மேலும் அறிய

Biannual Admission: இனி ஆண்டுக்கு 2 முறை கல்லூரியில் சேரலாம்; யுஜிசி அதிரடி அறிவிப்பு - முழு விவரம்!

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கல்வி ஆண்டு தொடங்கி, மே அல்லது ஜூன் மாதத்தில் முடிவடையும்.

இனி மாணவர்கள் ஆண்டுக்கு 2 முறை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேரலாம் என்று யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் அறிவித்துள்ளார். 2024- 25ஆம் கல்வி ஆண்டில் இருந்து இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. இதன்படி ஜனவரி / பிப்ரவரி அல்லது ஜூலை / ஆகஸ்ட் மாதங்களில் ஒரு மாணவர் உயர் கல்வியில் சேர முடியும்.  

ஆண்டுதோறும் மாணவர்களின் நலனை முன்னிறுத்தி யுஜிசி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளதாக, யுஜிசி தலைவர் மாமிதலா ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:

’’தற்போது ஆண்டுதோறும் வழக்கமான படிப்புக்கு ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்களுக்கான இந்த நடைமுறையை கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் அனுமதிக்கின்றன. இதன்படி ஒவ்வோர் ஆண்டும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கல்வி ஆண்டு தொடங்கி, மே அல்லது ஜூன் மாதத்தில் முடிவடையும். கடந்த ஆண்டு திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வி முறை மாணவர் சேர்க்கைக்கு ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய இரு மாதங்களில் 2 முறை சேர்க்கை நடைபெற்றது. இதனால் சுமார் 5 லட்சம் மாணவர்களுக்கு ஓராண்டுக்காகக் காத்திருக்காமல், பட்டப் படிப்புகளில் சேர்ந்தனர்.

இடையில் சேர்ந்த 4.28 லட்சம் மாணவர்கள்

யுஜிசி தளத் தகவலின்படி, ஜூலை 2022ஆம் ஆண்டில் 19,73,056 மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்தனர். தொடர்ந்து ஜனவரி 2023ஆம் ஆண்டில் 4,28,854 பேர் தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் படிப்புகளில் சேர்ந்தனர்.

மாணவர்கள் மத்தியில் இந்தப் படிப்புகளுக்கு பெரும் வரவேற்பும் ஆர்வமும் இருந்ததை உணர முடிந்தது. இதை அடுத்து, வழக்கமான கல்வி முறையிலும் ஆண்டுக்கு 2 முறை, மாணவர் சேர்க்கையை நடத்த யுஜிசி முடிவு செய்தது.

இரண்டு முறை மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம்

இந்த நிலையில் 2024- 25ஆம் கல்வி ஆண்டில் வழக்கமான கல்வி முறையில் (regular physical mode), இந்தியாவில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் இரண்டு முறை மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனவரி / பிப்ரவரி மாதங்களில் அல்லது ஜூலை / ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. எனினும் இது கட்டாயமில்லை. போதிய அளவிலான உள் கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களைக் கொண்ட கல்வி நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளில் தாமதம், உடல்நலனில் பிரச்சினை அல்லது சொந்தக் காரணங்களில் முதல் முறையில் கல்லூரியில் சேர முடியாத மாணவர்கள், இரண்டாவது முறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 2 முறை மாணவர் சேர்க்கையைப் போலவே, நிறுவனங்களும் ஆண்டுக்கு 2 முறை வளாக நேர்காணலை நடத்தலாம்’’.

இவ்வாறு யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
பாடப்புத்தகம் மட்டுமல்ல தனித்திறமையும் முக்கியம்.! மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அட்வைஸ்
பாடப்புத்தகம் மட்டுமல்ல தனித்திறமையும் முக்கியம்.! மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அட்வைஸ்
உங்க வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ்ல பேச, எழுதத் தெரியுமா? அப்போ இந்த ரூ.10,000 அவங்களுக்குத்தான்!
உங்க வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ்ல பேச, எழுதத் தெரியுமா? அப்போ இந்த ரூ.10,000 அவங்களுக்குத்தான்!
தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?
தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
Bangkok Bar: நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
Annamalai: தவெக தடுமாறினால் கைதூக்கி விடுங்க.. ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!
Annamalai: தவெக தடுமாறினால் கைதூக்கி விடுங்க.. ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
CM Vijay: தவெக ஒருநாள் காணாமல் போகும்.. கறை படிந்த கட்சிகளில் முதலிடம்.. வெளுத்து வாங்கிய அமமுக!
CM Vijay: தவெக ஒருநாள் காணாமல் போகும்.. கறை படிந்த கட்சிகளில் முதலிடம்.. வெளுத்து வாங்கிய அமமுக!
Rasi Palan Today (13-07-2026): கன்னிக்கு கவனம்.. விருச்சிகத்துக்கு லாபம்.. உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (13-07-2026): கன்னிக்கு கவனம்.. விருச்சிகத்துக்கு லாபம்.. உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்?
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Embed widget