மேலும் அறிய

Biannual Admission: இனி ஆண்டுக்கு 2 முறை கல்லூரியில் சேரலாம்; யுஜிசி அதிரடி அறிவிப்பு - முழு விவரம்!

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கல்வி ஆண்டு தொடங்கி, மே அல்லது ஜூன் மாதத்தில் முடிவடையும்.

இனி மாணவர்கள் ஆண்டுக்கு 2 முறை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேரலாம் என்று யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் அறிவித்துள்ளார். 2024- 25ஆம் கல்வி ஆண்டில் இருந்து இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. இதன்படி ஜனவரி / பிப்ரவரி அல்லது ஜூலை / ஆகஸ்ட் மாதங்களில் ஒரு மாணவர் உயர் கல்வியில் சேர முடியும்.  

ஆண்டுதோறும் மாணவர்களின் நலனை முன்னிறுத்தி யுஜிசி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளதாக, யுஜிசி தலைவர் மாமிதலா ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:

’’தற்போது ஆண்டுதோறும் வழக்கமான படிப்புக்கு ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்களுக்கான இந்த நடைமுறையை கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் அனுமதிக்கின்றன. இதன்படி ஒவ்வோர் ஆண்டும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கல்வி ஆண்டு தொடங்கி, மே அல்லது ஜூன் மாதத்தில் முடிவடையும். கடந்த ஆண்டு திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வி முறை மாணவர் சேர்க்கைக்கு ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய இரு மாதங்களில் 2 முறை சேர்க்கை நடைபெற்றது. இதனால் சுமார் 5 லட்சம் மாணவர்களுக்கு ஓராண்டுக்காகக் காத்திருக்காமல், பட்டப் படிப்புகளில் சேர்ந்தனர்.

இடையில் சேர்ந்த 4.28 லட்சம் மாணவர்கள்

யுஜிசி தளத் தகவலின்படி, ஜூலை 2022ஆம் ஆண்டில் 19,73,056 மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்தனர். தொடர்ந்து ஜனவரி 2023ஆம் ஆண்டில் 4,28,854 பேர் தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் படிப்புகளில் சேர்ந்தனர்.

மாணவர்கள் மத்தியில் இந்தப் படிப்புகளுக்கு பெரும் வரவேற்பும் ஆர்வமும் இருந்ததை உணர முடிந்தது. இதை அடுத்து, வழக்கமான கல்வி முறையிலும் ஆண்டுக்கு 2 முறை, மாணவர் சேர்க்கையை நடத்த யுஜிசி முடிவு செய்தது.

இரண்டு முறை மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம்

இந்த நிலையில் 2024- 25ஆம் கல்வி ஆண்டில் வழக்கமான கல்வி முறையில் (regular physical mode), இந்தியாவில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் இரண்டு முறை மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனவரி / பிப்ரவரி மாதங்களில் அல்லது ஜூலை / ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. எனினும் இது கட்டாயமில்லை. போதிய அளவிலான உள் கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களைக் கொண்ட கல்வி நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளில் தாமதம், உடல்நலனில் பிரச்சினை அல்லது சொந்தக் காரணங்களில் முதல் முறையில் கல்லூரியில் சேர முடியாத மாணவர்கள், இரண்டாவது முறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 2 முறை மாணவர் சேர்க்கையைப் போலவே, நிறுவனங்களும் ஆண்டுக்கு 2 முறை வளாக நேர்காணலை நடத்தலாம்’’.

இவ்வாறு யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget