மேலும் அறிய

Chennai Voter Turnout: தமிழ்நாட்டின் தலைநகரம்; வாக்குப் பதிவில் எப்போதும் கடைசி- சென்னைக்கு ஏன் இந்த அவலம்?

Chennai Lok Sabha Elections 2024: தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் எப்போதும் குறைந்த அளவிலான வாக்குகள் பதிவாகும் அவலம் நிலவி வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் அனல் பறக்க, வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 39 தொகுதிகளிலும் கடைசி 3 தொகுதிகளில் தலைநகரம் சென்னையைச் சேர்ந்த தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை ஆகிய தொகுதிகள் உள்ளன.

மதியம் 1 மணி நிலவரப்படி வட சென்னையில், 35.09 சதவீத வாக்குகள் பதிவாகின. அதேபோல தென் சென்னை தொகுதியில், 33.93 சதவீத வாக்குகளும் மத்திய சென்னை தொகுதியில் 32.31 வாக்குகளும் பதிவாகி இருந்தன.

3 மணிக்கு 51.41 சதவீத வாக்குகள் பதிவு

அதேபோல பிற்பகல் 3 மணி நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் 51.41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 57.86 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கு அடுத்தபடியாக நாமக்கல் மாவட்டத்தில் 57.67 சதவீத வாக்குகள் பதிவாகின. எனினும் வழக்கம்போல சென்னை தொகுதிகளில் குறைவாகவே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வட சென்னையில், 44.84 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதேபோல தென் சென்னை தொகுதியில், 42.10 சதவீத வாக்குகளும் மத்திய சென்னை தொகுதியில் 41.47 வாக்குகளும் பதிவாகி உள்ளன. இதன்மூலம் சென்னையின் ஒட்டுமொத்த சராசரி 42 சதவீதமாக உள்ளது.

5 மணி நிலவரம் என்ன?

மாலை 5 மணிக்கு, தென் சென்னை தொகுதியில் குறைந்தபட்சமாக 57.04 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. மத்திய சென்னை தொகுதியில் 57.25 சதவீத வாக்குகளும் வட சென்னை மக்களவைத் தொகுதியில் 59.16 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

என்ன காரணம்?

ஒவ்வொரு தேர்தலிலும் மாநகரங்களில் மிகவும் குறைவாகவே வாக்குகள் பதிவாகின்றன. சென்னையில் ஒட்டுமொத்தமாக 70 சதவீத வாக்குகள் கூடப் பதிவாகவில்லை. குறிப்பாக சென்னை மாநகரில் மூன்று மக்களவைத் தொகுதிகளிலும் 2009, 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு தேர்தல்களில் ஒருமுறை கூட 70 சதவீத வாக்குகள் எட்டப்படவில்லை.

கிராமப் புறங்களில் எப்போதுமே வாக்குப் பதிவு அதிகமாக நடைபெறுகிறது. சென்னையில் பணிக்காக வசிக்கும் பல்வேறு மக்கள், வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்குச் செலவு செய்து செல்கின்றனர். வெளி நாடுகளில் இருந்தெல்லாம் ஜனநாயகக் கடமையை ஆற்ற, இந்தியக் குடிமகன் தேசம் திரும்புவது உண்டு.

இந்த நிலையில், தலைநகரம் சென்னையில் மட்டும் வாக்குப் பதிவு சதவீதம் எப்போதுமே குறைவாக உள்ளது. இதற்கு சென்னையில் இருக்கும் மேல்தட்டு மக்களின் மனநிலை முக்கியக் காரணம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். ‘’நான் வாக்களித்து என்ன மாறிவிடப் போகிறது? எனது ஒரு வாக்கால் என்ன பயன்? நான் வாக்களிப்பதால் நாட்டில் கொள்ளையும் ஊழலும் நின்றுவிடப் போகிறதா?’’ என்று யோசிப்பவர்கள், வாக்களிக்கச் செல்வதில்லை.

அதேபோல, விடுமுறை நாளில் வீட்டில் இருக்கலாம், எதற்கு வெயிலில் அலைய வேண்டும் என்று நினைப்பவர்களும் வாக்களிக்கச் செல்வதில்லை. 

ஊருக்குச் செல்வதும் ஒரு காரணம்

மேலும் சென்னையில் ஓட்டு இருக்கும் சிலர், கிடைக்கும் விடுமுறை நாட்களைப் பயன்படுத்திக் கொண்டு, ஊருக்குச் சென்றுவிடுவதாலும் வாக்குப் பதிவு சதவீதம் சென்னையில் குறைவதாகக் கூறப்படுகிறது. எது எப்படியோ, வாக்களிப்பது நமது கடமை, உரிமை என்பதை மனதில் இருத்தி, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
NIA Raid: தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.. சர்ச்சைக்குரிய புத்தகங்கள் பறிமுதல்!
NIA Raid: தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.. சர்ச்சைக்குரிய புத்தகங்கள் பறிமுதல்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
Embed widget