல்பட்டு நகர பகுதியில் வேகமாக செய்து வந்தார் குரங்கு குமார். செங்கல்பட்டை அதிமுகவின் கோட்டையாக மாற்ற பணிகளை மேற்கொண்டு வந்த குமாரின், மனதில் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி  நகர்மன்றத் துணைத் தலைவராக இருந்த பொழுதே குரங்கு குமார் முகம் சிதைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில்  ரவுடி ரவி பிரகாஷ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் .

Local Body Election | அதிமுக வேட்பாளராக களம் இறங்கும் பிரபல ரவுடி குரங்கு குமாரின் மருமகள்
 
 
குரங்கு குமாரை போட்டுத் தள்ளிய ரவி பிரகாஷ்
 
செங்கல்பட்டு அடுத்த திருக்கச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி பிரகாஷ். குரங்கு குமாருக்கும் ரவி பிரகாஷ்க்கும் ஏற்கனவே ஒரு கொலை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இதன் அதேபோல் குரங்கு குமார் இடத்தை பிடிக்க ரவி பிரகாஷுக்கு ஆசை இருந்து வந்தது. இதன் காரணமாகவே குரங்கு குமார் கொலை நடைபெற்றது. இதனையடுத்து ரவி பிரகாஷ் திமுகவின் நகர செயலாளரானார். இதனையடுத்து "குரங்கு குமாரிடம் இருந்து வந்த நகர்மன்றத் துணைத் தலைவர் பதவியையும் திமுக நகர செயலாளரான ரவி பிரகாஷ் கைப்பற்றினார். இந்த நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி திமுக நகரச்செயலாளர் ரவி பிரகாஷை 20 பேர் கொண்ட கும்பல் குரங்கு குமாரை போலவே முகம் சிதைத்து கொன்றது.  
 
மீண்டும் களத்தில்

Local Body Election | அதிமுக வேட்பாளராக களம் இறங்கும் பிரபல ரவுடி குரங்கு குமாரின் மருமகள்
 
இந்நிலையில் மறைந்த குரங்கு குமாரின் மகனான M.K. சுரேஷின் மனைவி சிந்தியா செங்கல்பட்டு நகராட்சியில் 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது குரங்கு குமாரின் மகன் M.K.சுரேஷ் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட  மாணவரணி துணை செயலாளராக இருந்து வருகிறார். மீண்டும் அதிமுக செங்கல்பட்டு நகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக குரங்கு குமார் மகன் களத்தில் குதித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் நகர மன்ற துணைத் தலைவரின் மருமகள் நேரடியாக மீண்டும் தேர்தலில் போட்டியிட இருப்பது செங்கல்பட்டு நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
குரங்கு குமாரின் புகைப்படம் மூலம் பரப்புரை
 
தேர்தல் பரப்புரையில் நோட்டீஸ் மற்றும் பேனர்களில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் குரங்கு குமார் எடுத்துக் கொண்ட புகைபடம் மற்றும் குரங்கு குமார் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்யும் போது எடுத்த புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி  முன்னிலைப்படுத்தி தேர்தல் பரப்புரையில் இறங்கி உள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Victory Parade LIVE: வான்கடே நோக்கி செல்லும் வீரர்கள்..கட்டுக்கடங்காத கூட்டம்! மும்பை போலீஸ் முக்கிய கோரிக்கை!
Team India Victory Parade LIVE: வான்கடே நோக்கி செல்லும் வீரர்கள்..கட்டுக்கடங்காத கூட்டம்! மும்பை போலீஸ் முக்கிய கோரிக்கை!
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
’குடி’மகன்களுக்கு அதிர்ச்சி! விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு ! காரணம் என்ன?
’குடி’மகன்களுக்கு அதிர்ச்சி! விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு ! காரணம் என்ன?
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Victory Parade LIVE: வான்கடே நோக்கி செல்லும் வீரர்கள்..கட்டுக்கடங்காத கூட்டம்! மும்பை போலீஸ் முக்கிய கோரிக்கை!
Team India Victory Parade LIVE: வான்கடே நோக்கி செல்லும் வீரர்கள்..கட்டுக்கடங்காத கூட்டம்! மும்பை போலீஸ் முக்கிய கோரிக்கை!
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
’குடி’மகன்களுக்கு அதிர்ச்சி! விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு ! காரணம் என்ன?
’குடி’மகன்களுக்கு அதிர்ச்சி! விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு ! காரணம் என்ன?
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
Breaking News LIVE: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 3 பேர் விடுதலை
Breaking News LIVE: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 3 பேர் விடுதலை
Paramedical Counselling: பாராமெடிக்கல் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது? வெளியான தகவல்
Paramedical Counselling: பாராமெடிக்கல் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது? வெளியான தகவல்
TNPSC Recruitment: நடந்துவரும் குரூப் 2, 2ஏ விண்ணப்பப் பதிவு; தேர்வு முறை, கல்வித்தகுதி, பாடத்திட்டம்- முழு விவரம் இதோ!
நடந்துவரும் குரூப் 2, 2ஏ விண்ணப்பப் பதிவு; தேர்வு முறை, கல்வித்தகுதி, பாடத்திட்டம்- முழு விவரம் இதோ!
3ஆவது முறையாக ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்ற ஹேமந்த் சோரன்!
3ஆவது முறையாக ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்ற ஹேமந்த் சோரன்!
Embed widget