"சினிமா டயலாக் ஒரு நாள்தான் தாக்குப்பிடிக்கும்" ஈரோட்டில் விஜயை விமர்சித்த துணை முதல்வர்
"சினிமா டயலாக்குகள் ஒரு நாள் மட்டுமே தாக்குப்பிடிக்கும், எனவே இளைஞர்களும் பெண்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என துணை முதல்வர் டி.கே சிவக்குமார் தெரிவித்தார்

"சினிமா டயலாக்குகள் ஒரு நாள் மட்டுமே தாக்குப்பிடிக்கும், எனவே இளைஞர்களும் பெண்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி மட்டுமே உங்களுக்கு உண்மையான நன்மைகளைச் செய்யும்" என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் எளிதாக வெற்றி பெறும் என்றும், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான கூட்டணிக்கு நீண்ட கால வரலாறு உண்டு என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகக் கோயம்புத்தூரில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்கலீண் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
திமுக அரசு சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும், சமூகங்களையும் உள்ளடக்கிச் செயல்படுவதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த அரசு மிகச்சிறந்த பணிகளைச் செய்துள்ளதாகவும் அவர் பாராட்டினார். மேலும், மக்கள் நலனுக்காகப் பல திட்டங்களுடன் உறுதிமொழித் திட்டங்களும் (Guarantee Schemes) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும், மத்திய அரசின் விலைவாசி உயர்வு கொள்கையினால் அவதிப்பட்ட மக்கள் இந்தத் திட்டங்களின் மூலம் பெரிதும் பயனடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீட்டுடன் லோக்சபா இடங்களை அதிகரிப்பதற்கான மசோதாவை அறிமுகப்படுத்துவது குறித்துக் கேட்டபோது, இது சரியான நேரமல்ல என்றும் அரசியல் லாபத்திற்காகவே அவர்கள் இப்போது இதைச் செய்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பிறகு இதைப் பற்றி விவாதிக்கலாம் எனக் கூறிய அவர், இது நாட்டிற்கு நன்மை செய்யும் மற்றும் பெண்களின் அதிகாரப் பகிர்வை வலியுறுத்தும் மசோதாவே தவிர, ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சிக்காக உருவாக்கப்படும் மசோதா அல்ல என்று விளக்கினார்.
இந்த விவகாரம் முதன்முதலில் UPA அரசு ஆட்சியில் இருந்தபோதே எழுப்பப்பட்டது என்று சுட்டிக்காட்டிய சிவக்குமார், மத்திய அரசு அனைத்துக் கட்சிகளையும் நம்பிக்கைக்கு எடுத்துக்கொண்டு இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்றும், சோனியா காந்தி அவர்கள் தான் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்தார் என்றும் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்




















