Chennai Corporation Election: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 : சென்னை மாநகராட்சியை கைப்பற்றியது திமுக..
Chennai Corporation Election 2022 Result: அதிமுக 11, காங்கிரஸ் 5, சிபிஐ-எம் 2, சிபிஐ 1, ம.தி.மு.க 1 மற்றும் மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
![Chennai Corporation Election: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 : சென்னை மாநகராட்சியை கைப்பற்றியது திமுக.. Greater chennai corporation election 2022 result DMK alliance party captures Chennai corporation Check full details Chennai Corporation Election: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 : சென்னை மாநகராட்சியை கைப்பற்றியது திமுக..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/22/d24ddfeb82162f4c1d1b90667a517dea_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சென்னை மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் 95%க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 21 மாநகராட்சிகளிலும் தொடர்ந்து பெருவாரியான வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றி வருகிறது. திமுக கூட்டணி 95 சதவீதத்துக்கும் அதிகமான நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை கைப்பற்றியது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 104 வார்டுகளில் திமுக 81 வார்டுகளைப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து அதிமுக 11, காங்கிரஸ் 5, சிபிஐ-எம் 2, சிபிஐ 1, ம.தி.மு.க 1 மற்றும் மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
திமுகவின் வெற்றியின் மூலம் சென்னை மாநகராட்சி திமுக வசமாகியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக முதல் முறையாக சென்னை மாநகராட்சியை கைப்பற்றியிருந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னை மாநகராட்சி திமுக வசம் வந்துள்ளது.
அதிமுகவின் கோட்டையாக விளங்கிய பல பகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் பல இடங்களில் பட்டாசு வைத்து, இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
மக்களவை, சட்டப்பேரவை, ஊரக உள்ளாட்சியைத் தொடர்ந்து நகர்ப்புற தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)