மேலும் அறிய

Bharatiya Bhasha Utsav: பாரதியார் பிறந்த நாள்; இந்திய மொழி திருவிழாவை நடத்தும் உயர் கல்வி நிறுவனங்கள்

பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு, யுஜிசி அறிவுறுத்தலின்படி உயர் கல்வி நிறுவனங்கள் இந்திய மொழி திருவிழாவை நடத்தி வருகின்றன. 

பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு, யுஜிசி அறிவுறுத்தலின்படி உயர் கல்வி நிறுவனங்கள் இந்திய மொழி திருவிழாவை நடத்தி வருகின்றன. 

’’நாட்டின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக ’ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ கொண்டாடப்படுகிறது. இதில் ’ஒரே பாரதம், உன்னத பாரதம்’ முன்னெடுப்பின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. 

பாரதியார் பிறந்தநாள்

இந்த நிலையில் சுதந்திரப் போராட்ட வீரரும் பல மொழி வித்தகருமான மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் டிசம்பர் 11-ம் தேதி தேசிய மொழிகள் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (டிசம்பர் 11) தேசிய மொழிகள் தினம் கொண்டாடப்படுகிறது. 

இன்றைய நாள் முழுவதும் பல்வேறு வகையான சுவாரசியமான, கேளிக்கை நிறைந்த, கவரக் கூடிய நிகழ்ச்சிகளை கல்வி நிறுவனங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலர் பி.கே.தாகூர், அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் இயக்குநர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.


Bharatiya Bhasha Utsav: பாரதியார் பிறந்த நாள்; இந்திய மொழி திருவிழாவை நடத்தும் உயர் கல்வி நிறுவனங்கள்

நிகழ்ச்சிகள்

உதாரணத்துக்கு,  இந்திய மொழிகள் / பிராந்தியங்கள் குறித்த கண்காட்சி, மண்டல மொழிகளின் சிறப்பை விளக்கும் மையங்கள் அமைத்தல், கலாச்சார நிகழ்ச்சிகள், கலாச்சார உடைகளை அணிதல், குறிப்பிட்ட பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்ட கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்த வேண்டும். 

அதேபோல விநாடி-வினா, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, இசைப் போட்டிகள், ’என் மொழி என் கையெழுத்து’ பிரச்சாரம், மாணவர்கள் பல மொழிகளில் கற்றல், வாசித்தல் மற்றும் எழுதுவதற்கான வழிகாட்டியை வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அடுத்த நாள் நடத்தப்பட்ட நிகழ்ச்சி விவரங்களை யுஏஎம்பி (University Activity Monitoring Portal - UAMP) இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.

இந்த நிகழ்ச்சிகளில் சுமார் 1 லட்சம் உயர் கல்வி நிலையங்கள், கல்லூரிகள் அல்லது பள்ளிகள் கலந்துகொள்ளுமாறு ஆசிரியர்களும் மாணவர்களும் உற்சாகப்படுத்த வேண்டும். இதன்மூலம் குறைந்தபட்சம் 1 கோடி மாணவர்கள் கலந்துகொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று யுஜிசி தெரிவித்து இருந்தது. அந்த வகையில் உயர் கல்வி நிறுவனங்களில் மொழி தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. 

சிறப்பு அதிகாரி

மாணவர்களிடையே மொழி நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும் நாட்டின் வளமான கலாசார ஒற்றுமையை வளர்க்கும் வகையிலும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் போட்டிகளை நடத்த அனைத்து நிறுவனங்களும் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் யுஜிசி அறிவுறுத்தி இருந்தது. உயர் கல்வி நிறுவனங்கள் ம்போட்டிகளை நடத்தி மாணவர்களுக்கு சான்றிதழ்கள்/ பரிசுகள் மற்றும் கல்விசார் பலன்களையும் வழங்கலாம் என்றும் யுஜிசி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்... தேர்வு மையத்தில் ஆட்சியர் சர்ப்ரைஸ் விசிட்...
10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்... தேர்வு மையத்தில் ஆட்சியர் சர்ப்ரைஸ் விசிட்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: 30,080 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: 30,080 பேர் பங்கேற்பு!
MBBS BDS Seats: ஹேப்பி நியூஸ்! MBBS, BDS சீட் எண்ணிக்கை உயர்வு: அரசு அதிரடி அறிவிப்பு- யாருக்கெல்லாம்?
MBBS BDS Seats: ஹேப்பி நியூஸ்! MBBS, BDS சீட் எண்ணிக்கை உயர்வு: அரசு அதிரடி அறிவிப்பு- யாருக்கெல்லாம்?
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
Toyota Fortuner Finance Plan: விற்பனையில் அசத்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார வாங்குற ஐடியா இருக்கா.? இந்தாங்க EMI பிளான்
விற்பனையில் அசத்தும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார வாங்குற ஐடியா இருக்கா.? இந்தாங்க EMI பிளான்
PM Kisan scheme farmers : ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
Embed widget