மேலும் அறிய

TN Students : அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளி மாணவர்கள்; பொதுத்தேர்வு எழுத முடியுமா?- வெளியான தகவல்

அங்கீகாரம் பெறப்படாத தனியார் பள்ளி மாணவர்கள், இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என அரசுத் தேர்வுகள் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

அங்கீகாரம் பெறப்படாத தனியார் பள்ளி மாணவர்கள், இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என அரசுத் தேர்வுகள் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை அடுத்து, 2022- 23 ஆம் கல்வி ஆண்டு தாமதமில்லாமல் திட்டமிட்டபடி ஜூன் மாதத்தில் தொடங்கியது. வழக்கம்போல நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில் தமிழ்நாட்டு மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புமாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. குறிப்பாக 12ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 7,600 பள்ளிகளில்,  8,51,482 மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத உள்ளனர். 11ஆம் வகுப்புத் தேர்வை 7,87,783 மாணவர்கள் எழுத உள்ளனர். மார்ச் 14ஆம் தேதி இவர்களுக்குத் தேர்வு தொடங்கும் நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை

10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தொடங்குகின்றன. ஏப்ரல் 20ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், 9,38,067 பேர் 10-ம் வகுப்பு தேர்வை எழுத உள்ளதாக இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது. 

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்வினை பள்ளி மாணவர்கள் சுமார் 27 லட்சம் பேர் எழுத உள்ளனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியாக உள்ளது. 

பொதுத்தேர்வு எழுதுவதில் எந்த சிக்கலும் இருக்காது

இந்த நிலையில் அங்கீகாரம் பெறப்படாத தனியார் பள்ளி மாணவர்கள், இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என அரசுத் தேர்வுகள் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.


TN Students : அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளி மாணவர்கள்; பொதுத்தேர்வு எழுத முடியுமா?- வெளியான தகவல்

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அங்கீகாரம் இல்லாமல் சில தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அங்கு படிக்கும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி இல்லை என்று  ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அங்கீகாரம் பெறாத பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத எவ்வித சிக்கலும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு அனுமதி

மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, வேறு பள்ளிகள் மூலமாக அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று அரசுத் தேர்வுகள் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதுவதற்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதேபோல எத்தனை பள்ளிகளை அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருகின்றன என்பது குறித்துக் கணக்கெடுக்கும் பணியும் நடந்து வருகிறது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Embed widget