Haryana, J&K Election Result LIVE: 'முதல்வர் பதவி வழங்கப்பட்டால் வேண்டாம் என்று கூறமாட்டேன்' - பாஜகவின் அனில் விஜ்
Haryana, Jammu Kashmir Election Result 2024 Live: ஹரியானா மற்றும் ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை, தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய ஏபிபி நாடு செய்தி இணையதளத்துடன் இணைந்திருங்கள்.

Background
Haryana, Jammu Kashmir Election Result 2024 Live: ஹரியானா மற்றும் ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணியளவில் தொடங்குகிறது.
ஹரியானா & ஜம்மு&காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்:
ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேநேரம் ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கு, கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இரண்டு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால், அந்த மாநிலங்களில் மீண்டும் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பில், ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைய உள்ளதாக குறிப்பிடுகின்றன. அதேநேரம், ஜம்மு &காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றன.
கடந்த கால கருத்துக்கணிப்புகள்
உண்மையான முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே மக்களின் உணர்வைப் பிரதிபலிப்பதே தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளாகும். அவற்றின் துல்லியம் கடந்த காலங்களில் பலமுறை கேள்விக்குள்ளாகியுள்ளது. உதாரணமாக, 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மகத்தான வெற்றியைப் பெறும் என்று குறைந்தது 12 கருத்துக் கணிப்புகள் கணித்தன. உண்மையான முடிவுகள் வந்தபோது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெறும் 293 இடங்களை மட்டுமே பெற்றது. உண்மையில், 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டைப் போலல்லாமல், பாஜக தனிப்பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது.
2014 ஜம்மு &காஷ்மீர் தேர்தல் கருத்து கணிப்பு:
கடந்த 2014ல் நடந்த ஜம்மு காஷ்மீர் தேர்தலில், எக்ஸிட் போல் கணிப்புகள் உண்மையான முடிவுகளுக்கு அருகில் இருந்தன. 87 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பிடிபி 32-38 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக இருக்கும் என்றும், 44 இடங்கள் என்ற மேஜிக் குறியைத் தாண்டும் என்றும், பிஜேபி 27-33 என்ற இடத்தைப் பிடிக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள் கணித்திருந்தன. தேசிய மாநாட்டு கட்சிக்கு 8-14 இடங்களும், காங்கிரசுக்கு 4-10 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டது. துல்லியம் நெருக்கமாக இருந்தது. இறுதியாக, பிடிபி 28 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும், என்சி 15 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஜம்மு காஷ்மீரில் 2024 சட்டமன்றத் தேர்தலில் NC மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடுகின்றன, அதே நேரத்தில் BJP மற்றும் PDP ஆகியவை ஜம்மு காஷ்மீரில் தனித்து போட்டியிடுகினறன.
2019 ஹரியானா சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு:
ஹரியானாவில் 2019 சட்டமன்றத் தேர்தலில், 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டமன்றத்தில் பாஜகவிற்கு 60 இடங்களுக்கு மேல் இருக்கும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்பாளர்கள் கணித்தனர்.
ஆனால், தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்புகளை தவறாக்கின. உண்மையில், பாஜக 40 இடங்களை வென்றது, பெரும்பான்மைக்கு 6 இடங்கள் பின்தங்கியது, காங்கிரஸ் 31 இடங்களை வென்றது. 2024 மக்களவை தேர்தலிலும் கருத்துக் கணிப்புகளை மீறி காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி 235 இடங்களைக் கைப்பற்றியது.
Haryana, J&K Election Result LIVE: ஹரியானா தேர்தல் முடிவுகள் களநிலவரத்துக்கு எதிராக உள்ளது - எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்!
ஹரியானா சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்,” ஹரியானா சட்டமன்றத் தேர்தக்ல் முடிவுகள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வெற்றி பறிக்கப்பட்டுள்ளது. தேர்தல், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளோம். நிர்வாகம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்பியதாகவே களநிலவரம் இருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகளில் அதன் பிரதிபலிப்பு துளியும் இல்லை. இந்த முடிவுகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.இது தொடர்பாக ஆய்வு செய்வோம்.
“ வாக்கு எண்ணிக்கை, இ.வி.எம். மெசின் செயல்பாடு குறித்து புகார்கள் பெற்றுள்ளோம். அந்த தகவல்களைத் திரட்டி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்.” என்று தெரிவித்தார்.
Haryana, J&K Election Result LIVE: ஹரியானா தேர்தல் முடிவுகள் களநிலவரத்துக்கு எதிராக உள்ளது - எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்
ஹரியானா சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்,” ஹரியானா சட்டமன்றத் தேர்தக்ல் முடிவுகள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வெற்றி பறிக்கப்பட்டுள்ளது. தேர்தல், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளோம். நிர்வாகம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்பியதாகவே களநிலவரம் இருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகளில் அதன் பிரதிபலிப்பு துளியும் இல்லை. இந்த முடிவுகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.இது தொடர்பாக ஆய்வு செய்வோம்.
“ வாக்கு எண்ணிக்கை, இ.வி.எம். மெசின் செயல்பாடு குறித்து புகார்கள் பெற்றுள்ளோம். அந்த தகவல்களைத் திரட்டி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்.” என்று தெரிவித்தார்.





















