School Reopening: ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படுமா? புதுச்சேரி பெற்றோர் மத்தியில் நீடிக்கும் பெரும் குழப்பம்!
நாளை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன.

புதுச்சேரி : கோடை விடுமுறை முடிந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே, பள்ளிகள் திறப்பு குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு!
தமிழ்நாட்டில் வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் கோடை வெயிலின் தாக்கம் மற்றும் சில நிர்வாகக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளைத் திறக்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி, வரும் ஜூன் 4-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் முறைப்படி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளிலேயே கல்வி உபகரணங்கள்:
பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே மாணவர்களுக்குத் தேவையான விலையில்லாப் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கவும், பள்ளிகளில் தேவையான தூய்மைப் பணிகளை முன்கூட்டியே மேற்கொள்ளவும் பள்ளிக் கல்வித்துறை உரிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
புதுச்சேரியில் நீடிக்கும் சஸ்பென்ஸ்: மீண்டும் தள்ளிப்போகிறதா?
தமிழகத்தைப் போன்றே புதுச்சேரியிலும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, ஜூன் 4-ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி அவர்கள் நேற்றுதான் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். ஆனால், தற்போது அங்குப் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
முதலமைச்சர் ரங்கசாமி விளக்கம்:
இது தொடர்பாகப் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே, பள்ளிகள் திறப்பு குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் இந்த திடீர் விளக்கத்தால், புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போகுமா என்ற குழப்பத்திலும் எதிர்பார்ப்பிலும் பொதுமக்களும் பெற்றோர்களும் காத்துள்ளனர்.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்





















