மேலும் அறிய

Ukraine: இந்தியாவில் இருந்து உக்ரைனுக்கு படையெடுக்கும் இந்திய மாணவர்கள்... காரணம் என்ன?

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், மருத்துவக் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் பெருமளவில் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர்.

உக்ரைன் நாட்டில் கடந்த 4 நாட்களாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டின் தலைநகர் கிவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் ஆகியவற்றில் ரஷ்ய படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன்காரணமாக அங்கு 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சூழலில் உக்ரைன் உடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிகாரிகள் பெலாரெஸில் தயாராக உள்ளதாக தகவல் வெளியானது. 

இந்தநிலையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், மருத்துவக் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் பெருமளவில் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். மத்திய அரசு ஏர்இந்தியா விமானங்களை அனுப்பி இந்திய மாணவர்களை மீட்க முயற்சி செய்து வருகிறது. 

இந்திய மாணவர்கள் உக்ரைனுக்கு செல்ல காரணம் என்ன..? 

இந்தியாவில் இருந்து 18 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் உக்ரைன் நாட்டிற்கு சென்று மருத்துவம் பயின்று வருகின்றனர். பொதுவாக, இந்தியாவில் 5 வருடங்கள் மருத்துவம் பயில ஒன்று முதல் ஒன்றரை கோடி செலவாகிறது. ஆனால், உக்ரைன் நாட்டில் மொத்தமாகவே 20 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தால் போதும். 

அதேபோல், இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு நீட் ஒரு மிக முக்கிய தேவையாக இருந்து வருகிறது. உக்ரைன் நாட்டில் மேல்படிப்பு படித்தால் போதும் மருத்துவ படிப்பை படிக்கலாம். மாணவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் உலகத்தரமான கல்வியும், செய்முறை பயிற்சியுடன், ஆங்கிலம், உக்ரேனிய மொழிகளை தேர்வு செய்து கொள்ளலாம். 

மேலும், வெளிநாடுகளில் இருந்து உக்ரைன் வந்து படிக்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து கட்டணத்தில் 50 சதவீத சலுகையையும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து உக்ரைன் வந்து படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 22. 9 % ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

உக்ரைன் நாட்டில் என்னதான் இந்திய மாணவர்கள் மருத்துவம் பயின்றாலும் இந்தியாவில் பயிற்சியை தொடர்வதற்கு தேசிய மருத்துவ ஆணையம் நடத்தும் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்பது கட்டாயம். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Embed widget