Engineering Admission: முன்னெப்போதும் இல்லா அளவு அதிகரித்த பொறியியல் சேர்க்கை; இன்று வெளியாகும் ரேண்டம் எண்!
Tamil Nadu Engineering Admission 2026: மே 3ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், ஜூன் 5ஆம் தேதி வரை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நடந்து முடிந்தது.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த முறை கணிசமான அளவு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 2026- 27ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கு மொத்தம் 3,02,373 மாணவ - மாணவியர் விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதில் பதிவு செய்து பதிவுக் கட்டணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,45,220 ஆகும். இதில் பொதுப் பிரிவினர் - 2,42,909 ஆவர். அதேபோல தொழிற்கல்விக்கு 2,311 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
50 ஆயிரத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர்கள்
அதேபோல அரசு பள்ளியில் பயின்ற மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் 7.5% இடஒதுக்கீட்டு பதிவு செய்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை - 50,373.
இதில் பொதுப் பிரிவினர் - 49,774
தொழிற்கல்வி - 599
இதில் பாலின வாரியாக ஆண்களின் எண்ணிக்கை - 24,742
பெண்களின் எண்ணிக்கை - 25,628
மூன்றாம் பாலினத்தவர்- 3
ஆக மொத்தம் 50,373 அரசுப் பள்ளி மாணவ மாணவியர் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்து உள்ளனர். முன்னதாக மே 3ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், ஜூன் 5ஆம் தேதி வரை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நடந்து முடிந்தது.
இன்று வெளியாகும் ரேண்டம் எண்; தரவரிசைப் பட்டியல் எப்போது?
ரேண்டம் எண் இன்று (ஜூன் 10) வெளியாக உள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் ஜூன் 29ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கலை, அறிவியல் படிப்புகளில் சேர 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில், ஜூன் 18ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளில் அரசு இட ஒதுக்கீட்டில் சேர இந்த கலந்தாய்வில் பங்குபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
110 இடங்களில் பொறியியல் சேர்க்கை சேவை மையம்
இணையதள வசதி இல்லாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ள உதவுவதற்காக தமிழ்நாடு முழுவதும் 110 இடங்களில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதன் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு
மாணவர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டி பத்து இணைப்புகளுடன் கூடிய அழைப்பு மையம் தொழில்நுட்பக் இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
1800-425-0110 என்ற எண்ணிலும், tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்























