மேலும் அறிய

வாக்களிக்க காத்திருந்த சுயேட்சை வேட்பாளர் மாரடைப்பால் மரணம்! மகாராஷ்டிரா தேர்தலில் அரங்கேறிய சோகம்! 

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்களிக்க காத்திருந்தபோது பீட் பகுதியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிராவின் பீட் தொகுதியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் வாக்குச் சாவடியில் மாரடைப்பால் உயிரிழந்தார்

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்களிக்க காத்திருந்தபோது பீட் பகுதியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மகாராஷ்டிராவில் இன்று 288 தொகுதிகளில் புதிய ஆட்சியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. நவம்பர் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

பீட் பகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியவர் பாலாசாகேப் ஷிண்டே. இவர் தனது வாக்கினை செலுத்த பீடில் உள்ள சத்ரபதி ஷாஹு வித்யாலயா வாக்குப்பதிவு மையத்தில் காத்திருந்தார். அப்போது திடீரென அவர் தரையில் விழுந்தார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு அவரை முதலில் பீடில் உள்ள காகு நானா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காததால், பின்னர் சத்ரபதி ஷம்பாஜி நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் அங்கு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக போலீசார் தெரிவித்தனர். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 இன் படி, தேர்தலின் போது வேட்பாளர் இறந்தால், சம்பந்தப்பட்ட இடத்தில் வாக்களிப்பதை பிரிவு 52 இன் கீழ் ஒத்திவைக்கலாம் எனத் தெரிவிக்கிறது. பீட் சட்டமன்ற தொகுதி ஒரு காலத்தில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) கோட்டையாக இருந்தது. பிளவுக்குப் பிறகு, அஜித் பவார் கையில் உள்ளது. அது பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் கூட்டணியில் தற்போது உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. MATRIZE வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில், மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 145 தேவைப்படும் நிலையில்,  பாஜக கூட்டணிக்கு 150 முதல் 170 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 110 முதல் 130 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget