மேலும் அறிய

Group 2 Exam Result: குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகளில் தாமதம் ஏன்? எப்போது வெளியாகும்?: டி.என்.பி.எஸ்.சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகளில் தாமதம் ஏன் என்றும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகளில் தாமதம் ஏன் என்றும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி இன்று தெரிவித்துள்ளதாவது:

’’ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகளுக்கான குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது.

இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள்‌ சென்னை உயர் நீதிமன்றத்தில்‌ நிலுவையில்‌ இருந்தன. மேற்படி வழக்குகளில்‌ சென்னை உயர் நீதிமன்றம்‌ தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில்‌ அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட கலந்தாலோசனைகள்‌ மேற்கொள்ளப்பட்டன.

இதனைத்‌ தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின்‌ ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில்‌ உரிய மாற்றங்கள்‌ செய்யும்‌ பணி நிறைவடையும்‌ தருவாயில்‌ உள்ளது. அப்பணி நிறைவுற்ற பின்னர்‌ மேற்படி‌ தேர்வின்‌ முடிவுகள்‌ விரைவில்‌ வெளியிடப்படும்‌ எனத்‌ தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக செய்தி, சமூக ஊடகங்களில்‌ வெளிவரும்‌ ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம்‌ எனவும்‌, அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ இணையதளத்தினை (https://www.tnpsc.gov.in/) மட்டுமே அணுகுமாறும்‌ தெரிவிக்கப்படுகிறது’’.

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


Group 2 Exam Result: குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகளில் தாமதம் ஏன்? எப்போது வெளியாகும்?: டி.என்.பி.எஸ்.சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பின்னணி என்ன?

2022ம் ஆண்டுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21-ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. இதற்காகத் தேர்வர்கள் 8.59 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். 

தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டன. தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. 4,012 தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 58 ஆயிரத்து 900 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கருவூலத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்தியவாறு பாதுகாப்பு அளிக்கும் குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டன. இவ்வாறு 993 குழுக்கள் செயல்பட்டன. 

இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி முன்னதாக அறிவித்தது. எனினும் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் தாமதமாகி வந்த நிலையில், அக்டோபர் மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அண்மையில் அறிவிப்பு வெளியானது. 

இந்த நிலையில் விடைத்தாள்கள் மழையில் நனைந்து சேதமானதால், தேர்வு முடிவுகள் தாமதமாவதாக தனியார் செய்தித் தொலைகாட்சியில் செய்தி வெளியானது. இதையடுத்து டிஎன்பிஎஸ்சி தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி..
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. "ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு"
Russia's Drone Attack: இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
Actor Vishal: விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
Polls Caste Census: ஒரு பக்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதேநேரம் தேர்தல், தமிழ்நாடு? - எங்கெங்கு தெரியுமா?
Polls Caste Census: ஒரு பக்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதேநேரம் தேர்தல், தமிழ்நாடு? - எங்கெங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai | TVK Vijay | புஸ்ஸி ஆனந்திடம் பொறுப்பு.. ஆட்டத்தை தொடங்கிய விஜய்! அப்செட்டில் ஆதவ் அர்ஜூனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி..
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. "ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு"
Russia's Drone Attack: இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
இந்தா வாங்கிக்கோ.! ட்ரோனுக்கு பதில் ட்ரோன்; ஆட்டத்தை ஆரம்பித்த புதின் - உக்ரைனில் 5 பேர் பலி
Actor Vishal: விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
விஷால் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்.. ரூ.21 கோடி வட்டியுடன் வழங்க உத்தரவு
Polls Caste Census: ஒரு பக்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதேநேரம் தேர்தல், தமிழ்நாடு? - எங்கெங்கு தெரியுமா?
Polls Caste Census: ஒரு பக்கம் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதேநேரம் தேர்தல், தமிழ்நாடு? - எங்கெங்கு தெரியுமா?
Thug Life: என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க? கமலின் தக்ஃலைப்பை கும்பலோடு கும்பலாக தாக்கிய பாஜக!
Thug Life: என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க? கமலின் தக்ஃலைப்பை கும்பலோடு கும்பலாக தாக்கிய பாஜக!
சாய் சுதர்சனின் ஆட்டத்திறமைக்கு காரணம் என்ன?..நிபுனர்கள் சொல்வது இதுதான்
சாய் சுதர்சனின் ஆட்டத்திறமைக்கு காரணம் என்ன?..நிபுனர்கள் சொல்வது இதுதான்
Putin Vs Ukraine: “பதிலடி கொடுத்தே ஆகணும்“ ட்ரம்பிடம் கூறிய புதின் - ரஷ்யாவின் அடியை தாங்குமா உக்ரைன்.?!
“பதிலடி கொடுத்தே ஆகணும்“ ட்ரம்பிடம் கூறிய புதின் - ரஷ்யாவின் அடியை தாங்குமா உக்ரைன்.?!
ஆல்கஹால், கஞ்சா, பெண் எல்லாமே போதை.. ஓபனாக பேசிய ஜெயிலர் பட வில்லன்!
ஆல்கஹால், கஞ்சா, பெண் எல்லாமே போதை.. ஓபனாக பேசிய ஜெயிலர் பட வில்லன்!
Embed widget